Jump to ratings and reviews
Rate this book

வெண்முரசு #21

வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி

Rate this book
இருட்கனி என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். வெண்முரசின் இருபத்தொன்றாவது நாவலான இது மகாபாரதப்போரின் இறுதியைச் சொல்லத் தொடங்குகிறது. கருமை இங்கே இருளெனத் துளித்துவிட்டிருக்கிறது. குருஷேத்ரக் கொலைக்களத்தில் குருதியெனும் அந்தியில் கதிரவன் மைந்தன் மறையும் காட்சியுடன் நிறைவடையும் இந்நாவல் மானுடவாழ்க்கையின் உச்சகணங்கள் சிலவற்றைச் சொல்கிறது. பிறக்கும் கணம் முதல் அடையாளங்களை எடையெனச் சுமந்த ஒரு மாவீரன் தன்னை அவை ஒவ்வொன்றிலிருந்தும் விடுவித்துக்கொண்டு தன்னைத் தானே வரையறை செய்து களத்தில் ஓங்கி நின்றிருக்கும் கதை.

இருட்கனி – வெண்முரசு நாவல் வரிசையில் இருபத்தொன்றாவது நாவல்.

Hardcover

Published January 1, 2019

1 person is currently reading
63 people want to read

About the author

Jeyamohan

209 books845 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
21 (80%)
4 stars
4 (15%)
3 stars
1 (3%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
November 26, 2023
வெண்முரசு என்னை மிகவும் துன்புறுத்துகிறது. இதை தொட்டிருக்கவே கூடாதோ என்ற எண்ணம் கூட எழுகிறது.

இப்படைப்பின் வழி நான் நிறைய கற்றேன், அதில் மாற்றுக்கருத்தே இல்லை. பல திருக்காட்சிகள், பல திறப்புகள்... ஆனாலும் சிலவற்றை செரிக்கவே முடியவில்லை.

அறம் என்று இங்கு நிறுவப்படும் பலவற்றின் மேல் எனக்கு கேள்விகள் எழுகின்றன. ஐயங்கள் சூழ்கின்றன.

இப்படைப்பில் நல்லவர்கள் என்று முன்வைக்கப்படும் அனைவரும் மிகவும் தீயவர்களாக இருக்கிறார்கள். அதேபோல் தீயவர்கள் என்று சுட்டிக்காட்டப்படும் பலரும் எனக்கு நல்லவர்களாகவே தோன்றுகிறார்கள்.

வென்றவர்களால் வரையறுக்கப்படுவதுதான் அறமா?... ஏனோ என் உளம் வீழ்ந்தவர்கள் பக்கம் சென்று நிற்கவே விழைகிறது.

*************

இதுவரை நான் படித்த மகாபாரதக் கதைகளில் சல்யர் தன் பெயருக்கு தகுந்தார் போலவே கர்ணனுக்கு தேரோட்டியிருக்கிறார். முதன்முறையாக அவர் இருட்கனியில்தான் தந்தையென்றாகி தேரோட்டியிருக்கிறார்.
செயமோகன் அவர்கள் சல்யருக்காகவோ அல்லது கர்ணனுக்காகவோ சற்று கனிந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

சல்யர், தந்தையாக அவர் உணர்ந்த கீதையை போரிடையில் மகனுக்கு கற்பிக்க முயல்வது மிகவும் அருமையாக இருந்தது.

பாண்டவர்களுக்கு அவர் கொடுத்த சொல்லை கூட தன் மகனுக்காக மிக எளிதாகக் கடக்கிறார். தன் மகனை கெடுத்துவிட்டாள் என்று குந்தியை வசைபாடுகிறார். தாயே, தந்தை யார் எனக் கூறாத போது, நானே உன் தந்தை என அறிவிக்கிறார்.

இறுதியில் அவர் தேர்தெளிக்க மறுத்து கர்ணனைவிட்டு செல்வது கூட சினத்தாலோ, வெறுப்பாலோ அல்ல, தன்னுள் ஊற்றெடுத்த பேரன்பினால்தான். தன்னுடைய மைந்தனின் கடனால் தன் பெயர்மைந்தர்கள் இறப்பதை பார்த்த பின், ஒரு தாதையாக களம் நீங்குகிறார். வாழ்க, தந்தை சல்யர்!
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.