Jump to ratings and reviews
Rate this book

கன்னித்தீவு: KanniTheevu

Rate this book
ஒரு தீவு, ஒரு கர்ப்பிணி, சில பழங்குடிகள். இது தான் இந்த நாவல். மானுடம் அடையாள வேறுபாடுகள் கடந்தது. துயர்மிகு கண்களும், மகிழ்வின் புன்னகையும், நீருபூத்த காமமும் புரிய தேசமும் பாஷையும் தடையில்லை. அப்படி அந்நிய நிலப் பெண்ணொருத்தியை மையமிட்டு ஒரு தொல்பழங்குலம் தடுமாறிச் சுழல்வதன் நியாயங்களை, அபத்தங்களைத் தீட்டிக் காட்டுகிற இப்பிரதி நவீன மனிதனுக்கும் ஆதி இயற்கைக்குமான நிழல் யுத்தத்தில் யாருக்கு வெற்றி என்ற வினாவை எழுப்புகிறது.

382 pages, Kindle Edition

Published February 21, 2020

7 people are currently reading
21 people want to read

About the author

C. Saravanakarthikeyan

25 books9 followers
C. Saravanakarthikeyan (Tamil: சி. சரவணகார்த்திகேயன்) (born 13 August 1984), known as CSK is a Tamil writer. He entered the field in 2007 and published 6 books to date. His writings appeared in many top Tamil magazines – both print and electronic media. His works include poems, short-stories, essays, reviews and translations. He got Tamil Nadu State Government's Award for Best Book (2009) and Kungumam Magazine's Prize for Best Poem (2007). He is a software engineer by profession and is now living in Bangalore.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (23%)
4 stars
13 (43%)
3 stars
6 (20%)
2 stars
2 (6%)
1 star
2 (6%)
Displaying 1 - 3 of 3 reviews
6 reviews
April 3, 2020
நல்லதொரு படைப்பு

அந்நிய மனிதர்களை ஏற்க மறுக்கும் பழங்குடி மக்கள் மத்தியில் சிக்கிக்கொண்ட கர்ப்பிணி பெண் ஒருவளின் கதை. சுவாரஸ்யமாக செல்கிறது. கண்டிப்பாக வாங்கலாம். பிடித்தவருக்கு பரிசளிக்கலாம். இந்த புத்தகத்தை படித்து முடித்ததும் என்னடா மண்ணாங்கட்டி நாகரிகம் என்று தற்கால நாகரிகத்தை புறக்கணித்து துணிமணிகளை அவுத்துப்போட்டு ஆதிகால மனிதனாக வாழ வேண்டும் என்று ஆசை பிறக்கும்.
December 23, 2021
#கன்னித்தீவு

இந்த நாவல் படித்து முடிக்க எனக்கு ஒருமாதம் ஆகிவிட்டது பல வேலைகளுக்கு நடுவே படித்துக்கொண்டிருப்பதாள் இதற்காக அமர்ந்து படித்தாள் முழுதாக நான்கு மணிநேரமத்திற்குள் முடித்துவிடலாம் அவ்வளவு சரளமான சொல்லாடல் மொழிவளம்...கதை களம் ரொம்ப சாதாரணமான தமிழ் சினிமாக்களில் வருவதுப்போல் இருந்தது அடுத்தடுத்த கனங்களை ஈசியாக முன்னோசித்துவிடுமளவிற்கு இருந்தது... சீரியல் பார்த்ததைப்போல் ஓர் உணர்வு.. இருந்தாலும் சில இடங்களில் அவத்தார் படத்தை பார்ப்பதை போன்ற உணர்வு .. லெமூரியா பழங்குடியினர் அவர்களின் வாழ்வியலை சொல்லிருக்கும் இடங்கள் எனக்கு அவ்வளவாக ஏற்புடையதாக இல்லை....... ரொம்ப குளோரிஃபை செய்து எழுதியது போன்ற இடங்கள் ஏராளம்... தாய்மை,பாசம் இதையெல்லாம் சொல்வது அந்த கதை களத்திற்கு அபத்தமான ஒன்றாக இருந்தது.. லெமூரியா தீவில் பார்வதி தனக்கு தானே பிரசவம் செய்துக்கொள்ளும் இடம் எனக்கு ஏனோ வைரமுத்து எழுதிய கருவாச்சி காவியத்தில் கருவாச்சிக்கு அவளே பிரசவம் செய்துக்கொள்ளும் இடம் வந்துப்போவது போல் இருந்தது..நாவலின் 33,34 அத்தியாயம் எல்லாம் ரொம்ப க்ரீன்ச்சியாக இருந்தது.. பழங்குடியினருக்கு நெருப்பை பயிற்றுவிக்கும் ஹீரோயினியின் செயல்...எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை....... ஆரம்ப கட்ட வாசிப்பாளர்கள் நிச்சயம் வாசிக்கலாம் எளிமையான சொல்லாடல்...

பின்குறிப்பு : இந்த எழுத்தாளர் எழுதிய நூல்களில் நான் வாசிக்கும் முதல் நூல் இது..

நன்றி
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.