தமிழக ஓவியர்கள் சிற்பிகள் பற்றிய கட்டுரைகள் கலையைக் கொண்டாடுவதென்பது வாழ்வைக் கொண்டாடுவதே. ஓர் உயர்ந்த படைப்பு நம்முள் நிகழ்த்தும் பரவசமும் எக்களிப்பும் அலாதியான அனுபவம். அறிவை விடவும் கலைக் கற்பனைதான் பிரபஞ்சத்தை வளைத்திருக்கிறது. அதனால்தான், வாழ்வின் மெய்மையை வரலாறல்ல, கலையே வெளிப்படுத்துகிறது என்கிறார் நீட்ஷே.
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.