இதுவரை எஸ்.ரா எழுதிய பலவும் மிக தீவிரமான கதைகளம் கொண்டவை , ஆனால் இதுவோ , மிக சிறிய , எளிய காதல் கதை .
கோடைக்கும் , குளிருக்குமான வித்யாசமே நாம் வாழ நினைப்பதும் , வாழ்வதும். பதின் வயதில் தோன்றிய காதல் , வாழ்க்கையின் , பல திருப்பங்களுக்குள் அகப்பட்டு , நாம் வாழ்வது வேறொன்றாகவே இருக்கிறது.
முற்றிலும் , புது கதைக்களமோ , இலக்கியமோ இல்லை, எனினும் ஒரு விடுமுறை நாளில் எளிதாக படித்து முடிக்கக்கூடிய ஒன்று .