இந்த கதை சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நடந்திருக்க வேண்டும். காலம் பல நூதனமான வசதிகளை நமக்கு கொடுத்ததுடன், நம் வாழ்க்கை முறையையும் மநிதர்களின் மனப்போக்கையும் கூட பெரும் அளவில் மாற்றி இருக்கிறது. கதை நடந்த காலத்தில் வீட்டுக்கு வீடு எல்லா பெண்களும் வேலைக்கு போய் கொண்டிருக்கவில்லை. பெண்கள் கூட்டமாக மெடிகல் காலேஜிலும் இஞ்ஜினியரிங்க் காலேஜிலும் சேருவதற்கு வரிசையில் நிற்கவில்லை. மருத்துவ கல்லூரிகள் இன்று ஊருக்கு ஒன்று என்பதை போல் அன்று இருக்கவில்லை. பெரிய மருத்துவ மனை என்றாலே மதறாஸில் ஜேனரல் ஆஸ்பத்திரி என்ற அரசு மருத்துவ மனைதான். ரொம்ப உயிருக்கு போறாடும் நோயாளிகளை அந்த காலத்தில் பெரிய ஆஸ்பத்திரியான ஜி.எச்.