இந்த 6 கதைகளும் ஒன்றுக்கொன்று எந்தத் தொடர்புகளும் இல்லாதவை. ஒரு பிரச்சனையை சொல்வதற்காக மட்டுமே கதைகள் எழுதுகிறோம் என்கிற நிலையிலிருந்து விலகி ஒரு பிரச்சனையின் உள்ளும் புறமுமான உண்மைகளை நெருங்கிச் சென்று பார்ப்பதே கதை எழுதுதலின் நோக்கமாய் இருக்கிறது. பயணங்களிலும் நண்பர்களுடனான உரையாடல்களிலும் பெற்றுக்கொண்டவைகளின் பின்னால் அல்லாமல் விடுபட்டவைகளின் பின்னாலேயே மனம் அலைந்து திரிகிறது. எந்தவொன்றையும் முழுமையாகக் கண்டறியும் ஆய்வாளனல்ல என்பதால் அறிந்தவற்றை உரையாடல்களுக்குள் கொண்டுவர வேண்டுமென்பது மட்டுந்தான் எனக்கு இயலுமானதாய் இருக்கிறது.