வேம்பலையின் மீது படர்ந்திருப்பது யாராலும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவு. தலைமுறைகளாக இக்கனவைக் கடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாதைகளும் ஏக்கங்களும் நிலைகொள்ள முடியாத தத்தளிப்புகளும் ஆசாபாசங்களின் இருளும் வெளிச்சமும் இந்நாவலில் முடிவற்ற குருதிப் பெருக்காகின்றன. பொருளற்ற வாழ்வும் மரணமும் தங்கள் வசியக் குரலால் வேம்பலையை நோக்கி மனிதர்களை அழைத்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு பிரமாண்டமான கனவின் திரைமீது அறியப்படாத யதார்த்தம் ஒன்றை எழுதுகிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இந்நாவல். வாசகர்களின் பெரும் கவனத்திற்கும் தீவிர வாசிப்பிற்கும் உரியதாக இருந்த நெடுங்குருதி இப்போது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
கரிசல் பூமியின் நிலத்தோடும் பருவங்களோடும் குணத்தோடும் பிணைக்கப்பட்ட வாழ்வுகளின் வரலாறாக நெடுங்குருதி நீள்கிறது. நிகழ்வுகள் ஒன்றன் மீது ஒன்றாக நிதானமாக அடுக்கப்பட்டு பெரும்பாலும் நேர்கோட்டில் கதை செல்கிறது. உணர்ச்சி வசம் பெரிதும் இல்லாமல், கிராம வாழ்க்கையின் வறுமையும் வெறுமையும் துயரமும் போராட்டமும் வன்முறையும் கனவுகள் கை கூடாத வெறித்த மனநிலையும் இங்கு இயல்பாகப் பிரதிபலிக்கின்றன. பருவநிலைகள் நம் வாழ்வின் மீது செலுத்தும் ஆதிக்கம் இங்கு நேர்த்தியான விவரிப்பில் வெளிக்கொண்டுவரப்படுகிறது. குறிப்பாக வெயிலைப் பற்றிய விவரனைகள் அபாரம். நாட்டாரியல் கதைகளும் நம்பிக்கைகளும் கலாச்சாரமும் கதையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மாய யதார்த்தம் அவ்வப்போது கதைக்கு ஒரு கூடுதல் பரிமாணத்தை ஏற்றுகிறது. பல திசைகளில் கதை செல்வதால் வாசிப்பனுபவம் நிலையற்றதாக அமைகிறது. குறிப்பாக நடுப்பகுதி சுவாரஸ்யம் இன்றி அயர்ச்சி அடையச் செய்கிறது. கரிசல் வாழ்வில் காலத்தின் பாய்ச்சலை அறிய, தோரணங்கள் பெரிதும் இல்லாத அலட்டிக் கொள்ளாத ஒரு எதார்த்த அனுபவம் நெடுங்குருதி.
இந்த புதினத்தை வாங்குதவற்கு முதலில் இரண்டு காரணங்கள். ஒன்று எழுத்தாளர் எஸ்ரா. காவல் கோட்டம் நாவல் வெளியானபோது அதனைப்பற்றி கருத்துக்களை சொன்னவர்களில் முக்கியமானவர் எஸ்ரா. காரணம் இவருடைய காவல் கோட்டம் பற்றிய கருத்து மிக மிக கடுமையாக சு. வெங்கடேசனை சாடுவதாக இருந்தது. குறிப்பாக அவருக்கு எழுத்தாளுமை இல்லை என்றும், ஆயிரம் பக்கங்களுக்கு ஒரு அபத்தம் என்ற தலைப்பில் எஸ்ராவின் இணையத்தில் கடுமையாக சாடியிருந்தார். இன்னொரு காரணம் இந்த புதினம் காவல் கோட்டதோடு ஒப்பிடப்பட்டிருந்தது. குற்றப்பரம்பரை பற்றிய நாவல்களில் கா.கோ விட சிறப்பான நாவல்கள் உள்ளன என்றும் அதற்கு உதாரணமாக இந்த நெடுங்குருதி நாவல் குறிப்பிடப்பட்டது.
உண்மையில் காவல் கோட்டம் மிக அருமையான வரலாற்று நாவல், அதில் எள்ளளவும் ஐயமில்லை. முக்கியமாக வரலாற்றை கூறுவதில் ஒரு ஊரை மையமாகவும் அங்கு நடந்த உண்மை நிகழ்வுகளை வரலாற்றோடு பிணைந்து தருவதும் புதுமையல்ல என்றாலும் படிப்பதில் எந்த ஒரு சலிப்பும் கா.கோ ஏற்படுத்தவில்லை. அதேபோல் நெடுங்குருதி இருக்கும் என் நினைத்து படிப்பதில் பெரும் ஏமாற்றத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன். இன்னும் முழுமையாக படிக்கவில்லை என்றாலும், 100 பக்கம் தாண்டுவதற்குள் பல முறை நெடுங்குருதியில் ஆர்வம் குறைய, படிப்பதை நிறுத்திவிட்டு, கல்கியின் பொன்னியின் செல்வனை படிக்கலாம் என தோணுகிறது. இருந்தாலும், ஒரு புத்தகம் முடியும் வரை வேறு ஒரு புத்தகத்தை தொடக்கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் இன்னும் இந்த நாவலை படித்து கொண்டிருக்கிறேன்.
இதுவரை இந்நாவலில், வேம்பலை எனும் ஊரில் உள்ள ஒரு சிறுவனின் குடும்பம், மற்றும் அங்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் நடந்த களவுகளும் அதற்கு பதிலடியாக வெல்சி என்ற ஆங்கில அதிகாரி எடுத்த போரும் கடந்துள்ளது. சில இடங்களில் நாவலின் கதை உயிரற்று சடலமாக எந்த ஒரு புரிதலையும் ஏற்படுத்த மாறுகிறது. உதாரணமாக அச்சிறுவன் நாகுக்கு அம்மை போட்டு பேசாமலிருப்பதால் குடும்பமே வருந்தும். ஆனால் ஓரிரவில் அவன் தன தாயிடம் பசிக்கிறது என சொல்லும்போது, நமக்கு சந்தோசம் உண்டானாலும், அந்த தாய்க்கோ அல்லது எஸ்ராவின் எழுத்துக்கோ அந்த சந்தோசம் துளியளவும் இல்லை. அந்த சம்பவம் மிக சாதாரணமாக கடந்துவிடும். அதேபோல 100 பக்கங்களை தாண்டியும் இன்னும் இந்த நாவல் எதை பற்றி சொல்ல போகிறது என்ற ஒரு தடயமும் விளங்கவில்லை. வேம்பலை ஊரை பற்றியா, அங்கு வாழும் மக்களை பற்றியா, இல்லை அங்கு நடந்த உண்மை சம்பவம் பற்றியா, என ஒரு தடயமும் விளங்கவில்லை. 400 பக்கங்கள் கொண்ட நாவலில் 100 பக்கம் தாண்டியும் கதையின் கருவை தேடுவது புதிதாக உள்ளது. அதேபோல அளவுக்கு அதிகமான கற்பனைகளையும், காட்சிகளை பற்றிய கற்பனை விவரிப்பு ஒரே மாதிரியா நிறைய இடங்களில் இருப்பது மிகப்பெரும் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
1000 பக்கங்கள் கொண்ட கா.கோ கைகளில் கணக்கவில்லை, ஆனால் இந்த சிறிய நெடுங்குருதி நாவல் வெறும் 400 பக்கம் வரை இருந்தாலும் கையில் கனக்கிறது. காரணம், இந்த நாவலின் கருவை தேடியலைவது தான். முழுவதும் படித்து முடித்த பின் முக்கிய குறிப்புகளை இங்கு பதிவு செய்ய வேண்டும்,
காவல் கோட்டத்தையும், குற்றப் பரம்பரையையும் படித்த பின் இந்த நாவலும் இது போன்ற ஒரு களத்தில் அமைந்திருந்த காரணத்தின் பெயரால் வாசிக்க ஆரம்பித்தேன். எஸ்.ரா அவர்களின் கதை சொல்லும் விதமும், கதை மாந்தர் கையாடலும் மிகவும் வேறாக இருக்கும் என்பதை மீண்டும் அறிந்து கொண்டேன்.
ஒரு வேலை அந்த இரண்டு நாவல்களையும் படிக்காமல் படித்தால் வேறு ஒரு வேகத்தை ஆரம்பம் முதல் எடுத்திருக்கும் என்பது போக போக புரிந்தது. சரி மீண்டும் புத்தகங்கள் ஒன்றை ஒன்றை சார்பாக இருக்கும், ஆயினும் ஒன்றாகவே கதை காலம் மற்றும் களமாடல் இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டு வேம்பலைக்குள் பிரவேசிக்க தொடங்கினேன்.
வெயில் ஓர் ஊரை உலுக்கி, எப்போதுமே மீட்டப்படும் ஓர் நரம்பாய், பேசும் மனிதர்கள் கூட வெயிலையே பேசி, சுவாசித்து, மூன்று தலைமுறை மனிதர்களை அறிமுகம் செய்த படி செல்கிறது இந்த நாவல். வெயிலின் பிடியில் இருக்கும் மனிதர்கள் வேறு மாதிரியான வாழ்க்கையை விரும்பி ஏற்று கொள்கிறார்கள். வேம்பர்கள் எவ்வாறு வாழ்ந்து, வளர்ந்து, வலுவிழந்து சென்றனர் என்பதை பறைசாற்றும் நாவல்.
களவை தொழிலாக கொள்ளும் எந்த ஊரும் மனிதர்களும் வெயிலின் பாலும், அதன் வெறித்தனத்தின் பாலும் கொண்டுள்ள அன்பை, இருளை விரும்பி பருகும் கூட்டமாய் திரியும் வாழ்வை ஆசிரியர் அவர் பாணியில் ஆங்காங்கே தொடர்புபடுத்தி செல்கிறார்.
இதையெல்லாம் தாண்டி இந்த நாவலில் என்ன இருக்கிறது? மரணத்தின் நிழல் எப்போதுமே தொடர்கிறது. மரணம் என்ற நிகழ்கால பயத்தை, ஒவ்வொரு நொடியும் சட்டென்று நினைவில் நிறுத்தி யோசிப்பதற்குள் அடுத்தடுத்து மரணங்களின் சாயல் வேம்பலையின் நீரற்று கிடக்கும் சாலை வழி பயணிக்கிறது.
நாகு, நீலா அக்கா, வேணியக்கா, நாகுவின் அய்யா, நாகுவின் அம்மா, ரத்னாவதி, மல்லிகா, பக்கீர், பக்கீரின் மனைவி, ஆதிலட்சுமி என்று ஆரம்பித்த கதை ஒவ்வொரு புறமாய் நீள்கிறது. ஒற்றை பனை ஆரம்பித்து வைக்கும் ஊர் பரந்து விரிந்து நம் மனதில் சற்று கனக்க தான் செய்கிறது.
அடுத்த தலைமுறையில் வரும் திருமால், வசந்தா என விரிய தொடங்குகிறது கதை. எப்போதும் எளிய மனிதர்களின் இறுக்கமும் சரி, மகிழ்ச்சியும் சரி நம்மை வேறு இடங்களுக்கு பயணிக்க செய்யும். இறுதியில் யாரென்றே தெரியாத சிறுவன் உதிர்க்கும் கண்ணீர், ஜெயராணி திருமாலின் மீது காட்டும் அன்பு, ஒவ்வோர் மரணமும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி செல்லும் கணங்கள் என வேகமெடுத்து முடிந்தது நாவல். இது ஓர��� அனுபவம். சொல்லி விளங்க வைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆயினும்....
பிறந்த கதை, வளர்ந்த கதை, வாழ்ந்த கதை, வீழ்ந்த கதை என்று எஸ்.ரா அனைத்தையும் கண் முன் நிறுத்தி காட்டுகிறார் எஸ்.ரா. எளிய மனிதர்களின் ஆத்மா என்று ஒர் இடுகை (http://kanali.in/s-ra-porutppaduthapa...) உண்டு எஸ்.ரா அவர்களைப் பற்றி. அதில் உள்ளது போல எளிய மக்களின் வாழ்வை மீண்டும் மீண்டும் சொல்லுவதாலோ என்னவோ, மேலும் அவர் புத்தகங்கள் என்றுமே ஈர்ப்பாய் உள்ளது.
துணைஎழுத்து தான் நான் எஸ் ராமக்ரிஷ்ணன் படைப்பில் முதலில் வாசித்தது அது ஏற்படுத்திய பாதிப்புதான் இந்த நெடுங்குருதி நாவல் வாங்க தூண்டியது ஆனால் கதை ஆரமபிதத பல பககஙகள கதையின கருவை கணடுபிடிகக சிரமமாக உளளது ...more
This novel is about Vempalai, an imaginary village in the Southern parts of Tamil Nadu and the people who populate it. In depicting “Vempalai”, a village cursed by a criminal past and a dry climate, the tone of Ramakrishnan is more melancholic than melodramatic. S. Ramakrishnan's style is realistic and he has successfully captured the rustic life of a village life which is crumbling due to various reasons like death of agriculture, water scarcity and creeping urbanisation. Though the village he created is an imaginary one, Ramakrishnan's characters are real people who are beaten by weather, customs and authorities. And as he himself mentions the characters are imbued with an indomitable spirit as they always strive to surmount all their adversaries. Though some of them fail to break the invisible fate, others carry on their struggle. In this novel, Naghu is one of the characters who is beaten by the system. But his son Thirumalai , unaware of his past moves on. There is a lingering sadness when he leaves the town where he was brought up. But Naghu's daughter Vasantha returns to the village of her father to start a new life. Thus, there are contrary pulls of life where one is driven away by bad memories of his home while the other is drawn back to her roots. It is to the credit of Ramakrishnan that he gives life to the characters set in an imaginary village with his realistic writing and a keen eye for the nature. Thus we can feel the heat of a parched land thirsting for water or get caught up in howling and hooting winds and can be drenched in a heavy rain. Even a Neem tree becomes a character taking life and standing as a witness to the happenings in the village. There is a lingering sadness in his writing of villages losing their characteristics and the changes wrought by time of the landmarks of the places. His imaginary village remains unchanged in spite of ravages of the weather and the desertion of the people. And he creates a mirror village of that village populated by only the dead. But, there is hope in the words of Vasantha who wants to rebuild her life in her father's place. This novel by Ramakrishnan will stand as one of the best Tamil Novels.
நீண்ட நாளாக தீர்ந்து போகும் என்று கரும்பை ஒளித்து வைத்த சிறுவன்போல் இந்த புத்தகத்தை உள்ளே வைத்திருந்தேன்... இன்றும் இனித்தது... நாம் சிறு வயதில் போன சிறு பொழுதுகள் ஒரு கதையாய், விரியும் ஒரு அற்புத ஆற்றல் எஸ்ராவுக்கு உண்டு. ஒரு காணாமல் போன சமூகத்தை அப்படி சில சம்பவங்களின் தொகுப்புகளால் நீண்ட காவியமாக்கியிருக்கிறார்.