ஆற்றுப்படை என்பதற்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் தரும் விளக்கம்: ஆற்றுப்படுத்துதல் என்றால் அதனை நோக்கிச் செலுத்துதல் என்கிறார் . தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி தமிழை நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் என்கிற நம்பிக்கையால் இக்கட்டுரைத் தொகுப்புக்கு தமிழாற்றுப்படை என பெயர் வைத்திருக்கிறார். வரலாறு படைக்கப்போகும் தமிழாற்றுப்படை, தமிழுக்கான கொடை, தமிழறிஞர்களுக்கான வணக்கம், தமிழுக்கான மகுடம்.
Vairamuthu was born to Ramaswamythevar and Angammal of Mettur in a middle-class family. When he was four, the village gave way to Vaigai Dam and the family moved to Vadugapatti village, a farming community in Theni near Periyakulam.
The ambience of the village is said to have inspired him to write poems. According to him, Tamil and Rationalist movements of the sixties stimulated his poetic zeal. The speeches of Periyar & Anna, the writings of Karunanidhi and the works of eminent poets like Bharathi, Bharathidasan and Kannadasan and the life in the countryside shaped the young poet's thinking. At the age of fourteen, he was inspired by Thiruvalluvar's Thirukkural to write a Venba compilation of poetry, strictly adhering to the Yappu grammar rules of Tamil poetry.
He joined Pachaiyappa's college in Chennai where he was acclaimed as the best speaker and poet. While in his second year of B. A. and barely nineteen years of age, Vairamuthu published his maiden anthology Vaigarai Megangal. It was prescribed for study in Women's Christian College. Thus, he achieved the distinction of a student poet whose work was taken into the curriculum while he was still a student.
His second work, Thiruththi Yezhudhiya Theerpugal, in pudhu kavidhai (free verse) form was published in 1979. He made his film debut in the succeeding year when he set lyrics for Bharathiraja's Nizhalgal.
தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கபிலர், ஔவையார், கம்பர், அப்பர், ஆண்டாள், செயங்கொண்டார், திருமூலர், caldwell, வள்ளலார், உ.வே.சா., மறைமலையடிகள், பாரதியார், பெரியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், அண்ணா, மற்றும் கருணாநிதி என சங்ககாலம் முதற்தொட்டு இக்காலம் வரை தமிழுக்கு அருந்தொண்டு செய்த மகத்தான மனிதர்களைப் பற்றிய புத்தகம். பாரதியைப் பற்றி வைரமுத்து அவர்கள் தன் கம்பீரக்குரலில் புகழுரைத்து முடித்த பிறகு என் கண்கள் கலங்கியிருந்தன. பாவேந்தர் பாரதிதாசன், உ.வே.சா, புதுமைப்பித்தன் ஆகியோரின் அத்தியாயங்களும் மனதை உருக்கி விடுவதாகவே அமைந்திருக்கிறது.
இவ்வுலகில் மனிதன் தோன்றிய நாளில் இருந்து இன்று வரை நம் கண்முன்னால் பல மொழிகள் முதுமையுற்று மாய்கின்றன, அந்நியக் கிருமிகள் புகுந்து சில மொழிகள் அழிகின்றன, ஆனால் மூவாயிரம் ஆண்டுகளாக தனித்து நின்று பல மொழி திணிப்பையும் எதிர்த்து இன்று வரை உயிரோடு கலந்து இருக்கும் ஒரே மொழி தமிழ்...
ஆற்றுப்படுத்துதல் என்றால் அதனை நோக்கிச் செலுத்துதல் என்று பொருள் . தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி தமிழை நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் புத்தகம் இது.
தொல்காப்பியர் சங்க காலத்தில் சீர்திருத்தி வடிவமைத்து கொடுத்த தமிழ் என்னும் ஆயுதத்தை ஒவ்வொரு முறையும் நெருப்பில் இட்டு அக்காலத்திற்கு ஏற்றவாறு வடிவத்தை மாற்றிய பலர் பற்றிய புத்தகம்.
இதில் இருக்கும் ஒவ்வொருவரும் தமிழை ஒவ்வொரு காலத்திற்கு தூக்கி நிறுத்தியவர்கள்.
தமிழ் பழைய மொழி அதை ஏன் இன்னும் தூக்கி பிடிக்கவேண்டும் என்று கேட்பவர்களுக்கு ..
"காற்று பழையதாயினும் உள்ளிழுக்கும் போதெல்லாம் உயிர் வாழ்வது போல மொழி பழையதாயினும் அதை வீழாமல் காப்பதே ஒவ்வொருவரின் கடமை".
தழிழுக்கு வார்த்த பல பேர்களுள் சில பேர்களின் அறிய சாதனைகளை அறிந்து வைக்க எழுதப்பட்ட நூல் இது. வைரமுத்து ஆராய்ந்து தொகுத்து எடுத்து வந்திருக்கிறார். தமிழ் தான் திராவிடத்தின் மூல மொழி என்று ஆய்வறிஞர்கள் சொல்கிறார்கள். ஆதி மக்கள் பேசி வந்த மொழி தான் திராவிடக் குடும்ப மொழி என்கிறார்கள். கி.மு’வில் இயற்றப்பட்ட ரோமானிய நாடகமொன்றில் கன்னட மொழிச் சொற்கள் வருகிறதாம். தமிழில் இருந்து கிளைத்த கன்னடமே கிமு’வில் வருமளவுக்கு தொன்மை என்றால் தமிழுக்கு நினைத்துப் பாருங்கள்.
* ஆங்கிலத்தின் எழுத்துரு கிபி 7ஆம் நூற்றாண்டில் அறியப்பெறுகிறது. * ஜெர்மானிய மொழியின் எழுத்து வடிவம் கிபி 8’ஆம் நூற்றாண்டில் எட்டப்பட்டது. * பிரெஞ்ச் மொழியின் முதல் எழுத்து வடிவம் கிபி 9’ஆம் நூற்றாண்டை ஒட்டியதாகும்.
ஆனால், தமிழ் மொழியின் ஆதி இலக்கணமான தொல்காப்பியம் கிமு 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றால் எவ்வளவு விண்ணளவு வியப்பு தருகிறது. தொல்காப்பியரில் இருந்து கவிக்கோ அப்துல் ரகுமான் வரை தமிழை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திய சிலரின் பதிவு இந்நூல். வடமொழிச் சொல்லை உருவி வீசியதிற்கு மறைமலையடிகளின் பங்கு அதிகம். தொல்காப்பியர் தமிழின் இலக்கணத்தை கட்டமைத்தவர். சுருங்கிய சொற்றொடரில் கவி எழுதியவர் அவ்வையார். எந்த காலத்திலும் Out Of Trend ஆகாத கவி தரித்தவர் திருவள்ளுவர். சிலைவழிப்பாட்டை விட்டு ஒளி வழிப்பாட்டை முன் நிறுத்தி கவியில் ஒளிந்தவர் வள்ளலார். சமஸ்கிருதத்தில் இருந்து வரவில்லை தமிழ், இது திராவிட மூலமொழி என்று நிரூபித்தவர் கால்வெல். உடம்பின் இரகசியத்தை கட்டவழித்தவர் சித்தர் திருமூலர். Surrealism(மீமெய்) என்பதை தமிழ் கவிதைக்குள் நேர்த்தியாய் புகுத்தியவர் கவிக்கோ அப்துல் ரகுமான். ஹிந்தி திணிப்பை விரட்டிய பங்கு அண்ணாவும், கலைஞரையும் சாரும். அடித்தட்டு மக்களின் வலியை பாட்டு செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாணச் சுந்தரம், சிறுகதையை அடுத்து நகர்த்தியவர் ஜெயகாந்தன். இன்னும் பிற இந்த ஒரு நூலுக்குள் அடங்கி இருக்கிறது. தமிழின், தமிழ் சார்ந்தவர்களின் அறிமுகம் வேண்டுமென்றால் இந்த நூல் சரியானது. அதற்கு இவன் சாட்சியானது.
இந்த புத்தகம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர்களை கால வரிசையில் வரிசைப்படுத்தி அவர்களின் வாழ்வினை விவரிக்கிறது. என்ன தான் அணைத்து பெயர்களும் பரிச்சயமாக இருந்தாலும், அவர்களை பற்றிய சிறு சிறு நிகழ்வுகள் நமக்கு முழுதும் புதுமையே. தொல்காப்பியரில் ஆரம்பிக்கும் புத்தகம் கவிக்கோ அப்துல் ரஹ்மானில் முடிகிறது. ஆனால் முழுதும் தமிழ் பற்றி மட்டும் பேசுகிறதா என்பது கேள்விக்குறியே. ஆரம்பித்தில் தமிழ் மொழி பற்றி மட்டுமே பேசி செல்லும் ஆசிரியர் கொஞ்சம் கொஞ்சமாக திராவிடத்தின் மீதும் அரசியலின் மீதும் தன் மொழி நடையினை மாற்றுகிறார். அதற்கான காரணமாக, தமிழ் மொழியின் மீதும் தமிழ் மக்களின் மீதும் ஏற்பட்ட அடக்குமுறைகளை, மொழியினை ஊர் ஆயுதமாக மாற்றி அவ்வடக்குமுறைகளை உடைத்தெறிந்த அனைவருக்கும் ஆசிரியர் அளிக்கும் மரியாதையெனவே கொள்ள வேண்டும்.
இளைஞர்களுக்கு உகந்த புத்தகம்தானா என தெரியவில்லை. முதல் பாதி புரிவதற்க்கு தமிழ் இலக்கியம் நிறைய படித்திருக்க வேண்டும், பின் பாதி எளிதாக இருக்கிறது. இருந்தும் எல்லா ஆளுமைகளுக்கும் ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும். கட்டுரைகளின் நீளமும் சோதிக்கவில்லை.
வைரமுத்துவின் உன்னதமான படைப்பு. தமிழ் மொழிக்கு தொண்டு செய்தவர்களின் தொகுப்பு இப்புத்தகம். இதை எழுதியத்தின் மூலமே இவரையும் அப்பட்டியலில் சேர்க்கலாம்.
தமிழ்மொழி வரலாற்றை அறியும் ஆவலுள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.
பெரியார் அண்ணா கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத்தவரை இதில் சேர்த்துள்ளது சிலருக்கு தவறென படலாம். அனால் வரலாறு அறிந்தவர்கள், அரசியல் தாண்டி இவர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்கை அறிந்தவர்கள் இவர்களை சேர்த்தது தான் சரி என்று அடித்துச் சொல்வார்கள்.
இது எவ்வித அரசியல் சார்பும் இல்லாத நேர்மையான படைப்பு.
நாம் மறந்து கடந்து போன பல புலவர்களின் கதாசிரியரின் கவிஞர்களின் பெருமையும் அவர்கள் தம் தமிழுக்கு செய்த தொண்டுகளையும் தமிழின் பெருமை மற்றும் அதன் கவியழகையும் அழகே தன் கட்டுரை வழியே அழகாய் எடுத்துரைக்கிறார் கவிஞர் வைரமுத்து. பிடித்த வரி பிடித்த புலவர் என்று ஒன்றல்ல இரண்டல்ல குறிப்பிட இப்படைப்பில்.
Of the best I read after Thanet deasam from Vairamutha depth overwhelming each and every scholars of tamil works especially mesmerising Elango , Thirumular, Jayankondar, Periyar, Caldwell, Jeyakanthan much touched finally it gives a good feel
சங்க காலம் முதல் தற்காலம் வரை தமிழ் ஆராய்ந்து , வாழ்ந்து மறைந்த பல இலக்கியவாதிகளின் இலக்கியத் தேனை , இனிய கவிதைத் தமிழில் சுவைக்கத் தந்து , எங்களை தமிழ் ஆற்றுப் படுத்திய கவிஞர் வைரமுத்து அவர்கள் வாழ்க வாழ்க