ஒவ்வொரு வருடத்தின் ஜனவரி 1 அன்று எத்தனை சபதங்கள் போட்டுத் தொடங்கியிருப்போம். டிசம்பர் 31 அன்று நிதானமாக யோசிப்போமா? நிச்சயம் செய்ய மாட்டோம். ஏன் நடக்கவில்லை? என்ன காரணம்? இந்த இரண்டு கேள்விகளை எழுப்பி அதற்கு விடை தேடிப் பார்த்தால் பெரும்பாலானவர்கள் "என் சூழல் சரியில்லை" என்று தான் முடிப்பார்கள். பொய் என்று தெரிந்தே சொல்வோம். எனக்குப் புத்தகங்கள் படிக்க நேரமில்லை? எனக்கு நடைப்பயிற்சி செய்ய நேரமில்லை? எனக்கு எழுத நேரமில்லை? எனக்கு கற்றுக் கொள்ள நேரமில்லை? என்று இதைப் போல ஒரு பட்டியல் ஒவ்வொருவரிடமும் உண்டு. 2020 உங்களுக்கு எத்தனை கடமைகள் இருந்தாலும் இதை மட்டும் செய்ய முடியுமா? “உங்கள் நினைவுக்குறிப்புகளை வருடந்தோறும் எழுதி வையுங்கள்.