Jump to ratings and reviews
Rate this book

அஜ்னபி

Rate this book
There are still simple human folks amidst extremists and revolutionaries in the Islamic society. This is sensitive story, mingled with subtle humour, the ordinary people who went to Arab countries to earn their livelihood.

336 pages, Paperback

Published December 1, 2019

11 people are currently reading
142 people want to read

About the author

Meeran Mitheen

5 books3 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
27 (33%)
4 stars
42 (51%)
3 stars
8 (9%)
2 stars
4 (4%)
1 star
0 (0%)
Displaying 1 - 15 of 15 reviews
Profile Image for P..
531 reviews125 followers
March 29, 2020
4.5

முடித்த பின் ஒரு மாதமாகியும் மதிப்புரை எழுத முடியாவிட்டாலும் அஜ்னபி இன்னும் மனப்பரப்பில் ஓர் ஓரத்தில் மிதந்த படியே இருந்தது. பிழைப்பு தேடி வந்த பிறநாட்டவரை அரபியர்கள் அலட்சியமாக அழைக்கும் சொல் அஜ்னபி. தமிழகத்தில் இஸ்லாமியர் வாழ்க்கையும், அவர்கள் அரபுதேசம் சென்றால் சந்திக்கும் கொடுமைகளும், ஈட்டும் பெரும்பொருளும், அந்நியர்களாக அவர்களுக்கு நேரும் துயரங்களும், மனிதனின் பல்வேறு முகங்களைப் பற்றி அவர்கள் கண்டுகொள்ளும் உண்மைகளுமே அஜ்னபியின் கரு. அற்புதமான வேகத்துடன் நகரும் கதை தன் சுழலில் பல கதாபாத்திரங்களின் கடந்தகால வரலாற்றையும் நிகழ்கால நிதர்சனத்தையும் மோதவிட்டு ஏற்படுத்தும் தாக்கங்கள் பல. ரஜினியை ஓர் இஸ்லாமியக் கதாநாயகனாகக் கற்பனை செய்யும் ஓர் அட்டகாசமான அத்தியாயம் தமிழ் நாவல்களின் பக்கங்களில் இதுவரை அடையப்படாத ஒரு நகைச்சுவை உச்சத்தைத் தொடுகிறது. இந்திய மற்றும் தமிழ் இஸ்லாமிய வாழ்வின் பல அறியாப்பக்கங்களும், அவர்கள் சந்திக்கும் தனித்தன்மையுடைய சிக்கல்களும், அடையாளத்தைச் சூழ்ந்து தொடர்ந்து எழுப்பப்படும் கேள்விகளும் உளைச்சல்களும், அவர் சமூகங்களுக்குள் நிலவும் அரசியலும் விமர்சனமும் மொழியும் − இப்படி நாம் பொதுவாக அறியாத பற்பல விஷயங்கள் அஜ்னபில் கொட்டிக் கிடக்கின்றன. சுவாரஸ்யமான கதையோட்டமும், அருமையான மொழியும், மிக இயல்பான வசனமும், மிகவும் கவனிக்கப்பட வேண்டிய பேசுபொருளும், நினைவில் நிற்கும் மாந்தர்களும் அஜ்னபியை தமிழின் சிறந்த புதினங்களில் ஒன்றாக உயர்த்திப் பிடிக்கின்றன. ஒரு குறை: பெண் பாத்திரங்கள் பிரதானப்படுத்தப்படவே இல்லை - கதை இந்தியாவில் நகரும் போதும் சரி, அரபுலகில் நகரும் போதும் சரி. இந்ந குறை இவ்வாண்களின் உலகத்தை அடிக்கோடிட மைதீன் உள்நோக்கத்துடன் எடுத்த முடிவா, இல்லை சமூகத்தின் இயல்பான பிரதிபலிப்பா எனத் தெரியவில்லை.

இப்படி ஒரு நாவல் வந்து ஏழு வருடங்கள் ஆகியும் இப்போது சமீபமாக வெற்றிமாறனின் பரிந்துரையால் மட்டுமே பொதுவெளிச்சத்திற்குள் அது நுழைந்திருப்பது தமிழில் தரமான, பிரபலமான இலக்கிய விமர்கர்கள் இல்லாத வெற்றிடத்தை அப்பட்டமாக்குகிறது.
Profile Image for Kalaiselvan selvaraj .
135 reviews18 followers
January 30, 2021
அரபு தேச மக்கள் பணம் படைத்த செல்வந்தர்கள் அவர்கள் என்னிடம் இவ்வளவு செல்வம் உள்ளது என பெருமைபடுவதில்லை மாறாக அவர்களிடம் எத்தனை பேர் அடிமைகளாக(அஜ்னபி) உள்ளனர் என்கிற எண்ணிக்கையை வைத்தே பெருமைபடுபவர்கள்.

பிரிவு, ஏக்கம், இன்பம், துன்பம் எல்லாம் கடிதம் வழியாகவும், டெலிபோன் பூத் மூலமாகவும் நடந்த காலத்தில் நடைபெறும் கதை. அரபு தேசத்தில் வேலைக்கு சென்ற மகனின் முகத்தை ஐந்து ஆண்டுகளாக பார்க்காத குடும்பம் மகனக்கு திருமணம் முடிக்க ஏற்பாடு செய்து வைத்து மகன் வருவானா என ஏங்கி தவிப்பது, தந்தை அரபு வாழ்க்கை போதுமென ஊர் திரும்பி தனது ஒரே மகனை அரபு நாட்டு வேலைக்கு அனுப்ப மகனோ தந்தையின் இறப்புக்கு ஊர் செல்ல அரபியிடம் அனுமதி கிட்டாததை நினைத்து அறையில் துக்க கண்ணீர் வடிப்பது,.... இது போல பல நிழ்வுகளை உள்ளடக்கிது இந்த அஜ்னபி.

நாவல் சில இடங்களில் நம்மை அவர்களுடன் சேர்ந்து சிரிக்க வைக்கும், அழவைத்தது, ஏக்கப்பட்ட, தனிமையில் வெறுப்படைய வைக்கிறது.
பொதுவாக மக்களுக்கு தெரிந்தெல்லாம் பாய்(இஸ்லாம் மதத்தினர்)ங்க இசியா துபாய் போயி நல்லா காசு சம்பாரிச்சுட்டு வத்துருவாங்க என்பது. ஆனால் இந்த நாவலை படித்தபின் உங்கள் எண்ணம் மாற்றமடையும். -கலைச்செல்வன் செல்வராஜ்.
Profile Image for NaGa.
7 reviews3 followers
February 21, 2020
ஃபைசல், மம்மலி, குமரி இக்பால், கருத்தான் காதர், பிரபு, மிஷரி, அபுஅப்துல்லாஹ், ஆருஷா இன்னும் எத்தனையெத்தனை முகங்கள் மனதில் நீக்கமர பதிந்துவிட்டன!. வாசிப்பின் முழு அனுபவத்தை விலக்கிச்சொல்ல இயலா ஒரு விசாலக்கூண்டில் மனது சிக்கிக்கொண்டுவிட்டது, உங்களையும் உள்ளே இழுத்துக்கொள்ள மட்டும் ஆவல் வலுக்கிறது. :)
Profile Image for Shanmugam Udhayan.
50 reviews10 followers
February 21, 2020
அஜ்னபி - மீரான் மைதீன்

ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவுடன் ஹாஸ்டலை காலி செய்துவிட்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமலிருந்த நேரத்தில் உடன் படித்த நண்பன் பேங்கில் வேலை வாங்கி தருவதாக சொல்லியிருந்தான், அவனும் உடன் வருவதாக சொன்னதை நம்பி ஆகஸ்ட் 2005-ல் ஒரு கட்ட பையில் ஒரு போர்வை, புத்தம் புதிதாக இரண்டு சட்டை பேண்ட்டுகளுடன், சென்னை பழவந்தாங்கலில் உள்ள ஒரு வீட்டில் வந்திறங்கினேன், உடன் வருவதாக சொன்ன நண்பன் அன்று வரவில்லை இரண்டு நாள் கழித்து வந்தான்... அந்த அறையில் எட்டு நபர்களுக்கு மேல் இருந்தனர், ஒத்த வயதினர் என்ற போதிலும் அனைவரும் அந்நியர்களாக தோன்றினர்.... அதுவரை சென்னைக்கு வராத எனக்கு (இரண்டு முறை கவுன்சலிங்கை தவிர) புது உலக்கத்துக்கு வந்த உணர்வை தந்தது... இந்த ஆகஸ்ட் வந்தால் 15 வருடம் நிறைவடைகிறது... இந்த 15 வருடங்களில் பழவத்தாங்கல் மற்றும் குரோம்பேட்டையில் பேச்சுலர் நாட்களை பெரிதாக நினைத்து பார்ததில்லை...
ஆனால் இந்த நாவலை படிக்கும் போது என்னுள் இருந்த மொத்த நினைவுகளையும் இழுத்து வெளியே போட்டுவிட்டது... இந்த கதையில் அரபு நாட்டில் வேலைக்கு சென்ற ஃபைசலை போல் தான் நான் சென்னைக்கு வந்தேன், பேங்கில் வேலை என்றவுடன் என்னுள் எழுந்த கற்பனைக்கு அளவே இல்லை ஆனால் முதல் நாளே தெரிந்து விட்டது சரியாக வந்து மாட்டிக் கொண்டோம் என்று... நாள் முழுக்க பேங்க் வாசலில் இருந்த புங்க மரத்தடியில் நிற்க வேண்டும்.. எப்படியாவது இந்த மார்கெட்டிங் உலகத்துலயிருந்து தப்பித்துவிட வேண்டும் என்று போராடிய நாட்களை நினைவு படுத்தியது இந்த நாவல்... வேறு ஊருக்கு சென்று வேலை செய்யும் அனைவருக்கும் மிக நெருக்கமான நாவலாக இருக்கும்...

சவுதி அரேபியாவில் நடக்கும் கதை, உரிய விசா இல்லாமல் அரபு நாட்டிற்கு சென்று அங்கே பல இடங்களில் வேலை செய்து, எதுவும் பிடிக்காமல் எப்படியாவது இந்தியாவுக்கு சென்று விடவேண்டும் என்று துடிக்குற ஃபைசிலின் கதைதான் அஜ்னபி... கதை நான்-லீனியராக நகர்கிறது, நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள் நிறைந்த இந்த கதையில் என்னை கவர்ந்த கதாபாத்திரம் ‘கருத்தான் காதர்’, அவன் வரும் அத்தியாயங்கள் அனைத்தும் சிறப்பானதாக அமைந்துள்ளது.. அனைத்து வகையான மனிதர்களையும் இந்த கதையில் வருவார்கள்.. உலகின் மோசமான மனிதனும் இதிலிருப்பான், உன்னதமான மனிதனையும் பார்கலாம். ஒரு பேச்சுலர் ரூம் வாரயிறுதியில் எப்படி குதூகலம் நிறைந்ததாக இருக்கும் என்பதை பல்வேறு உரையாடல்களின் வழியாக சொ��்லப்பட்டிருக்கும். அப்படி என்னை கவர்ந்த ஒரு விவரணை “அனைவரும் உறங்கிய பின்னும் தொலைக்காட்சியின் ஒளி அறையின் இருளை கூட்டியும் குறைத்தும் கொண்டிருந்தது” .. இந்த காட்சி இல்லாமல் ஒரு பேச்சுலர் அறை இருக்காது... நாவலை முடித்த விதம் அற்புதமாக இருந்தது. கடைசி மூன்று அத்தியாயங்கள் திரைபடத்தின் கிளைமேக்ஸ்கான பதட்டத்துடன் முடிந்தது.

பி.கு : இந்த நாவலை தழுவி வெற்றிமாறன் அடுத்த படம் எடுப்பதாக சொல்லியிருக்கிறார்.

5 reviews1 follower
July 14, 2021
பிழைப்பு தேடி அஜ்னபிகளாக அரபு தேசத்தில் வாழும் மனிதர்களின் கதை. உலுக்கி எடுத்து விட்டது என்பது தான் உண்மை. மிக நேர்த்தியான மொழிநடை.
56 reviews
May 11, 2021
என் தாத்தா வீடிருப்பது திருவனந்தபுரத்தில். தாத்தா காலையில் எழுந்தவுடன் "சலாம் காக்கா" என்பார். அவரிடம் நான் "அதென்ன தாத்தா, என்னப் போயி காக்கானு சொல்ற" என்று கேட்ட பொழுது, "இது அந்த காக்கா இல்ல, மரியாதையா சொல்ற காக்கா" என்று சொன்னார். கதை மாந்தர்கள் பேசிய மொழியினுயூடே தாத்தாவும் வந்து போனார்.

ஃபைசல், மம்மலிகா , மம்மக்கண், குமரி இக்பால், கருத்தான் காதர், பிரபு, மிஷிரிக்கிழவன், அபு அப்துல்லா, ஆருஷா, பணியடிமை இன்னும் எத்தனையெத்தனை முகங்கள் தீட்டும் அற்புதமான, பாலை நிலத்தில் பூவின் ஓவியமாக, நமக்குள் நிறைகிறது அஜ்னபி. குடும்ப நிலை காரணம் வெளிநாடுகளில் குறிப்பாக அரபு தேசங்களில் கிட்டத்தட்ட அடிமை வாழ்க்கை வாழ்த்தாலும் மனிதர்களுக்குள் தளும்பும் காதல், காமம், கோபம், பொறாமை, நட்பு, பணிவு, நன்றி, நினைவு, மனிதம் ஆகியவற்றை மிக சிறப்பாக நம் கண் முன்னே விரிக்கிறது.

காத்திரமான அரபிகளும் கனிவான அரபிகளும் அவர்களினூடே நிரம்பியிருக்கும் அஜ்னபிகளும், கூடவே அவர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளும், ஒளிவு வாழ்க்கை, தப்பித்தோடும் வாழ்க்கை இதனூடே துளிர்க்கும் காதல், அதன் பிரிவு, திருமண நினைவுகள், நடவாத திருமணம் முடிந்து பிரிந்து வரும் தருணங்களின் கனவுகளை பரந்த மணல்வெளியில் அசை போட்டு நடக்கும் ஒட்டகத்தின் பயணம்போல் மைதீன் நம்மை கூட்டிச்செல்கிறார். அரபு தேசங்களில் வாழும் அஜ்னபிகள் பற்றிய மிக நுணுக்கமான விவரணைகளிருந்தாலும், பெண்கள் நினைவுகளாக மட்டுமே வந்து போகிறார்கள். ஒரு வேளை நிஜத்திலும் அப்படித் தானோ.

பொதுவாக ஊரில் தெரிந்தெல்லாம் இக்காங்க சுலபமா துபாய் போயி நல்லா காசு சம்பாரிச்சுடுவாங்க என்பது. ஆனால் மைதீனின் இப்பதிவுக்குப் பிறகு அவர்களின் துயரங்களும் நமக்கு பரிச்சயமாகும்.

நன்றி மீரான்!
Profile Image for Ram.
120 reviews
February 16, 2026
இது ஒரே ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படைப்பாக மட்டும் இல்லாமல், வெளிநாட்டிற்கு வேலைக்காக இடம்பெயரும் கீழ்மட்ட மற்றும் நடுத்தர வர்க்க தமிழர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் சமூக ஆவணமாகத் தோன்றுகிறது. மீரான் மைதீன் இங்கு வெளிநாட்டை ஒரு கனவு இடமாக அல்ல, ஒரு “உறவுகளை மெதுவாக சிதைக்கும் இடமாக” காட்டுகிறார். பணம் சம்பாதிப்பது சமூகத்தில் மரியாதையைத் தரும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அந்தப் பணம் மனிதனின் உள்ளார்ந்த வாழ்க்கையை வெறுமையாக்கும் என்பதைக் கதாநாயகனின் அனுபவங்கள் மூலம் இயல்பாக வெளிப்படுத்துகிறார். குடும்பம், உறவு, சொந்த ஊர், அடையாளம் ஆகியவை எல்லாம் பொருளாதார தேவை முன் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுவது இங்கு ஒரு முக்கியமான சமூக உண்மையாகத் தெரிகிறது.

இது வெளிநாட்டு தொழிலாளியின் வாழ்க்கையை மிகைப்படுத்தாமல், மிக எளிமையாகவும் உண்மையாகவும் காட்டுகிறது. சமூகத்தில் வெளிநாட்டில் இருப்பவர்கள் “வெற்றி பெற்றவர்கள்” என்ற ஒரு பொதுவான கற்பனை உள்ளது. ஆனால் இந்த நாவல் அந்த கற்பனையை உடைக்கிறது. பணம் சம்பாதிப்பது வாழ்க்கையின் முழுமையான வெற்றி அல்ல, அது ஒரு தனிமையான போராட்டமாகவும் மாறலாம் என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக, கதாநாயகன் தனது சொந்த ஊருக்கும் வெளிநாட்டிற்கும் இடையில் ஒரு இடமற்ற மனிதனாக மாறுவது, நவீன இடம்பெயர்வு வாழ்க்கையின் சமூக விளைவுகளைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது. இது சமூகவியல் ரீதியாக மிகவும் முக்கியமான பதிவு.

இந்த நாவல் சமூகத்தின் மற்ற பரிமாணங்களை விரிவாக ஆராயவில்லை. உதாரணமாக, வெளிநாட்டு வாழ்க்கையில் உருவாகும் புதிய சமூக உறவுகள், தொழிலாளர் சுரண்டல், கலாச்சார மோதல்கள் போன்றவை ஆழமாக ஆராயப்படவில்லை. கதாநாயகனின் உள்ளார்ந்த மனநிலையிலேயே கவனம் அதிகமாக உள்ளது. இதனால், இது ஒரு முழுமையான சமூகப் படம் அல்ல, ஒரு குறிப்பிட்ட மனிதனின் உளவியல் அனுபவத்தின் வழியாகக் காட்டப்படும் சமூக உண்மை மட்டுமே என்ற வரம்பு இருக்கிறது. சில இடங்களில் சமூக விமர்சனம் மறைமுகமாக உள்ளது; அது நேரடியாக சமூக அமைப்பை கேள்வி கேட்கும் அளவுக்கு தீவிரமாக இல்லை.

இந்த நாவல் மனிதன் மெதுவாக தனது உணர்வுகளை இழந்து, ஒரு இயந்திரம் போல வாழும் நிலை சாதாரணமாகச் சித்தரிக்கப்பட்டு ஒரு சமூக சோகத்தை வெளிப்படுத்துகிறது. மனித உறவுகள் பணத்தின் பின்னால் புறக்கணிக்கப்படுவது ஒரு கடுமையான உண்மை என்றாலும், அதற்கு எதிரான எந்த எதிர்ப்பு அல்லது மாற்றத்தின் சாத்தியமும் இங்கு காட்டப்படவில்லை. இது சமூகத்தில் நிலவும் ஒரு அமைதியான ஒப்புதலைப் போல தோன்றுகிறது. மனிதன் தன்னை இழந்தாலும், வாழ்க்கை தொடர்கிறது என்ற இந்த காட்சிப்படுத்தல் வாசகருக்கு ஒரு அசௌகரிய உணர்வை உருவாக்குகிறது.

இந்த நாவல் மிக சாதாரண நிகழ்வுகளைப் பயன்படுத்தி ஒரு பெரிய சமூக உண்மையை வெளிப்படுத்துகிறது. எந்த பெரிய சம்பவங்களும் இல்லாமல், ஒரு மனிதனின் தினசரி வாழ்க்கையின் மூலம், இடம்பெயர்வு, தனிமை, மற்றும் அடையாள இழப்பு போன்ற பெரிய சமூக பிரச்சினைகள் வெளிப்படுகின்றன. இது ஒரு சமூக மாற்றத்தின் அமைதியான விளைவுகளை நுட்பமாக காட்டுகிறது. குறிப்பாக, வெளிநாட்டில் வாழும் மனிதன் தனது சொந்த ஊரிலும் முழுமையாக சேர்ந்தவராக இல்லாமல் போகும் நிலை, நவீன உலகமயமாக்கலின் ஒரு முக்கியமான சமூக விளைவாகும்.

இந்த நாவல் சமூகவியல் ரீதியாக ஒரு முக்கியமான மற்றும் உண்மையான பதிவு. இது வெளிநாட்டு வாழ்க்கையின் வெளிப்புற வெற்றியை அல்ல, அதன் உள்ளார்ந்த சமூக மற்றும் மனநிலை விளைவுகளை வெளிப்படுத்துகிறது. ஆனால் இது ஒரு பரந்த சமூக அமைப்பை முழுமையாக ஆராயாமல், ஒரு தனிநபரின் அனுபவத்தில் மட்டுமே சுருங்கி நிற்கிறது என்ற வரம்பும் உள்ளது. இது ஒரு உண்மையான சமூக அனுபவத்தை துல்லியமாகவும் நேர்மையாகவும் பதிவு செய்கிறது, ஆனால் சமூகத்தின் பல அடுக்குகளை விரிவாக ஆராயும் முழுமையான பரப்பளவு இதில் இல்லை.

அஜ்னபி மற்றும் The Goat Life (மலையாளத்தில் Aadujeevitham, நடித்தவர் பிரித்விராஜ் சுகுமாரன்) இரண்டும் சில முக்கியமான அம்சங்களில் மிகவும் ஒத்திருக்கின்றன. ஆனால் முழுமையாக ஒரே மாதிரி அல்ல. இவை இடையே உள்ள ஒற்றுமை மற்றும் வேறுபாடு சமூகவியல் மற்றும் உளவியல் ���ளவில் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் ஒற்றுமையைப் பார்க்கும்போது, இரண்டு படைப்புகளும் வெளிநாட்டிற்கு வேலைக்காக இடம்பெயரும் ஒரு மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டவை. The Goat Life படத்தில் நஜீப் என்ற மலையாளி தொழிலாளர் சவுதி அரேபியாவில் ஒரு ஆட்டு பண்ணையில் அடிமைபோல வாழ நேரிடுகிறது. அதேபோல் அஜ்னபி நாவலிலும், வெளிநாட்டில் வாழும் மனிதன் சமூகத்திலிருந்து மெதுவாக விலகி, தனிமை மற்றும் அடையாள இழப்பை அனுபவிக்கிறான். இரண்டிலும் வெளிநாடு ஒரு “வாய்ப்பு இடம்” அல்ல, ஒரு “மனிதனை மெதுவாக உடைக்கும் இடம்” என்று காட்டப்படுகிறது. குறிப்பாக, மனிதன் மனித உறவுகளை இழந்து, உள்ளார்ந்த முறையில் வெறுமையாக மாறுவது இரண்டிலும் முக்கியமான கருப்பொருள்.

ஆனால் முக்கியமான வேறுபாடு என்னவென்றால், The Goat Life ஒரு உடல் மற்றும் சமூக அடிமைத்தனத்தைப் பற்றிய கதை. அந்த படத்தில் நஜீப் வெளிப்படையாக சுரண்டப்படுகிறார், வன்முறையை அனுபவிக்கிறார், மனித உரிமை இழப்பை எதிர்கொள்கிறார். அவர் “மனிதனிலிருந்து மிருகமாக மாறும் நிலை” வரை தள்ளப்படுகிறார். அதற்கு மாறாக, அஜ்னபி நாவலில் கதாநாயகன் உடல் அடிமையாக இல்லை; ஆனால் மனதளவில் ஒரு அமைதியான அடிமையாக மாறுகிறார். அவர் வெளிப்படையான வன்முறையை அனுபவிப்பதில்லை, ஆனால் சமூக விலக்கு, உணர்ச்சி விலக்கு, மற்றும் அடையாள சிதைவு அனுபவிக்கிறார். அதாவது, Goat Life ஒரு வெளிப்புற போராட்டம்; அஜ்னபி ஒரு உள்ளார்ந்த போராட்டம்.

மற்றொரு முக்கியமான வேறுபாடு, Goat Life survival story ஆக உள்ளது. அதில் கதாநாயகன் தப்பிக்க வேண்டும், உயிர் பிழைக்க வேண்டும் என்ற ஒரு தெளிவான நோக்கம் உள்ளது. ஆனால் அஜ்னபியில் survival itself ஒரு கேள்வியாக மாறுகிறது. கதாநாயகன் உயிருடன் இருக்கிறார், ஆனால் வாழ்க்கையின் அர்த்தத்தை இழந்திருக்கிறார். Goat Life physical suffering பற்றி பேசுகிறது; அஜ்னபி existential suffering பற்றி பேசுகிறது.

சமூகவியல் ரீதியாக பார்க்கும்போது, Goat Life வெளிநாட்டு தொழிலாளர் சுரண்டலை நேரடியாக விமர்சிக்கிறது, ஆனால் அஜ்னபி வெளிநாட்டு வாழ்க்கை மனிதனின் அடையாளத்தை எப்படி மெதுவாக அழிக்கிறது என்பதை அமைதியாக காட்டுகிறது. Goat Life ஒரு extreme example; அஜ்னபி ஒரு common example. Goat Life ஒரு விபத்து போன்றது; அஜ்னபி ஒரு சாதாரண வாழ்க்கை நிலை போன்றது.

இந்த இரண்டும் ஒரே கருப்பொருளை (வெளிநாட்டு வாழ்க்கை, தனிமை, மனித சிதைவு) பகிர்ந்தாலும், Goat Life ஒரு dramatic மற்றும் வெளிப்புற வேதனையின் கதை, அஜ்னபி ஒரு அமைதியான மற்றும் உள்ளார்ந்த வெற்றிடத்தின் கதை. அதனால், Goat Life மற்றும் அஜ்னபி “ஒரே வகை அனுபவத்தின் இரண்டு வேறு வடிவங்கள்” என்று கூறலாம். ஒன்று உடலை உடைக்கும் கதை, மற்றொன்று மனதை காலியாக்கும் கதை.
Profile Image for Ashok Chemarx.
52 reviews1 follower
April 29, 2021
இரவுநேரத்தில் ஏசியின் பச்சை விளக்கு தன் இருப்பை அறையினுள் நிறப்பிவிடுகிறது போல இந்நாவல் அதன் இருப்பை என் மூலையில் நிறப்பிவிட்டுவிட்டது.
பைசலும் ஆருஷாவும் மனதில் நிரம்பி இருக்கிறார்கள்.
32 reviews
December 31, 2023
சில வருடங்களுக்கு முன் இணையத்தளத்தில் ஒரு தகவலை படித்தேன். இயக்குனர் வெற்றிமாறன் ‘அஜ்னபி’ எனும் நாவலை அடிப்படையாக கொண்டு ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்று. நான் அவரின் படங்களை ரொம்பவும் ரசித்து இருந்ததால் ஒரு ஆர்வத்தில் அந்த நாவலை வாங்கினேன். வாங்கி சில வருடங்கள் கழிந்து விட்டன.

வெற்றிமாறனின் ‘விடுதலை’ எனும் திரைப்படத்தை பார்க்கையில் எனக்கு அஜ்னபி புத்தகத்தை வாங்கியது ஞாபகம் வந்தது. அதன் அடிப்படையில் திரைப்படம் வெளிவருமா என தெரியவில்லை. அனால் அந்த கதையை படிக்க வேண்டும் என்று ஒரு ஆர்வம் என்னுள் எழுந்தது. நாவல்களை பொதுவாக இரண்டு வகைகளாக பிரிக்க கூடும். ஒரு வகையில் கதையின் விறுவிறுப்பும், அதில் வரும் திருப்பங்களும், ஆச்சரியமூட்டும் காட்சிகளும் நம்மை பக்கங்களை திருப்பி கொண்டே இருக்கும் படி தோன்ற வைக்கும். மற்றோரு வகையில், கதையில் விறுவிறுப்பு கம்மியாக இருந்தாலும், ஆழமான கதாபாத்திர அமைப்பினாலும், இடம் மற்றும் பின்னணியின் விவரத்தினாலும், கதையினுள் நாமே பயணிப்பது போல ஒரு அனுபவம் கிடைக்கும். ‘அஜ்னபி’ இரண்டாவது வகையை சேர்ந்தது.

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூறுகளில், சவுதியில் பிழைப்பை தேடி போகும் ஒரு தமிழ்நாட்டு இளைஞன் தான் இந்த கதையின் நாயகன். அவனுக்கு அந்த புதிய நாட்டில் ஏற்படும் சங்கடங்கள், சேரும் நட்புக்கள், நேரும் அனுபவங்கள்ல், துரோகங்கள், ஏமாற்றங்கள், காதல், அன்பு என பல உணர்ச்சிகளை கதையாசிரியர் மீரான் மைதீன் வெளிகொண்டுவருகிறார். அந்த இளைஞன் தான் முக்கிய கதாபாத்திரம் என்றாலும், கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் மனதில் நிற்கக்கூடும் விதத்தில் எழுதப்பட்டுள்ளன. இக்பால், மம்மலி, மம்மனிபா, மற்றும் பல, பல கதாபாத்திரங்கள் ஒன்றொன்றும் தன்னிதன்மையுடனும், நிஜ மனிதர்களை போல் ஒரு நம்புமத்தன்மையும் கொண்டுள்ளன.

நாவலில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம் அதன் காட்சிகளின் உருவாக்கம். புத்தகத்தின் சில பகுதிகளின் ஆரம்பத்தில் ஒரு காட்சியை நாம் படிக்கும் பொழுது, 'இது எப்பொழுது, எப்படி நிகழ்ந்தது?' என நம்முள் ஒரு கேள்வி எழும். அந்த கேள்வியை கதாசிரியரும் புரிந்து கொண்டது போல், பகுதியின் அடுத்த பக்கத்திலிருந்து அந்த காட்சிக்கு முன் என்ன நடந்தது, எப்படி கதாபாத்திரங்கள் இந்த காட்சியில் வந்து சேர்ந்தார்கள் என்பதை அந்த பகுதியின் மிச்ச பக்கங்கள் விளக்குகின்றன.

குறைகள் இல்லாத எந்த புத்தகமும் இருப்பதில்லை. இந்த நாவலை நான் பெரும்பாலும் ரசித்திருந்தாலும், ஒரு சில இடங்களில் ரொம்ப நீடித்து கொண்டு போனது போல ஒரு உணர்வை ஏற்படுத்தியது. முன்பு சொன்னது போல், இது வேகமும் விறுவிறுப்பும் கொண்ட நாவல் இல்லை. இதை பொறுமையுடனும், சரியான எதிர்பார்ப்புடனும் படித்தால், ஒரு சிறப்பான அனுபவத்தை தர கூடும்.
Profile Image for Poyyamozhi.
16 reviews4 followers
May 24, 2024
I have been working in dubai for the past 16 years this novel very much relates my entire gulf life , the multinational friends, Indians room friendship, back home thinking of everyone all the time , the weekend celebrations, the shopping, cars , lifestyle, sea breeze, highways, heat, cold, and its relation with sand storm, the real good and sad moments we miss, sacrifices we make , beauty of desert . Its an epitome of gulf expatriate life. Salute to the author for such a fabulous work.
Profile Image for Jagannath Radhakrishnan.
2 reviews1 follower
February 21, 2020
Very elaborate documentation, per se, of the life style of people living in middle east for employment. The story deals with all shades of a human being who goes through difficulties for survival.
The story is in a way tiringly detailed that I felt digressed the narrative.
2 reviews
June 8, 2021
சிறப்பான புத்தகம்... வேற்றுமொழி கலப்பின் காரணமாக முதல் சில அத்தியாயங்கள் சரியாக புரியவில்லை... சற்றும் எதிர்பாராத முடிவு.. ஆருஷாவின் முகமும் பைசலின் தாடியும் நினைவில் நிற்கின்றன,குமரி இஃபாலின் கதைகள் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்க���ன்றது...
Profile Image for GaneshPandian RK.
12 reviews3 followers
October 31, 2020
வளைகுடாவில் வேலை தேடிச் சென்றவர்களின் வாழ்க்கை குறித்த அழுத்தமான பதிவு.
Profile Image for Jagan Sagaya Nathan.
26 reviews2 followers
April 14, 2021
மனிதனின் வாழ்க்கை இவ்வளவு வலிகள் நிறைந்ததா
Displaying 1 - 15 of 15 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.