கணவனே கண்கண்ட எதிரி! குறும்புத்தனமும் துடுக்குத்தனமுமே நான் என்று வலம் வரும் நமது துறுதுறு நாயகனின் காளை பருவத்தில், புயலாய் பிரவேசிக்கும் மங்கையவளின் கதை இது.. எதிரும் புதிருமான சந்திப்புக்கள் மோதலாய் உருவாகி இனி சந்தித்துக் கொள்ளாதிருப்பதே நலமென்னும் நிலையில், எழுதிச்செல்லும் எனது கைகள் மாறுமோ என்பது போல் திருமணப் பந்தத்தில் இணைத்து வைத்து தன் விளையாட்டைத் துவங்குகிறது விதி.. கணவனாய் கை கோர்த்திருப்பவனின் அன்பு அல்லாது வெறுப்பை மட்டுமே சுமந்திருக்கும் இதயத்தில், மெல்லியலாளின் காதல் தென்றலாய் வருடத் துவங்கும் நேரம், தெய்வமாகத் தொழப்பட வேண்டிய கணவன் எதிரியாய் உருமாறியது ஏனோ? தெய்வமாக இருக்க வேண்டிய கணவன் எதிரியாக மாறிப் ப