‘‘விவசாயம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செய்யப்படும் தொழிலாக்கப்படவேண்டும்’’ ‘‘நிலங்களை கூட்டுப்பண்ணை முறையில் பயிர்செய்யவேண்டும்’’ ‘‘நிலங்களைப் பங்கிடும்போது சாதி, மத வேறுபாடுகளைப் பார்க்கக்கூடாது’’ ‘‘அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து அதிகபட்சமாக பத்து ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டத்தைக் கண்டிப்பாக நிறைவேற்றியே தீரவேண்டும்.’’ 1947 இன் துவக்கத்தில் அம்பேத்கர் எழுதி அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் கண்டிருந்த வாசகங்கள் இவை. விவசாயம் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. கூட்டுப்பண்ணையும் அமைக்கப்படவில்லை என்பது மட்டுமின்றி இதுī
புத்தகத்தின் தலைப்பு சொல்வது போலவே தலித் மக்களுக்கு ஆங்கில அரசாங்கம் பஞ்சமி நிலங்களை வழங்கியதன் பின்னணிக் காரணங்களை, முக்கிய வரலாற்று நிகழ்வுகள் வழியே 50-60 பக்கங்களில் எளிமையாகத் தொகுத்தளிக்கும் புத்தகம்.
மேலும் ஆதிக்க சாதியினரால் பஞ்சமி நிலங்கள் பறிக்கப்பட்டபோது தலித் மக்கள் அதை எதிர்த்து நடத்திய சட்டப் போராட்டங்களையும், அதில் அவர்களுக்கு ஆதரவாகக் கிடைத்த மூன்று முக்கிய தீர்ப்புகளின் பின்னணிகளும் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ள முக்கியத் தகவல்களும், வரலாற்றுச் சான்றுகளுமே இப்புத்தகத்தை எழுத ரவிக்குமார்(விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கும் சிரத்தையை உணர்த்துகிறது.
இது ஒரு ஆராய்ச்சி கட்டுரை என்றே சொல்ல வேண்டும். தலித்துகளின் போராட்டம், அவர்களுக்கு நீதி வழங்கும் விதமாக அன்றைய (1900s)அளித்த பஞ்சமி நிலம் பற்றிய வரலாறு, அந்நிலத்துக்காக இன்றும் நடத்தப்படும் போராட்டம் பற்றிய கட்டுரை.
ரவிக்குமார் அவர்களால் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் பஞ்சமி நில வரலாறு எழுதப்பட்டுள்ளது. மிராசி முறை, பஞ்சமி நிலம் பற்றி விரிவான புரிதல்களை இப்புத்தகம் அளித்தது. மாவட்ட வாரியாக பஞ்சமி நில அளவை ஆதாரங்களுடன் வழங்கியிருப்பது மிகவும் சிறப்பு. பஞ்சமி நிலம் சார்ந்த 3 உயர்நீதி மன்ற தீர்ப்புகளை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது பஞ்சமி நிலம் பற்றிய துல்லியமான புரிதலை ஏற்படுத்தும்.
மிகவும் எளிய நடையில் பஞ்சமி நில வரலாற்றை புரிந்துகொள்ள ஒரு முதல் படி எனும் அளவில் இப்புத்தகம் முக்கியமானது.
ஆரிய பிராமணீய நூலான மனுஸ்மிருதி எனும் அதர்ம நூலின்படி மக்களை அது பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என நான்காக பிரிக்கிறது. இந்த நான்கு வர்ணத்திலும் வராத ஐந்தாவது குழுவை அவர்ணராக பஞ்சமராக குறிப்பிடுகிறது.
இந்த பஞ்சமர் என்று அழைக்கப்பட்டு தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளான பட்டியலின மக்களுக்கு அவர்களின் மேம்பாட்டிற்கு விவசாயம் செய்து பிழைக்க ஆங்கிலேயர்கள் காலத்தில் பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முதல் சுதந்திர போராட்டம் என்றால் நினைவுக்கு வருவது "1857 சிப்பாய் கழகம்". ஆனால் அதற்கு முன்பே தமிழ்நாட்டு தலித்துகள் நிலம், பொருளாதாரம் சார்ந்த அடிப்படை உரிமைகளுக்காக "பறையர் கலகம்" நிகழ்த்தியுள்ளனர்.
பிரிட்டிஷ் காலத்தில் மிராசுதார்களான நிலவுடைமையாளர்கள் எப்படி தலித்துகளின் நிலங்களை கைப்பற்றினர், செங்கல்பட்டு கலெக்டர் J. H. A. Tremenheere பறையர்களுக்காக நிலமீட்பு ஆதரவாக இருந்தது, பஞ்சமி நிலம் உருவானது, தமிழக அரசு எப்படி நிலங்களை மீட்டது, இதனால் நடந்த வழக்குகள் மற்றும் தீர்ப்புகள், இன்றைய பஞ்சமி நிலத்தின் நிலை என்று இந்த புத்தகம் விரிவாக பேசுகிறது.
பெரும்பாலும் நமக்கு தெரியாத ஒரு கருப்பு சரித்திரம் தான் இந்த பஞ்சமி நிலம். அவசியம் படிக்கச் வேண்டிய ஒன்று
Honestly, i really don't know what is Panchami land before reading this short article. It gives you an overview and clear background of what is Panchami land and why those are allocated for Dalits by British.
நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு நிலம் கொடுக்கும் முன்னெடுப்பை பிரிட்டிஷ் அரசு தொடங்கி வைத்த நல்லதொரு திட்டம் தான் பஞ்சமி நில ஒதுக்கீடு . இப்புத்தகம் முழுவதுமே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலவரலாற்றை ஆராய்வதாக உள்ளது . இதன் காலம் பிரிட்டிஷ் ஆட்சியர்களின் பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கி சமகாலம் வரை நீளுகின்றது . அதற்கான இரண்டு நூற்றாண்டு போராட்டங்களின் விபரங்களை இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது நல்ல விடயம் . இன்றும் கூட பஞ்சமி நிலங்கள் பதிவேடுகளிலும் நீதிமன்ற தீர்ப்புகளிலும் சாதகமாக வெளிவந்து இருந்தும் அதை மீட்டெடுக்க முன்வராத அரசுகளை பற்றிய குறிப்புடன் முடிவடைகின்றது .
தலித் மக்களின் பஞ்சமி நிலத்துக்கு ஒரு முன்னுரை ! சுதந்திரம் அடைந்து 70 வருடங்களுக்கு மேல் ஆகியும், இதற்கு தீர்வு எடடாது வருத்தம் அளிக்கிறது. அவசியம் படிக்கவும்.
While there are arguments posed on both sides of the Panchami land issue, this book gives the right perspective through the historical narrative. Wouldn’t call it a book though, a long essay.
Comprehensive, informative book on the panchami lands issue. Explained with all possible references and important historical contexts and facts. Must read
300 years of story explained in few pages with scholarly references! Knowing the unjust practices of the past helps us to identify the similar ones of today.
பஞ்சமி நிலம் என்றால் என்ன? - அதன் பெயர்க்காரணம், வரலாறு மற்றும் இன்றைய நிலையை சுருக்கமாக, முக்கிய வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு விளக்கியுள்ளார் ஆசிரியர்.
தமிழகத்தின் விவசாயம் என்ன, அதை யார் செய்தனர், எவ்வாறு செய்தனர், மற்றவர்களை ஏன் செய்ய விடவில்லை, எவ்வாறு தடுத்தனர், மிராசி என்றால் என்ன, பட்டாவிற்கும் நில உரிமைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதைப் பற்றிய புரிதல் கிடைக்கும்.
இதில் தலித் இனத்தவரின் பங்கு என்ன, அவர்களுக்கு ஏன் நிலம் மறுக்கப்பட்டது, அதை அவர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும், அதற்காக யார் போராடினார், எவ்வாறு அலைக்கழிக்கப்பட்டனர் என்ற கேள்விகளுக்கும் தெளிவான விளக்கம் உள்ளது.
அவர்களுக்கு நிலம் யாரால் எங்கு கொடுக்கப்பட்டது, அதில் ஏற்ப்பட்ட சுரண்டல் பிடுங்கள் என்னென்ன, ஆங்கிலேய அரசு செய்த உதவி யாவை, அதற்கான காரணம் மற்றும் பலன்கள் என்ன என்பதையும் பல சம்பவங்களையும், புத்தகங்களையும் மேற்கோள் காட்டி விளக்கமாக எழுதியுள்ளார்.
வரலாறு குறித்து விளக்கமாக எழுதியுள்ளதைப்போல், இன்றை நிலையை விளக்கிக் கூறவில்லை. முக்கிய சட்டங்கள் என்ன அதன் பின்புலம் என்ன என்பதோடு நிறுத்திவிட்டு, மீதியை அரசுக்கு கேள்வியாக வைத்துள்ளார்.
தலைப்பை பற்றிய மேலோட்ட பார்வைக்கு இப்புத்தகம் பயன்படும்.
பஞ்சமி நிலங்களைப் பற்றிய ஓர் எளிய அறிமுகத்தை இந்நூல் அளிக்கிறது. நீதிமன்றங்கள் (குறிப்பாக நீதியரசர் கே.சந்துரு) பஞ்சமி நிலங்கள் குறித்து பல்வேறு வழக்குகளில் அளித்த தீர்ப்புகளைச் சுருக்கமாக விளக்கியுள்ளது.
ஆனால், பல்வேறு கருத்துகள் ஒரு கோர்வையாகத் தொகுக்கப்படாமல் ஆங்காங்கே எழுதப்பட்டுள்ளதைப் போன்றதோர் உணர்வு ஏற்படுகின்றது.