வழக்கமான கவிதைமொழியிலிருந்து விலகி புதிய பாணியில் எழுதப்பட்ட அசலான கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. வித்யாசமான கூறுமுறைகளை, பேசுபொருள்களைக் கொண்டிருக்கும் கவிதைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. நல்ல கவிதைகளைத் தேடிப் படிப்பவர்களுக்கு உகந்த தொகுப்பு இது.
கவிஞர். அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சமயம், பெண்ணியம், பண்பாட்டியல் ஆகிய துறைகள் சார்ந்து ஆய்வு செய்துவருகிறார். Journal of Asian Studies, Anthropological Quarterly போன்ற இதழ்களிலும் கல்வித்துறை சார்ந்த ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பு நூல்களிலும் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. காலச்சுவடு, காலக்குறி ஆகிய தமிழ் இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது வாசிப்பும் எழுத்தும் என்று நம்பும் பெருந்தேவி, சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாடகம் ஆகியவற்றிலும் ஈடுபாடுகொண்டவர்.
பகடிகள் நிறைந்த அருமையான கவிதைகள். வாசிக்கும் போதே பல கவிதைகள் சிரிப்பையும், கூடவே பெருந்தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. நல்ல வாசிப்பு அனுபவம். பெருந்தேவி கவிதைகள் அனைத்தையும் தேடிப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தருகிறது.