ஹாய் பிரெண்ட்ஸ் இதோ உங்களுக்காக எனது ஏழாவது நாவல் "என்னுயிரே நீ விலகாதே" கதையை பற்றி சுருக்கமாக இதோ பெண்ணவளின் குரலை மட்டுமே மனதில் வைத்துக் காதல் புரிந்த மன்னவன் அவன்... அறியா வயதில் அறிந்தே அவன் மேல் காதல் கொண்டவள் அவள்… இருவரும் ஓர் நாள் கல்யாணம் என்ற பந்தத்தில் பயணிக்க நினைக்கையில், விதி எனும் அரக்கன் பெண்ணவளின் உயிரெடுக்க வந்து நின்றான்... மன்னவனோ காதல் என்ற ஆயுதத்தால் விதியை வென்று தன்னவளைக் காத்துக் கரம் பிடித்தானா, இல்லையா என்பதே கதை இக்கதையை கொஞ்சம் நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக கொடுத்து இருக்கிறேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நன்றி என்றும் உங்கள் தீபஷ்வினி..