1970களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம் .பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தையையும் வருங்காலக் கணவனையும் காப்பாற்ற தன்னை தியாகம் செய்ய வேண்டிய நிலைமை சாந்தினிக்கு.தன்னை ஏமாற்றியவர்களைப் பழி வாங்க நல்லக் கருவியாக செந்திலுக்கு சாந்தினி அகப்பட்டாள். அவள் ஒரு பாவமும் அறியாதவள் என்பதை உணரும் போது அவனுடைய பழிவெறி தீருமா? மேலும் சாந்தினிக்கு அவள் மேல் ஆசைப் பட்ட சங்கரும் செந்தில் மீது ஆசை கொண்ட நளினியும் எதிரிகளாக இருக்கிறார்களே ! எத்தனை பேரை அவள் சமாளிப்பாள் ?
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.
She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.
She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.
If the story was exquisitely trying to portray a woman of substance and strength. I failed to see it. Neither was there any love story to swoon for. I couldn't figure out when and why they fell for each other.
சுவாரஸ்யமான கதை என்றபோதிலும் யதார்த்தத்திற்கு சற்று முரண்பாடான பல நிகழ்வுகளை கொண்டுள்ளதால் மனதில் ஆழமாக நிற்காமல் போகிறது. மற்றபடி ரமணிசந்திரன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் கதை மாந்தர்களை அறிமுகப்படுத்திய விதமும் கதையை நகர்த்திய விதமும் கதையின் விறுவிறுப்பை கூட்டுகிறது.
கதானாயகன் அலுவலகத்தில் காட்டும் கம்பீரமும் தாய் தந்தையரிடத்தே காட்டும் யதார்த்தமான பணிவும் அன்பும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
சூழ்னிலைகளை தன்னால் கட்டுப்படுத்த முடியாத போதிலும் தன்னுடைய சுபாவத்திற்கு முரண்பாடாக நடக்க மறுக்கும் கதாநாயகியின் குணம் மனதிற்கு இனிமையாகப் படுகிறது. அதையே கதைக்களமாக அமைத்திருக்கும் ஆசிரியரின் முயற்சி பாராட்டுதலுக்குரியது.