” எதைபத்தி, என்ன சொல்லிண்டு இருந்தா? ” ”நீ கூட மறந்து போயிட்டே, உனக்கு ஆயிரம் வேலை. நிறைய படிக்கணும், நா என்ன பண்ணுவேன், வெட்டியா உக்காந்துண்டு பொழுதை போக்கரேன், என்ன பண்ணினாலும் தப்பாயிடறது. நா உன் பொண்டாட்டின்னு தானே சொல்லிண்டு இருந்தா?” அதுக்கென்ன இப்ப சின்ன வயசில இருந்து சொல்லிண்டு இருந்ததுதானே, இப்ப அதுக்கென்ன. ” நீயும் மறந்துட்டையோ என்னமோ, நா மறக்கல்லை. இப்ப பார் என்ன பண்ணறான்னு.” இவள் இன்னும் சப்ஷெக்டுக்கே வரவில்லை, ”இப்ப கல்யாணத்தை பத்தி என்ன பிரச்சனை, நா படிச்சு முடிச்சுட்டு, அமெரிக்கா போகணும், மேலே படிக்க, உனக்கு மறந்து போச்சா, கல்யாணமெல்லாம், இப்ப முடியாது. உனக்கு என்ன அவசரம்.” ”எனக்கு ஒரு அவசரமும் இல்லைடா.