கதைகள் மனதில் உள்ள இறுக்கங்களை குறைத்து படிப்பவர்களை வேறு ஒரு உலகத்திற்கு சிறிது நேரத்திற்கு எடுத்துச்செல்பவை. “எள் என்றால் எண்ணெய்” - இது சிறுவர்களுக்கான கதை. எட்டு வயது குழந்தைகளும் படிக்கும் வகையில் மிகவும் எளிமையான முறையில் கதை எழுதப்பட்டுள்ளது. கதையின் முக்கிய நோக்கமே, சிறுவர்கள் கதையை படித்து அதில் கூறப்பட்ட தகவல்களை எளிய முறையில் அறிந்துகொள்ளவேண்டும் என்பதே. இந்த கதையில் நமது உணவில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் "எள்" பற்றிய தகவல்களை கொடுத்துள்ளேன். கண்டிப்பாக குழந்தைகள் படிக்கவேண்டிய புத்தகம் இது. பெற்றோர்கள் தவறாமல் இந்த புத்தகத்தை அவர்களுடைய குழந்தைகளின் மத்தியில் கொண்டு செல்லவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.