Jump to ratings and reviews
Rate this book

Venvel Senni - 2

Rate this book
இதுவரை எழுதப்படாத மௌரியப் பேரரசன் சாம்ராட் அசோகனுக்கும், தமிழகத்தின் மூவேந்தர்களுக்கும் கி.மு 261ல் நடைபெற்ற பெரும் போரே 'வென்வேல் சென்னி' புதினம். மௌரியரின் தமிழகப் படையெடுப்பிற்கும், மூவேந்தர்கள் மற்றும் வேளிர்கள் சேர்ந்து மொழிபெயர் தேயத்தில் நிலை நிறுத்தியிருந்த தமிழக கூட்டுப் படைகள் மோரியரைத் தடுத்து நிறுத்திய பெரும் போருக்கும் வரலாற்றில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.கலிங்கப் போர் நடைபெற்ற பிறகு ஒன்றரை ஆண்டு காலம் கழித்தே அசோகன் தனது 'தம்மா' மதக் கொள்கையை அறிவித்தான். அசோகன் கலிங்கப் போரை முன்னெடுத்தது முதல் அவனது பெளத்த மதமாற்றம் நடை பெரும் வரை இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற பெரும் போரே 'வென்வேல் சென்னி' புதினம்.

968 pages, Kindle Edition

Published April 13, 2020

Loading...
Loading...

About the author

C.Vetrivel Salaiyakkurichy

9 books9 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
32 (54%)
4 stars
16 (27%)
3 stars
9 (15%)
2 stars
2 (3%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
2,121 reviews1,109 followers
July 14, 2020
இரத்த ஆறாகப் பாயும் இரண்டாம் பாகம் போரின் சூழலை கண் முன் கொண்டு வருகிறது.

மோரியப் படைகள் கலிங்கத்தில் நடத்திய போர் முறைகளையும் எப்படி அதைத் தன் வசமாக்கியது என்பதை முழுமையாக இந்தப் பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

சென்னிக்காக எழுதப்பட்ட புதினம் என்பதால் கலிங்கப்போரிலும் சென்னியின் தலையீடு எவ்வகையில் இருந்தது என்பதும் அங்காங்கே கோடிட்டுக் காட்டப்படுகிறது.

பாரதம் முழுவதும் மோரியப் பேரரசு ஆளவேண்டும், தான் அதில் பட்டத்துராணியாகவும் தன் மகன் வாரிசாகவும் இருக்க வேண்டும் என்ற இந்திரசேனையின் கனவை இளவரசன் குணாளன் பொசுக்கியவுடன் அரசியல் வாழ்வையே வெறுத்துப் போய்த் தன்னை அடிப்பணிய வைக்கும் ஆணுக்காக இவள் காத்திருக்கும் மாற்றத்தை அடுக்கடுக்கான நிகழ்வில் மூலம் உணரவைக்கப்படுகிறது.

கலிங்கப் போரின் வெற்றிக்குப் பிறகு தமிழகத்திற்குள் நுழைய மோரியப் படைகளின் காத்திருப்பும் அதற்காகப் போடும் சூழ்ச்சிகளுடனான திட்டத்தையும் அணு அணுவாக வார்த்தை வடிவம் பெற்றிருக்கிறது. நடுவில் காதல், காமம், துரோகம், ஏமாற்றம், நட்பு என்ற உணர்வுகளும் வந்து வந்து செல்கிறது.

சென்னியை ஒரு அசூரனாகவே காட்டப்படுவதால் அந்த அளவிலே மனதில் நின்று போகிறான்.

காவளாலியும் கனவை துரத்துபவளும் சந்தித்த பிறகே மற்றொரு அரசியல் விளையாட்டு இருக்கும் போது அதைச் சாத்தியப்படுத்தித் தானே ஆகவேண்டும். பெண் பித்தில் கரை கண்ட சென்னிக்கு இந்திரசேனையின் அழகை பார்க்க வேண்டும் என்ற ஆசை எழ, தேடி வந்து அவளைத் தன் காமத்தாலே வீழ்த்திவிடுகிறான்.

பொதுபுத்தியில் ஒரு எண்ணம் இருப்பது எக்காலத்திலும் மாறுவது இல்லை. முக்கியப்படுத்தும் ஆண் காம விளையாட்டில் கரைகண்டவனாகவும் அவனுக்கான பெண் காத்திருந்து அவனை மட்டுமே அடைவது. இதிலும் அந்தப் போக்கே நிலவுகிறது.

மோரியப் படைகளும் தமிழர் படைகளும் சேர்ந்து கரும்பெண்ணை ஆற்றையே இரத்த ஆறாக மாற்றி, வீரர்களை மாறி மாறி கொன்று குவித்துக் கொண்டு வந்து இவ்விடத்தில் தமிழர்கள் கை ஓங்குவதுடன் இப்பாகம் முடிகிறது.
Profile Image for Meenakshisankar M.
304 reviews10 followers
March 31, 2026
This is a scintillating second part in the trilogy depicting the Mauryan empire’s attempt to conquer the Tamil kingdoms during Ashoka’s reign. While the first part was focused on preparatory plot, the second part ramps up the direct conflict and focuses on the battles. Chenni is shown as one of the greatest Tamil warriors of all time with his bravery and shrewd spy craft. The Mauryan army defeating Kalinga on its way to the south is one level of war, but the scale of Tamil forces beating them back trying to cross the Pennai river is epic. It features some of the most intense battle scenes I’ve read across everything. There is also an interesting romantic twist that is built up well and something to look forward to in the third part.
Profile Image for Dharshini.
70 reviews1 follower
September 10, 2023
பகுதி 2 - 🐯 தென்னாட்டு வேங்கை 🐯
⚔️'வீரன் எனும் சொல்லுக்கும் , ஆண்மகன் எனும் சொல்லுக்கும் சரியான பொருளை அவரை நேரில் காணும் போது தாங்கள் அறிந்து கொள்வீர்கள் '⚔️
மோரிய பேரரசன் அசோகன் கட்டளைக்கினங்க இந்திரசேனையின் ஆலோசனையின்படி மோரியர்களின் படை கலிங்கத்துடன் மோதுகிறது. இருவரும் வியூகம் வகுத்து போரிடுகிறார்கள். இறுதியில் மோரியர்கள் வெற்றி அடைகிறார்கள் . பின்பு தமிழகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர படைகளுடன் களம் இறங்குகின்றனர். ஆனால் அவர்களின் முயற்சி வெற்றிவேல் சென்னியால் முறியடிக்கப்படுகிறது. ஒரு மோரியரால் கூட கரும்பெண்ணை நதியை கடக்க முடியவில்லை. இந்திரசேனையும் வெற்றிவேல் சென்னியும் பல திட்டங்கள் தீட்டி போரிடுகிறார்கள் . இறுதியில் வெற்றி தோல்வி இருவருக்கும் சரிசமமாகிறது !!!!
✴️ கலிங்க மன்னன் இறக்கும் தருவாயில் மோரியரில் எவரேனும் ஆண்மகன் இருந்தால் கரும்பெண்ணை நதியை கடந்து சென்னியை தோற்கடிக்க சொல்கிறான் . அதே சமயம் இரும்பிடர்தலையனும் நேரடியாக எச்சரிக்கை விடுகிறான் .
✴️ தன்னைக் கொல்ல வந்த தசவர்க்கிகளை தனி ஒருவனாக வேட்டையாடுகிறான் சென்னி 🔥 அதிரடி தாக்குதல் நடத்திய செல்யூகஸை வீழ்த்துகிறான் . இதுவரை நதியை தாண்டாத சென்னியின் படை நதியை கடந்து மோரியரின் பாசறையின் மீது அதிரடி தாக்குதல் நடத்துகிறார்கள் ❤️‍🔥
✴️ சென்னியின் வெண்ணிற புரவிப்படை மோரியரின் புரவிப்படையை வீழ்த்துவது அருமை. விருகோதரனை கொல்லும் போது சென்னியின் ருத்ர தாண்டவம் உடலில் மெல்லிய நடுக்கத்தை தருகிறது.
✴️மோரிய இளவரசன் மகேந்திரனை அழுந்தூர் இளவரசி எழினி வில்லும் அம்பும்🏹 கொண்டு வீழ்த்துவது அபாரம் .
✴️ பிடர்த்தலையன் , மகேந்திர வளவன் , அழிசி ஆகியோரின் வீரம் போற்றப்பட வேண்டியவை
✴️ இந்திரசேனையின் திட்டங்கள், அவள் வகுக்கும் வியூகங்கள் அவளின் திறமை நம்மை அவளிடம் சரணடைய செய்கிறது.
✴️ சென்னியின் கார்முகிலன் 🐎 கூட நம்மை ஈர்க்கிறான் 🏇🏼..அவன் மனம் அறிந்து அது செயல்படும் விதம் அழகு . எரியொளிவீரன் சிலை கூட நம்மை எச்சரிக்கிறது கரும்பெண்ணை நதியை கடக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று!!!!!
✴️ முதல் பாகம் முழுவதும் அரசியல் சூழ்ச்சி என்றால் இரண்டாம் பாகம் முழுவதும் இரத்தமும் போர்க்களமுமாக இருக்கிறது .
போர்க்களத்தை நம் கண்முன் நிறுத்திய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் 👍🏼
Profile Image for Manju Senthil.
47 reviews4 followers
May 24, 2023

சவ்யசச்சனான வெற்றிவேல் இளஞ்செட் சென்னியின் போர்கள சாகசங்களே இந்த பாகம். கலிங்கர்களுக்கும் மோரியர்களுக்குமான போருடன் ஆரம்பமாகிறது கதை. இறுதியில், கரும்பெண்ணை நதியில், சென்னியின் வெற்றியுடன் முடிகிறது இப்புத்தகம்.

விறுவிறுப்பான கதையோட்டத்துடன், நான்கு போர் காட்சிகளைத் தாங்கி நிற்கிறது இப்புதினம். இவற்றில் எனக்கு மிகவும் பிடித்தது கலிங்கப்போர். மோரியர்களின் வாருண்டகத்திற்கும் கலிங்கர்களின் சரபயாளிக்கும் நடந்த யுத்தம் இப்புத்தகத்தை கீழே வைக்கவிடாமல் என்னை திணறடித்துவிட்டது. மோரியரின் குதிரைப்படையை சென்னி வீழ்த்தும் காட்சியை ஆசிரியர் கையாண்டவிதம் மிகச்சிறப்பு. பெண் கதாபாத்திரங்களில் அழுந்தூர் இளவரசி எழினியை மட்டும் தான் மனதுக்கு நிறைவாகச் சித்தரித்திருந்தார் எழுத்தாளர்.

முதல் பாகம் அரசியல் சூழ்ச்சிகளுக்கானது என்றால் இரண்டாம் பாகம் போர் களத்திற்கானது என்றே கூறுவேன். சரித்திர நாவல்களின் போர் பிரியரா நீங்கள்?!? இந்த புத்தகம் உங்களுக்காக!
Profile Image for Aargee.
183 reviews1 follower
September 15, 2023
Fantastic plot

But the story cannot be enjoyed by young readers, especially children. But it's an amazing historical fiction & hoping atleast 50% of them are based on true events
Displaying 1 - 5 of 5 reviews