Jump to ratings and reviews
Rate this book

Ithuvae Sananaayagam

Rate this book
அறிஞர் தொ. பரமசிவன் ஒரு பண்பாட்டுத் தொல்லியலாளர். வாய்மொழி வழக்காறுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம் அவருடைய அகழ்வாய்வுக் களங்கள். பட்டறிவை முதன்மையாகவும் படிப்பறிவைத் துணையாகவும் கொள்வது அவரது முறையியல். இம்முறையில் அவர் சாதாரண நிகழ்வுகளை அகழ்ந்து காட்டும் போது புலப்படும் உண்மைகள் நமக்கு அசாதாரணமாகத் தோன்றி வியக்க வைக்கின்றன. அந்த முறையியல் கொண்டு தொன்மைகளை மட்டுமன்றி அண்மைப் போக்குகளையும் கூட அகழ்ந்து காட்ட அவரால் முடிகிறது. இத்தொகுப்பு ‘சமயமும் வழிபாடும்’, ‘உறவும் முறையும்’ ‘ஆளுமைகள்’, ‘மதிப்புரைகள்’, ‘ஆய்வுப்பார்வை’ என்று அவரது கட்டுரைகளை வகைக்குள் அடக்க முயன்றிருக்கிறது.

kindle_edition

Published October 5, 2019

6 people are currently reading
48 people want to read

About the author

தொ. பரமசிவன்

34 books230 followers
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.

Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.

பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.

அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (31%)
4 stars
15 (42%)
3 stars
7 (20%)
2 stars
1 (2%)
1 star
1 (2%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Karthick.
371 reviews123 followers
April 21, 2023
பேராசிரியர் தொ.பரசிவன் பற்றி அறிமுகம் தேவையில்லை. நாட்டார் வழக்காற்றியலிலும், தமிழக பண்பாடு மானுடவியல் சார்ந்த ஆய்வுகளில் முன்னோடி. இந்நூலில் "தொன்மை, சமயம் , வழிபாடு, ஆய்வாளர்கள் பற்றிய கட்டுரை தொகுப்புகள் அடக்கம். அதில் சில கீழ்காண்பவை:

1. பூசாரிகள் என்றால் ஆண்களின் அதிகாரம் சார்ந்தே கோவில்களில் காண முடிகிறது. ஆனால், கடவுள் வழிபாட்டின் தொடக்கத்தில் பெண்களும் பூசாரிகளாக இருந்ததற்கான சான்று காமக்கோட்டம் எனும் பெண் தெய்வ கோவில்களில் இருந்துள்ளனர். இதில் - நெல்லை காந்திமதி, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி கோவில்கள் அடக்கம். பார்ப்பனீயம் ஊடுருவலால், மீனாட்சியிடம் இருந்த அரசையும் செங்கோலையும் பறித்து சுந்தரேஸ்வரருக்கு கொடுக்கப்பட்டது.

2. வைணவமும் ஸ்மார்த்த பிரமாணமும் கருத்தியல் ரீதியாக மோதிக்கொண்ட வரலாறு ஸ்வாரஸ்யமானது. தொண்டரடி பொடியாழ்வார், "பக்தனாக இருக்கும் ஒருவன் பிராமணனாக இருக்க முடியாது" என்று கூறுகிறார். ப்ராமணீயத்தின் சுத்த கோட்பாட்டுக்கு எதிராக நாலாயிர திவ்யா ப்ரபந்தத்திலும், ஆண்டாள் பாசுரத்திலும் கண்ணன் பாடல்கள் (அழுக்கு குழந்தையாக) மூலம் திகழ்கின்றன.

இதுபோன்று பல கட்டுரைகள் நமக்கு புதிய பரிமாணத்தில் வகுப்பு எடுக்கிறது.
Profile Image for Raavanan.
7 reviews
February 2, 2022
இதுவே சனநாயகம்

அழிந்து விட்டதாக கருதப்படும் எந்தக் கருத்தியல்களும் முழுமையாக மறைந்து விடுவதில்லை என்பதே இயற்கையின் விதி. அழிந்து விட்டதாக நாம் கருதுகிறவற்றின் எச்சங்கள் நமது வாழ்விலும் சமய வாழ்விலும் பரவலாக ஊடுருவிக்கிடக்கின்றன.

தாய் தெய்வ வழிபாடும் அதன் முன் பின் உள்ள வரலாற்றை குறித்த பதிவுகளும், டிராவிட மண்ணில் பிற சமயங்கள் தங்களை நிலைநாட்ட மேற்கண்ட மாற்றங்களை பற்றியுமான பதிவுகள் வியக்க வைக்கின்றன. நாட்டார் சமயம் (Folk Religion) மற்றும் தொல்பழஞ்சமயம் (Prescribe Religion) பற்றிய குறிப்புகளும் கட்டுரைகளும் மற்றும் சமய எச்சங்கள் என்ற தலைப்பில் உள்ள ஆய்வுக் கட்டுரைகள் பிரமிப்பை தருகின்றன.

பழந்தமிழர் மரபுகளை பற்றியும் அவர்களின் பண்பாடுகள் பற்றியும் படிப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் இந்நூலை எழுதியுள்ளார்.
Profile Image for Sanjeev Duglas.
89 reviews3 followers
May 14, 2021
இந்த புத்தகம் அவர் பல நூல்களுக்கு கொடுத்த அணிந்துரை எழுதப்பட்டுள்ளது.அவர் அஅவற்றை எழுதும் போது எவ்வளவு ஆராய்ச்சி செய்துள்ளார் என்பது தெரிகிறது.பெயரன் பெயர்த்தி பற்றிய ஆய்வு , பாரதிதாசன் குடும்பவிளக்கு பற்றிய பகுதி அருமை.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.