வடசென்னைக்காரரான ஷாலின் மரிய லாரன்ஸ் மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் எழுத்தாளர், பேச்சாளர். கடந்த 4 வருடங்களாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினருடனும் திருநங்கைகளுடனும் பணியாற்றி வருகிறார். வடசென்னை வியாசர்பாடி குழந்தைகள் மற்றும் பெண்கள் மத்தியில் பணியாற்றுபவர். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு “பெண்கள் மீதான வன்முறை” மற்றும் “தலைமை பண்புகள்” குறித்து இரண்டு வருட காலமாகப் பயிற்சியளித்து வருகிறார். பெண்ணியம், சாதிஒழிப்பு ஆகிய தளங்களில் பலமாக இயங்கிவருபவர். குமுதம், கைத்தடி போன்ற நாளிதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வருபவர்.