எல்லியூர் தலைவனின் மகனான இளம்பரிதி தனது நெருங்கிய நண்பர்களான சாயா, ஆதி, சத்யா, சதீஷை அக்கிராமத்திற்கு அழைத்து வருகிறான். எல்லியூர்- மணிமானமலையின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு பசுமையான கிராமம். ஊர் மக்கள் அனைவரும் எவ்வித வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்கிறார்கள். மலையில் வாழும் மணியாங்குடியினரோடு நெருங்கி உறவாடுகிறார்கள். ஆனால் ஒரு குடும்பத்தை மட்டும் பல வருடங்களாக தள்ளியே வைத்திருக்கிறார்கள். பேராசையோடு மணிமானமலையை நெருங்கக் கூடாதென்றும், எல்லியூர் மற்றும் மணியாங்குடியினரின் குல தெய்வமான கனலி தேவி மணிமானமலையில் வாழ்வதாகவும், ஒவ்வொரு ஞாயிறு இரவும் ஊரின் எல்லையில் இருக்கும் கோவிலுக்கு வந்து பூசை செய்வதாகவும் நம்பப்படுகிறது.