போலி அறிவியல் மாற்று மருத்துவம் மூட நம்பிக்கை - டாக்டர் சட்வா
இன்னிக்கு உலகம் ஒரு பெருந் தொற்றின் பிடியில சிக்கித் தவிச்சிக்கிட்டு இருக்கும் காலகட்டத்துல சமூகத்துல கலந்திருக்க கூடிய போலி அறிவியல் மாற்று மருத்துவ புரட்டுகளை பத்தியும், மூட நம்பிக்கைகளை பத்தியும் விளக்குறதுக்கு ஒரு சிறந்த புத்தகம் தான் போலி அறிவியல் மாற்று மருத்துவம் மூட நம்பிக்கை...
1950 கள்ல உலகத்தோட மக்கள் தொகை சுமார் 250 கோடி, 2000ஆம் அண்டு வாக்குல உலக மக்கள் தொகை 500 கோடிக்கும் மேல உயர்ந்திருக்கு...50 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை இந்தளவு உயர்ந்திருக்க காரணம் என்னனு உக்காந்து யோசிச்சு பார்த்தா அல்லோபதி மருத்துவம்னு சொல்லக் கூடிய நவீன விஞ்ஞான மருத்துவத்தின் வளர்ச்சியினால தான்!
நம்ம தாத்தா காலத்துல இருந்த வியாதிகளான பெரியம்மை, தட்டம்மை, காலரா, தொண்டை அடைப்பான், பொன்னுக்கு வீங்கி, ப்ளேக், இன்புளுயன்சா, போலியோ முதலான நோய்கள் இப்போ கிடையாது...இதுக்கெல்லாம் காரணம் விஞ்ஞான மருத்துவம் கொடுத்த தடுப்பூசி மற்றும் மருந்துகள் தான்!
அப்படியே இந்தியா பக்கம் வந்தா 1947ல இந்திய சுதந்திரத்தின் போது இந்தியர்களோட சராசரி வயசு 31...இப்போ 2015ல நடந்த கணக்கெடுப்பின் படி சராசரி வயது 68 ஆக உயர்ந்திருக்கு பாதிக்கும் மேல இந்தியர்களோட சராசரி ஆயுட்காலம் உயர்ந்திருக்கு! இதுக்கெல்லாம் காரணம் பழமையான வீட்டு வைத்திய முறைகளையும், மாற்று மருத்துவும் னு சொல்லக் கூடிய ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற மருத்துவமுறைகள்ல இருந்து பெரும்பான்மை இந்திய மக்கள் நவீன விஞ்ஞான மருத்துவம் பக்கம் நகர்ந்தது தான்!
வீட்டுமுறை பிரசவம், கை வைத்தியம், ஹீலர்கள், அக்குபிரசர்/ பஞ்சர் னு இன்னிக்கு இந்த மாற்று மருத்துவத்தோட ஆபத்தான ஆக்டோபஸ் கரங்கள் நிறைய மக்களை நவீன விஞ்ஞான மருத்துவத்துக்கிட்ட இருந்து விலக்கி பெரும் இடர்பாடுகள்ல சிக்க வெச்சிக்கிட்டு இருக்குங்குறத இந்த கொரோனா காலகட்டத்துல ரொம்ப நல்லாவே உணர்ந்திருப்போம்! இந்த மாதிரி எந்த ஒரு நீருபணமும் இல்லாத மருத்துவமுறைகள் எல்லாம் தேன் தடவிய பேச்சின் மூலமா மக்கள்கிட்ட ஈசியா நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுவிடுது!
நவீன விஞ்ஞான மருத்துவம் எப்போதும் result oriented ஆன அனுகுமுறையை பல்வேறு விதமான ஆய்வுகள் மூலம் தீவிரமா ஆராய்ச்சி பண்ணி மருந்துகளை அந்தந்த நோய்களின் குணத்திற்கு ஏற்ப கண்டுபிடிச்சு குடுக்கறாங்க...அதனால நவீன விஞ்ஞான மருத்துவம் ஒரு நிரூபணம் ஆன ஒரு அறிவியலா இருக்கு! இதே மாதிரியான அணுகுமுறை பாரம்பரிய/மாற்று/மரபு மருத்துவம் னு சொல்லக் கூடிய எந்த வைத்திய முறைகள்லயும் கிடையாது...
வீட்டு பிரசவத்தினாலயும், ஹீலர் பாஸ்கர் மாதிரியான அடிப்படை ஆதாரமில்லாத விசங்களை பரப்புறவங்களாலயும் இதுவரைக்கும் பாதிக்கப்பட்டு அந்த பாதிப்பை சரி செய்ய திரும்பவும் நவீன மருத்துவத்தை தேடிப் போனவங்க தான் ஏராளம்!
இந்த மாற்று மருத்துவர்களுடைய முக்கியமான பணியே மக்கள் மத்தியில நம்முடைய முன்னோர்கள் எல்லாரும் அறிவில் சிறந்தவர்கள் அப்படின்னு நம்ப வைக்குறதுல தான் ஆரம்பமாகுது...கூடவே இன்னொரு விசயம் இன்னிக்கு நமக்கு இருக்குற பல வியாதிகள் நம்ம முன்னோர்களுக்கு இருந்ததில்லை... இந்த வியாதிகள் எல்லாம் நவீன மருத்துவம் வேணும்னே உருவாக்கின மாயைன்னு பொய்யை பரப்புறதையும் தான் அடிப்படையா கொண்டிருக்கும்! கேன்சர், சர்க்கரை வியாதியும், இரத்த அழுத்தமும் எல்லாம் பழங்காலத்துல இருந்து மனிதனை பாதிச்சிட்டு தான் இருக்கு! ஆனா பழங்கால சூழல்ல என்னென்ன வியாதிகள் னு கண்டுபிடிக்க முடியாதனால கோடிக்கணக்கான மரணங்கள் நடந்திருக்கு...நவீன விஞ்ஞான மருத்துவத்தின் வருகையால துல்லியமான வியாதிகளை கண்டுபிடிச்சி அதுக்கான மருத்துவத்தை கொடுக்க முடிஞ்சிருக்கு!
அடுத்தது ஆர்கானிக் பொருட்கள்னு சொல்லபட கூடிய மோசடிகளையும் இந்த புத்தகம் தொட்டு பேசியிருக்கு! இன்னிக்கு நிறைய இடங்கள்ல ஆர்கானிக் னு சொல்லிக் கூடிய இயற்கை அங்காடிகள் னு சொல்லி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்கிறோம் ஊர்ல சாதாரணமா குறைந்த விலையில் கிடைக்க கூடிய பொருட்களை பேக்கிங் பண்ணி எக்கச்சக்க விலை வெச்சி விக்கிரத பத்தியும்...இதையே ஒரு Multi level market மூலம் பெரிய பெரிய கார்ப்பரேட்கள் மக்களை மொட்டையடிக்கிறதையும் சொல்லிருக்காங்க!
இதே மாதிரி இன்னிக்கு உலகம் முழுவதும் பரவலா பின்பற்றப்படும் நனிசைவம் என்னும் வீகன் உணவுமுறைங்குற பாடாவதி உணவுமுறையை பத்தின மாயபிம்பத்தை உடைக்கிது இந்த நூல்! பிரிட்டனில் 1850 முதல் 1950 வரைக்கு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் 2017ல வெளியானது அதுல அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக்க கூடிய இன மக்களோட வளர்ச்சி அதிகமாக இருக்குங்குறத கண்டுபிடிச்சிருக்காங்க...அப்படியே இந்தியா பக்கம் வந்தா யுனிசெப் அமைப்பின் புள்ளிவிவரங்கள் இந்திய குழந்தைகளை பாதிக்க கூடிய்ஊட்டச்சத்து குறைபாடு பற்றின கவலையளிக்கும் தோற்றத்தை குடுக்குது! ஆகவே நம்முடைய உணவுமுறையில நாம அசைவத்தை வாரத்துல 3-4 நாள் எடுத்துக்குறது இன்றியமையாத ஒன்று!
இந்��� மாதிரி நம்ம உடல் ஆரோக்கியத்தை பத்தியும், மருத்துவமுறைகளை பத்தியும், சமூகத்துல இருக்கும் தவறான கண்ணோட்டங்களையும் களைகிற ஒரு புத்தகமாக போலி அறிவியல் மாற்று மருத்துவம் மூட நம்பிக்கை இருக்கிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை! இந்த பெருந்தொற்று காலத்தில் நண்பர்கள் இந்த நூலை வாசிப்பது மிக பொருத்தமான விருசமாக கருதி இதை பரிந்துரைக்கிறேன்!