அம்மா என்று கோடிக்கணக்கானோரால் பாசத்தோடு அழைக்கப்பட்ட ஜெயலலிதா அவர்கள் மறைந்து ஆண்டுகள் மூன்று உருண்டோடிவிட்டன. அவரோடு பழகுவதற்கும் உரையாடுவதற்கும் ஒரு பத்திரிகையாளனாகக் காலம் எனக்கு வாய்ப்பு வழங்கியது. அப்போது அருகில் இருந்து நான் பார்த்து வியந்த அவரது பன்முகத் திறமைகளுக்கு முக்கிய காரணம் புத்தகங்கள் வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆத்மார்த்தமான ஈடுபாடு என்பது என் எண்ணம். மூத்த பத்திரிகையாளனாகவும், எழுத்தாளனாகவும் எனக்குப் பிடித்த விஷயமாக இருந்தது அது. எங்களுக்குள் பல கருத்து வேறுபாடுகளும், முரண்களும் உண்டு. ஆனால் வாசிப்பின் மீது இருந்த நேசம் மட்டும் பொது. நல்ல புத்தகங்கள் குறித்து உரையாடுவதிலும் ஜெயலலிதா அவர்களுக்கு ஆī