அவனோ நாட்டின் மிகச்சிறந்த பாதுகாப்பு படையின் வீரன்.. தனது பணியை மட்டுமே நேசிக்கும் அவன் உள்ளத்திலோ காதலின் வடு மட்டுமே... அவளோ... பணயம் வைக்கப்பட்ட நிலையிலும் அத்தீரனை மட்டுமே நினைத்து அவனோடு மானசீகமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் காதல் காரிகை... இவர்களுக்கு நடுவே விதியின் சதியாய்... நாட்டையே குரூரமாய் வேட்டையாடி அழிக்க காத்திருக்கும் வேடன் ஒருவன்... நாட்டை மட்டுமல்லாமல் பணயம் வைக்கப்பட்ட பெண்ணவளையும் அவளின் காதலையும் காப்பாற்ற புறப்படுகிறான் மன்னவன் தேடலோடு.. தனது நாட்டை காத்தானா? தனது தேடலில் வெற்றிக்கண்டானா? தனது காதலோடு இணைந்தானா? விறுவிறுப்பான புலனாய்வின் பின்னணியில் பின்னிப்பிணைந்த சரம் போல இருவரின் பரிசுத்தமான நேசத்தோடு பயணிக்கிறது "காதலா
ராணுவ வீரர்களின் வாழ்க்கையும் அதனோடு இணைந்த காதலும் அதன் தேடலையும் அழகாக கையாண்டு இருக்கிறார் எழுத்தாளர் ... விறுவிறுப்பான கதைக்களம்.. மென்மேலும் சிறந்த படைப்புகளை வழங்க ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் 💐💐..