கொடைக்கானலில் நாயகன் ரித்தேஷ் குடும்பத்திற்க்கு சொந்தமான பங்களாவை ரிசார்ட்டாக மாற்ற கொடைக்கானல் செல்கிறான் அவனுடைய வெள்ளைக்கார காதலியுடன். ஆனால் அன்றிரவே ரித்தேஷை சந்திக்க வந்த ஆர்க்கிடெக்ச்சர் மயில்வாகனன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார் . அடுத்து வந்த ஆர்க்கிடெக்ச்சரும் அவர் வீட்டில் மர்மமான முறையில் இறக்கிறார். இதை யார் செய்ததென்று போலீஸ் திணறுகிறது. என்ன நடக்கிறது என்று தெரிந்துக்கொள்ள ரித்தேஷின் பெரியப்பன் மகன் ரஜத் வர அவனும் கொலை செய்யப்படுகிறான். இதன் தொடர்ச்சியாக ரஜத்தின் காதலி கத்ரீனும் கொலைசெய்யப்பட குணசேகரனுக்கு தேவையில்லாத சந்தேகங்கள் எழுகிறது. அதை தீர்த்துக்கொள்ள கொடைக்கானல் வருகிறார்.