Jump to ratings and reviews
Rate this book

காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன்

Rate this book
திருமணம் வேண்டவே வேண்டாம் என்றுபிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த திலோத்தமா சித்தரஞ்சனைப் பார்த்தவுடன் சம்மதித்து விட்டாள். திருமணமும் சிறப்பாக நடந்தது.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக திலோத்தமாவுக்கு ஏதோ நெருடியது. சித்தரஞ்சன் எதையோ மனதில் வைத்துக் கொண்டு வேண்டுமென்றே அவளை அவமானப்படுத்துவது போல் உணரத் தொடங்கினாள்..நிலைமை மோசமாகிக் கொண்டே போயிற்று.சித்தரஞ்சன் மாறுவானா ?

178 pages, Kindle Edition

First published April 1, 2010

11 people are currently reading
17 people want to read

About the author

Ramani Chandran

273 books529 followers
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.

She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.

She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
24 (33%)
4 stars
22 (30%)
3 stars
15 (20%)
2 stars
6 (8%)
1 star
5 (6%)
Displaying 1 of 1 review
2,121 reviews1,109 followers
May 26, 2018
உதட்டில் இருந்து உதிக்கும் சொல் ஆட்களுக்கு ஏற்ப அவர்களின் புரிதலுக்கேற்ப அர்த்தம் கொள்ளப்படும்.

திருமணத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த திலோத்தமை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்த சித்தரஞ்சனே பெண் கேட்டு வந்ததால் மகிழ்வுடன் திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள்.

குழந்தையைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற கட்டாயத்துடன் மணந்து கொண்டவன் புதுவாழ்வின் அனைத்து இன்பத்தைக் கொடுத்தாலும் ஏதோ ஒரு குறை திலோத்தமைக்குத் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

தான் யார் என்று தெரியாமலே மூன்று வருடத்திற்கு முன்பு தன்னைக் காதலித்தவள் எதிர்கால வாழ்க்கைக்கு அவன் வேறு வேலை தேட வேண்டும் என்று சொன்னதைக் கேட்டு பணத்திற்காக அவள் அலைபவள் என்று நினைத்து பிரிந்து போனவன் அவளின் நினைவு தொடர்ந்து துரத்துவதால் தேடி மணந்தது மட்டுமில்லாம் விவாகரத்து எந்த நேரத்திலும் கேட்பேன் என்று அவளைத் துடிக்க வைக்கிறான் சித்தரஞ்சன்.

தன் பக்க நியாயத்தை எதுவும் கேட்காமல் தண்டனையை மட்டும் கணவன் கொடுத்துக் கொண்டு இருக்கான் என்று துவண்டு போனவள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொண்டு எங்கே குழந்தையை அழித்துவிடுவானோ பயந்து வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
மனைவியின் பிரிவு அவள் இல்லாத நொடியில் தவறில்லாத அவளின் பக்கம் அவனுக்கு உணர்த்திவிடுகிறது.மன்னிப்பை யாசிக்கும் கணவனை அரவணைத்து செல்கிறாள் திலோத்தமை.

Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.