"உடல் நலம் பேணுதல்" எல்லோருக்கும் பொதுவானது. எத்தனை கோடி பணம் இருந்தாலும், எத்தனை பெரிய பதவிகள் இருந்தாலும், எவ்வளவு பெரிய புத்திசாலியாகவோ அல்லது அறிவாளியாகவோ இருந்தாலும், நோய் என்று வரும் போது, பணம், படிப்பு, பதவி போன்றவை பயனற்று போய் விடுகின்றன. எனவே, நோய் வராமல் காத்துக்கொள்ளுவது மிக மிக நன்று. நோய் வந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கு வழிமுறைகளை கண்டு பிடிப்பது மிக முக்கியம். சில நெறி முறைகளை கடைபிடிப்பதன் மூலம், நோய் வராமல் காத்துக்கொள்ள முடியும் அல்லது நோயின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். சரியான உணவு பழக்க்ங்கள், தேவையான உடல் பயிற்சி முறைகள், போதுமான அளவு உடலுக்கு வேண்டிய நல்ல தூக்கம் - இவையே சிறந்த மருந்துகளாகும்.