காதலுக்குச் சொல்லப்படும் உவமானங்களும் உணர்வு பூர்வ அழுத்தங்களையும் அப்படியே தூரத் தள்ளி வைத்துவிட்டு கார்த்திக் எனும் தனிமனிதனின் கடந்தகால காதலின் பக்கங்களில் வலம் வருவதற்கு அவனின் காதல் நாட்காட்டி குறிப்புகளை நமக்காகத் தருகிறான்.
இது கதையா என்றால் மையமாக லேசாகத் தலையை ஆட்டக் கூட யோசிப்போம் ஆனால் தனியொருவனின் காதல் சூறாவளியின் தொகுப்பா என்று கேட்டால் உடனடியாக பலமாக மண்டையை ஆட்டிவிடலாம்.
காதலில் தோற்றவனுக்கு மட்டுமே அது வலி அவனுக்குமே அந்த நொடியைக் கடந்த பிறகு சர்வசாதாரண சம்பவமாகிவிடும். வாழ்க்கை அப்படி ஒரு வரத்தை வழங்கியுள்ளது. அடுத்தவனின் காதல் தோல்வியின் விவரணையைக் கேட்பவர்கள் புன்னகைக்காமல் இருப்பதில்லை அப்படி ஒரு புன்னகை நம் முகத்தில் வர வேண்டும் என்று கார்த்திக் இந்த புத்தகம் முழுவதிலும் தன் "பல காதலை" சொல்லும் போது இது காதலா என்ற லாஜிக் கேள்வியெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பல இடத்தில் சிரிப்புடனே நகர்ந்து வர முடிகிறது.
During my childhood i used to hear movies in Radio. When Batsha movie was played in radio we were imagining the whole movie in mind and audio alone from radio. That was a wonderful experience. This story gave feel like short film in written format. I love the feel