ஹாய் நட்பூஸ். நான் அனிதா ராஜ்குமார். "என்ன தவம் செய்தேன்." கதையை எழுதி உங்களுக்குப் பிபி, ஹார்ட் அட்டாக் வரவழைத்த அதே அனிதா."காஞ்சி தலைவன்","ஊரு விட்டு ஊரு வந்து "என்று உங்களை கவர்ந்த நாவல்களின் வரிசையில், இன்று என் நான்காவது நாவல் "சமர்ப்பணம்" உங்கள் முன் சமர்ப்பித்து உள்ளேன். யாரோ யார் யாரோ யாரோடு யாரோ? எவர் நெஞ்சினில் தான் யாரோ? வாழ்க்கை என்பது குழந்தைகள் விளையாடும் ‘பில்டிங் பிளாக்’ விளையாட்டு போன்றது.யாரை நம் வாழ்வில் சேர்க்கிறோம் ,யாரை விலக்குகிறோம், என்பதே நமது பாதையை நிர்ணயிக்கிறது.நாம் அப்படி எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நன்மை தருவதோ,கேடு விளைவிப்பதோ, எங்கேயோ,யாரோ ஒருவரின் வாழ்க்கையை மாற்றி விடும் சக்தி கொண்டது.