ஐரோப்பா, அமெரிக்கா போலவே ஜப்பானும் விரிவாக எழுதப்பட்ட நிலம். நான் இளைஞனாக இருந்தபோதே தி.ஜானகிராமனின் ஜப்பானியப் பயணக்கட்டுரையான ‘உதயசூரியனின் நாட்டில்’ என்னும் பயணக்கட்டுரையை படித்திருக்கிறேன். அதற்கு அப்பாலும் ஜப்பானைப்பற்றி என்ன சொல்லமுடியும் என்றே தோன்றியது. ஆனால் ஒவ்வொருவரின் அனுபவங்களும் வேறுவேறு. இதில் நம் பார்வைக்குச் சிக்குவதில் ‘கடவுள் அமைத்த’ ஓர் ஒழுங்கு அல்லது தற்செயல் உள்ளது. அது காட்டும் சித்திரம் மிக தனித்தன்மையானது. இந்நூல் ஜப்பானைப்பற்றிய ஒரு மின்கணப் புகைப்படம் என்று சொல்வேன். இதிலும் ஜப்பானிய இலக்கியம், கலை, அரசியல், மதம், வரலாறு பற்றிய சுருக்கமான ஒரு முழுமைச்சித்திரம் உள்ளது.
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
ஜெ வின் பயணக்குறிப்புகள் அனைத்துமே பெரும் தகவல் புதையல்கள். என்னதான் wiki பார்த்து தெரிந்துகொண்டாலும்வெப்படி ஒரு நிலத்தை அணுகுவது, எப்படி தயார்படுத்திக்கொள்வது, என்னென்ன விசயங்கள் அதில் முக்கியம் என்று ஒரு பெரும் சித்திரத்தை அளிப்பவை. இவரின் கதைகளைப்போலவே இவரின் பயணக்கட்டுரைகளும் வாசகனக்கு வெற்று படிப்பைத்தாண்டி ஒரு நிறைவை அளிக்கும்.
ஐரோப்பாவைப்பற்றி எழுதாமல் விட்டது பெரும் குறைதான்.
புத்தகம் : ஜப்பான் ஒரு கீற்றோவியம் எழுத்தாளர் : ஜெயமோகன் பதிப்பகம் : கிழக்குப் பதிப்பகம் பக்கங்கள் : 151 நூலங்காடி : Flipkart
🔆“யானை டாக்டர் “ புத்தகத்தின் மூலமாக எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துகள் எனக்கு அறிமுகமாயின . அதன் பின்னர் அவரின் “ அறம் “ படித்தேன். இன்னமும் அந்த தாக்கத்தில் இருந்து மீள முடியவில்லை . “ஜப்பான் – ஒரு கீற்றோவியம் , அவரது வரிகளில் வந்த பயணக் கட்டுரைகளின் தொகுப்பு .
🔆ஜப்பான் தலைநகர் டோக்கியோ என்பது நமக்கு தெரியும். அங்குள்ள மக்கள் எவ்வளவு ஒழுக்கமானவர்கள் என்பது கட்டுரைகள் மற்றும் திரைப்படங்களின் வாயிலாக நாம் அறிந்ததே.
🔆டோக்கியோ நகருக்கு முன்னோடியாக இருந்தது மூன்று நகரங்கள் கியோட்டோ , நாரா மற்றும் காமகுரா. இந்நகரங்களில் உள்ள ஜென் ஆலயங்களையும் புத்த ஆலயங்களையும் கண்ட அனுபவத்தைக் கூறியிருக்கிறார் .
🔆இந்த ஆலயங்களில் உள்ள தோட்டங்கள் மட்டும் இல்லாது , பொதுவாகவே ஜப்பான் மக்களுக்கு செடிகள் மற்றும் தோட்டக்கலையில் ஆர்வம் அதிகம் . இதையே ஒரு தியானமாக அவர்கள் செய்வதுண்டு .
🔆ஜப்பான் என்றவுடன் நினைவுக்கு வரும் மற்றொரு விடயம் - ஹிரோஷிமா நாகசாகி தாக்குதல் . அந்த மக்கள் , அந்த பெரும் தாக்குதலை எதிர்க்கொண்டு எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தனர் என்பதைக் குறித்து பல திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் வெளியாகியுள்ளன.
🔆ஜப்பானின் தேநீர் விருந்து என்பது ஒரு பிரார்த்தனை சடங்கும் கூட . நான் நேரடியாக ஜப்பானை எப்போ காண்பேன் என்று தெரியவில்லை . அவரின் எழுத்துகளின் உதவியால் மனக்கண்ணால் பார்த்து விட்டேன் .
🔆பயணம் சார்ந்த நூல்களை படிக்க விரும்புவோர் , வாசிக்க வேண்டிய புத்தகம் .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
ஜப்பானுக்கு மேற்கொண்ட பயணத்தை ஒரு சாகசக் குறிப்பாய் மட்டும் தராமல், அந்நாட்டின் ஆழமான சிந்தனைக் களஞ்சியமாக இந்நூலை வழங்கியிருக்கிறார் ஜெயமோகன். ஏழு நாட்களே நீடித்த இந்தப் பயணம், பல ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வுக்கான பலனை அளிக்கிறது என்றால் அது மிகையல்ல.
பொதுவாக, நாம் ஓர் அயல்நாட்டுக்குச் செல்லும்போது, காட்சிகளைச் சுற்றிப் பார்ப்போம், புகைப்படங்கள் எடுப்போம், உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வோம். ஆனால், ஜெயமோகனின் அணுகுமுறை முற்றிலும் வேறானது. அவர் ஒவ்வொரு இடத்தையும் அதன் வரலாறு, அரசியல், புவியியல் அமைப்பு ஆகிய பின்னணிகளோடு இணைத்துப் பார்க்கிறார். அவர் கண்ட சிறு பகுதியைக் கொண்டே ஜப்பானின் முழுச் சித்திரத்தையும் ஒரு கீற்றோவியமாக வரைந்து காட்டுகிறார்.
ஒரு நாட்டின் நிலவியல் அமைப்பு எவ்வாறு அதன் ஆட்சியையும், அரசின் புரிதல் எவ்வாறு அதன் குடிமக்களின் பழக்கவழக்கங்களையும் வடிவமைக்கிறது என்பதை அவர் விளக்கும் பாங்கு வியப்பிற்குரியது. இவ்வளவு ஆழ்ந்த சிந்தனையை ஒரு குறுகிய பயணத்தில் ஒருவரால் நிகழ்த்த முடிவது என்பது உண்மையிலேயே ஆச்சரியத்தைத் தருகிறது.
ஜப்பானைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நுண்ணிய கவனிப்பு மற்றும் சிந்தனைத் திறன் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டி. இது வெறும் பயண நூல் அல்ல; ஜப்பானின் ஆன்மாவைப் பதிவு செய்த ஓர் அரிய ஆவணம்.
ஜப்பானின் மீதான ஒரு தீரா மோகத்திற்க்கு, மேற்க்கொண்டு தீனி போட்டது போல் இருந்தது இந்த "ஜப்பான் ஒரு கீற்றோவியம்".
ஷிண்டோவையும் பௌத்தத்தையும் பற்றிய என் மேலோட்டமான அறிவுக்கு ஆழ்ந்த சில ஆச்சரிய விளக்கங்களை அளித்திருக்கிறார் ஜெ.மோ.. சீனாவின் கலாச்சார தாக்கம், உலகப் போரின் நீட்சியும் மீட்சியும், சுய ஒழுங்கும் சுத்தமும், சாமுராய் முதல் அனிமே வரை ஊடுருவிய வன்முறை மீதான காதல் என பல தகவல்கள் தருவிக்கப்பட்டுள்ளன.
ஜப்பானின் இலக்கிய வரலாறும், பண்பாட்டு கலையும் தேய்ந்து போய் அமெரிக்கா மற்றும் மேல்நாட்டு கலாச்சாரம் மேலோங்கி இருப்பது, அந்த நாட்டுக்கு நேரடி தொடர்பே இல்லாத என்னையே ஏதோ ஒரு வகையில் கவலை கொள்ள செய்கிறது. மிஞ்சிய ஜப்பானை ஜப்பானாக இருக்கும் போதே ஒரு முறை சென்று பார்த்து விட வேண்டும். பயணக் குறிப்புக்களை விரும்பி படிப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.