Jump to ratings and reviews
Rate this book

நீ இன்றியமையா நான்

Rate this book
காதல்! என்னவெல்லாம் செய்யும்? எங்கேயும் போகாமல் என்னுடனே இருந்துவிடச்சொல்லி கெஞ்சும், சரி போ என்று கைகளை விடுவிக்கும், போகச் சொல்லிவிட்டேனே போகாமல் திரும்பி என்னிடமே வந்துவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா என்று எதிர்பார்க்கும், புரிந்துகொள் என்று இறைஞ்சும், ஒன்றும் உனக்குப் புரியவேண்டாம் போய்த்தொலை என்று சண்டைபிடிக்கும், அன்பின் உச்சியில் கட்டிப்புரளும், புறக்கணிப்பின் தீயில் நெட்டித்தள்ளும், ''உன்னைத்தான் ஆதுரமாக விரும்புகிறேன், உன்னைத்தான் அறவே வெறுக்கிறேன், நீதான் பிள்ளையாய் அழுகிறாய் நீதான் பிசாசாய் அழச்செய்கிறாய் உன்னிடம்தான் அடிபணிகிறேன் உன்னிடம்தான் ஆதிக்கம் செய்கிறேன் நீதான் தாயாய் ஏந்துகிறாய் நீதான் அநாதை ஆ

130 pages, Kindle Edition

Published August 8, 2019

6 people are currently reading
35 people want to read

About the author

KARTHIK T

4 books11 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (38%)
4 stars
7 (53%)
3 stars
1 (7%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books177 followers
June 15, 2025
#357
Book 28 of 2025- நீ இன்றியமையா நான்
Author- யாத்திரி

தமிழில் நான் மிகவும் ரசித்து வாசிக்கும் கவிஞர்களுள் யாத்திரிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. காதல் கவிதைகளைப் பொருத்தவரை ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே உணர்வை வெவ்வேறு வரிகளில் எழுதுவது போல தோன்றி ஒரு சலிப்பு தட்டும். ஆனால் இவரது கவிதைகளை பல புத்தகங்களில் வாசித்த பிறகும் இன்னும் புதுமையாகவே இருக்கிறது. எல்லாருக்கும் இவரது கவிதைகள் ஏதோ ஒரு தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும்.

காதல் வெறும் சந்தோஷம் மட்டும் இல்லை. அது ஒரு குழப்பம்,ஒரு கோபம்,ஒரு ஆசை,ஒரு ஏக்கம்,ஒரு தவிப்பு,எல்லாமும் தான். காதலின் மெளனமான தருணங்களை அனுபவித்தவர்கள்,காயங்களை வார்த்தைகளால் தேற்றிக்கொள்ள விரும்புபவர்கள்,ஒருபோதும் முழுமையாகச் சொல்ல முடியாத உணர்வுகளை உணர்ந்தவர்கள்-இவைகளின் பிரதிபலிப்பாகத்தான் நான் இந்தப் புத்தகத்தை பார்க்கிறேன்.

ஒருவரை நேசிக்கத் தொடங்கிய பிறகு நம் உலகம் மிகச் சிறியதாகி விடுகிறது. அந்த இருவரே ஒரு முழு உலகமென அவர்களின் ஒவ்வொரு உணர்வும் ஆழமாக அழுத்தமாக தெளிவாக..கவிதையை விட வேறெது சொல்ல முடியும்?!
காதலுக்காகவே,காதலால்..காதலால் ஆன ஒரு படைப்பு இது.
4 reviews
January 3, 2020
VERY LOVELY

Good and a lovely collection of thoughts
A nice love feel will surround you when u finish the book.
Lovely
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.