கடந்த 200 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் வாழ்ந்து, முக்தியான சித்தர்கள் பற்றிய முழுமையான குறிப்புகள் பதிவாகாமலே உள்ளது. இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் “விதியை மாற்றும் 40 சித்தர்கள்” நூலை எழுத்தாளரும், பத்திரிகையாளருமான செ.செந்தில்குமார் எழுதியுள்ளார். ஜீவ சமாதிகளில் வாழும் மகான்களின் அதிசய பெட்டகமாக இந்த புத்தகம் திகழ்கிறது.