Jump to ratings and reviews
Rate this book

விளிம்பு [Vilimbu]

Rate this book
எனக்கு எப்பொழுது இந்தக் கொல்லும் இச்சை ஏற்பட்டது என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை. விஜயனை எப்பொழுது இலக்காக நினைத்தேன் என்பதும் அவ்விதமே. இரண்டு வருஷங்களாகவே எனக்கு உடம்பு ஒரு மாதிரி தான் இருந்து வருகிறது. பிற விஷயங்களில் அக்கறை இல்லாமலிருப்பதிலிருந்து ஆரம்பித்தது. காலை எப்போதும் ஆறரை வரை தூங்குவேன். திடுதிடுப்பென்று தூக்கமின்மை ஆரம்பித்தது. இரவு மூன்று மணிக்கு எழுந்துவிடுவேன். எங்கே இருக்கிறேன் என்று சற்று நேரம் சஞ்சலம். அருகே மனைவி படுத்திருப்பாள். இவள் யார்? இவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? மனித வாழ்க்கை என்னும் அலகிலா பிரயாணத்தில் என்னுடன் ஒண்ட வந்த சக யாத்ரியா?

55 pages, Paperback

Published December 1, 2011

12 people want to read

About the author

Sujatha

303 books1,372 followers
Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.

As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (66%)
4 stars
1 (11%)
3 stars
2 (22%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for RSDhar.
66 reviews1 follower
December 18, 2022
1980 ம் வருடம் (ஏப்ரல்) தமிழ் புத்தாண்டு சிறப்பிதழை (13-04-1980) சுஜாதா தயாரித்தார். முழுக்கவே திகில் சிறப்பிதழான அதில் சுஜாதாவின் குறுநாவல் "விளிம்பு" இடம்பெற்றது.

சுஜாதா தயாரித்த இதழ் என்பதால், அவருக்கு நெருக்கமான இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள் நடிகை லட்சுமியை ஒரு நாடகத்துக்காக (Hello ! Wrong Number by Lucille Fletcher) நடிக்க வைத்து சில அருமையான புகைப்படங்களையும் எடுக்க ஆவண செய்தார்.

இந்த "விளிம்பு" ஒரு மிக அருமையான, இறுதியில், கதை படிப்போரின் முகத்தில் அறையும் வண்ணம் ஒரு அட்டகாச சொடுக்குடன் முடியும் ஒரு அற்புதமான உளவியல் கதை.

இந்தக் கதை வெளிவந்து சில வருடங்கள் கழித்து, இந்தக் கதையை அப்படியே காப்பி அடித்து ராஜேஷ் குமார் ஒரு சிறுகதை எழுதி அது குமுதத்தில் வெளிவந்தது. அதைப் படித்துவிட்டு மிகுந்த எரிச்சலுடன், சுஜாதாவின் விளிம்பு கதைக்கும், ராஜேஷ் குமாரின் சிறுகதைக்கும் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டி குமுதத்திற்கு ஒரு கடிதம் எழுதினேன். அது காற்றோடு போய்விட்டது.

சுஜாதாவிற்கு இது குறித்து எழுதினேன். அவரிடம் வந்த பதில், modesty யின் உச்சம்: "நான் அந்தக் கதையைப் படிக்கவில்லை. அந்த எழுத்தாளருக்கும் ஏதாவது ஒரு வகையில் கதையின் கரு மனதில் தோன்றியிருக்கலாம் அல்லவா? எனவே நான் அதை என் கதையின் காப்பி என்று சொல்ல மாட்டேன். இதை professional hazard என்று கூறலாம்".

என்ன ஒரு அடக்கமான பதில் பாருங்கள் !!
Profile Image for Yadhu Nandhan.
261 reviews
March 9, 2021
சுஜாதாவின் கதாபாத்திரங்கள் நம்மோடு பேசும் சில தருணங்களில் அவை என் தலையினுள்ளே ஒலிப்பதாய் உணர்கிறேன். குறிப்பாக இந்தக்கதையில் அதனை சற்று அதிகமாகவே உணர்ந்தேன். அப்படிப்பட்ட அசாத்தியமான ஆற்றல் கொண்டது சுஜாதா அவர்களின் எழுத்தும் நடையும். சில சமயங்களில் அந்த எழுத்து என்னை ஒரு ஆழமாய் ஆட்கொண்டு விடுகிறது என்றும் சொல்லலாம். உண்மையிலேயே இத்தனையும் செய்கிறது அவரின் எழுத்து.
கதையின் முடிவில் சொக்குண்டு போனேன்.
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.