பெற்றோரை இழந்த இரு சகோதரிகளான கிருஷ்ணஜாட்சியும் நீரஜாட்சியும் தாயின் பிறந்த வீடான ஸ்ரீனிவாசவிலாசத்துக்கு தாய்மாமா மற்றும் தாத்தா பாட்டியின் ஆதரவின் கீழ் தஞ்சமடைகின்றனர். தாயின் காதல் திருமணம் ஏற்படுத்திய அதிர்வலையால் அங்கு சிலரின் வெறுப்புக்கு ஆளாகும் அவர்களின் வாழ்வில் இனிய அதிர்ச்சியாய் இடம்பிடிக்கின்றனர் மாமாவின் மகன்களான ஹர்சவர்தன் மற்றும் ரகுநந்தன்.. கிருஷ்ணஜாட்சி மற்றும் நீரஜாட்சிக்கு இடையேயான பாசம் கலந்த தாய்மையுணர்வு, பேத்திகளுக்கும் தாத்தா பாட்டிக்குமான பாசப்பிணைவு, கிருஷ்ணஜாட்சி மற்றும் ஹர்சவர்தனின் மலரினும் மெல்லிய காதல், நீரஜாட்சி மற்றும் ரகுநந்தனின் மோதல் கலந்த காதல் இவற்றை அழகாக விவரிக்கும் கதை தான் 'பூங்காற&#