இரு வேறு குடும்பச்சூழலில் வாழும் இருவருக்குள் காதல் முகிழ்க்கிறது. காதலுக்குக் கண்ணில்லைதான். காதலருக்குக் கண்ணோடு சிந்தனை செய்யும் திறனும் உண்டுதானே. ஆக, தம் காதல் கைகூட சிந்தித்துச் செயலாற்றும் காதலர்களின் காதல் தான் கதை.
அழகான எழுத்து நடை ...செந்தூரன் நிலா அருமையான ஜோடிகள் ...கதையை கையாண்ட விதம் அருமை ....
படிக்கவேண்டும் முதல் மாணவியாய் வந்து மருத்துவராக வரவேண்டும் என்ற தன் மற்றும் தனது குடும்பத்தின் எதிர்பார்ப்பை , இலட்சியத்தை பூர்த்தி செய்ய படிக்கும் அறிவாளியான கவின்நிலாக்கும் ...
தன் மனதின் விருப்பப்படி வாழ்க்கையை என்ஜோய் செய்து வாழும் படிப்பென்றால் கத தூரம் ஓடும் செந்தூரனுக்கும் இடையில் ஏற்பாடும் காதலும் அந்த காதலை வெற்றிகரமாக ஆக்க அவர்களின் போராட்டமுமே கதை ...
காலம் கைகூடினால் தங்களின் காதலும் கை கூடும் என்று பொறுமையாய் பெற்றோர்களின் மற்றும் மாமாவின் கனவை எவ்வாறு நிலா பூர்த்திச்செய்கிறாள் என்பதையும், நிலா ஒரு நிலைக்கு வரும் போது அவளை திருமணம் செய்யக்கூடிய சகல தகுதியை செந்தூரன் எவ்வாறு வளர்த்துக்கொள்கின்றான் என்பதை கதையின் போக்கில் சொல்லப்படுகிறது.