1922-இல் காந்தியின் மீதும் தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. நீதிபதி தன் தீர்ப்பின் போது ”திலகர் மீதும் இதே பிரிவில்தான் ஆறு ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டது; அதேபோல் உங்களுக்கும் ஆறு ஆண்டு தண்டனை” என்றார். உடனே காந்தி, “லோகமான்ய பால கங்காதர திலகர் பெயரோடு என் பெயரையும் சேர்த்து அவருக்கு அளித்த அதே தண்டனையை எனக்கும் தந்தது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். இதை விட சிறந்த கௌரவம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று கூறி நீதிபதியைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினார். இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசும் போதும், எழுதும் போதும் என் கண்கள் பனிக்கின்றன; நா தழுதழுக்கிறது. ஆனால் அந்த மாமனிதர் இன்று நமக்கெல்லாம் வெறும் பெயராகவும், காகங்கள் அமர்ந்து இī
Charu Nivedita (born 18 December 1953) is a postmodern, transgressive Tamil writer, based in Chennai, India. His novel Zero Degree was longlisted for the 2013 edition of Jan Michalski Prize for Literature. Zero Degree was inducted into the prestigious '50 Writers, 50 Books - The Best of Indian Fiction', published by HarperCollins. Vahni Capildeo places Charu Nivedita on par with Vladimir Nabokov, James Joyce and Jean Genet, in her article in the Caribbean Review of Books. He was selected as one among 'Top Ten Indians of the Decade 2001 - 2010' by The Economic Times. He is inspired by Marquis de Sade and Andal. His columns appear in magazines such as Art Review Asia, The Asian Age and Deccan Chronicle.
புத்தகம் : கனவு கேப்பசினோ சேட்டிங் - 1 எழுத்தாளர் : சாரு நிவேதிதா பதிப்பகம் : எழுத்து பிரசுரம் பக்கங்கள் : 231 நூலங்காடி : @ எழுத்து பிரசுரம் எழுத்தாளர் சாருவை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர் சதிஷ் அவர்களுக்கு நன்றி. குமுதம் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம் . பாகம் 1-ல் மொத்தம் 49 கட்டுரைகள் உள்ளது . ஒவ்வொரு கட்டுரையிலும் குறைந்தது ஒரு புத்த்கம் / திரைப்படத்தை மேற்கோள் காட்டி சொல்லியிருப்பார் . புத்தகம் எழுத அவர் சந்தித்த நபர்கள் , நண்பர்கள் , பயணம் செய்த இடங்கள் என பலவகையான கதைகளைக் கொண்டது இந்த புத்தகம் . பல கட்டுரைகள் மனதிற்கு நெருக்கமானதாக இருந்தாலும், அதில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். பெண் என்பவள் ஆணுக்கு பணி செய்வதற்காக பிறக்கவில்லை . ஒவ்வொரு வருடமும் , பொதுத் தேர்வு முடிவுகளை அலங்கரிப்பது பெண்கள் தான். அந்த பெண்கள் எல்லாம் எங்கே போனார்கள் ? இட்லி தோசை சுடவா ??? புத்தகம் வாங்க காசில்லை, ஆனால் 2000 ரூபாய் கொடுத்து திரைப்படம் பார்க்க முடிகிறது !!!!!! ஒரு நடிகர் குடித்து விட்டு , கார் ஏற்றி அப்பாவி மக்களை கொல்லலாம் , அப்போதும் அவர் பின்னாடி ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும் . நேர்மையாக இருந்த காவல் அதிகாரி , பித்து பிடித்து இறந்து போனார். இது இந்தியாவில் மட்டும் தான் நடக்கும் . அரசியல் தலைவர்களையும் , நடிகர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து , கடவுள் என்று பேசாதீர்கள் . கி.ரா.வின் இளமை பருவம் , குறித்து ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பார் - அருமை . ஜல்லிக்கட்டு பற்றி எல்லாரும் பேசி முடித்தாற்று. ஆனால் எத்தனை இளைஞர்களுக்கு தமிழ் பேச தெரியும் ? தமிழ் புத்தங்கள் படிக்கிறார்கள் ? தாய்மொழியில் பேசினால் அபராதம் கட்ட சொல்லும் அவலம் இந்தியாவில் மட்டும் தான் நடக்கும் . க்ரீம் / சோப் கடைகளுக்கு தூதுவராக இருக்கும் நடிகர் நடிகைகளை, ஏனோ புத்தக திருவிழாவில் பார்க்க முடிவதில்லை (சில இயக்குனர்களை தவிர ). சுயமரியாதை இல்லாமல் , மற்றவர்களுக்கு கும்பிடு போட்டு வாழ்வது தான் அவமானம் .
இதுவரை சாருவின் , எழுத்தை படிக்காதவர்களுக்கு இந்த புத்தகம் தொடக்கமாக அமையும் .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி . Happy reading …..