Jump to ratings and reviews
Rate this book

இடபம்

Rate this book
ஒன்றிலிருந்து விடுபடுவதற்காகப் பிரிதொன்றை கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறோம். இதுவரை புனைவில் அரிதாகக் கையாளப்பட்ட பங்குச் சந்தை- இடபத்தின் களமாக இருப்பது சுவாரசியம். நுட்பமான யதார்த்தப் பதிவு. உத்திரவாதங்களற்ற இன்றைய காலகட்டத்தில் பணம் தரும் பாதுகாப்பானது உடைத்து சொல்லப் பட்டிருக்கிறது. எந்தப் பாத்திரத்திற்குள்ளும் புகுந்துகொண்டு தன்னையிழக்கத் தயாரில்லை-நாவலின் இளம் நாயகி.பால்சொம்பில் தலைநுழைத்த பூனையாகி விடுவோமோ என்கிற அச்சத்தில் சளைக்காது போராடுகிறாள். போலச் செய்வதில் விருப்பமற்ற அவள், வாழ்க்கையைத் தன் வசத்தில் வாழ விழைகிறாள். அவ்வளவே. தேடலானது தரிசனத்திற்கேயன்றி உடமைப் படுத்துவதற்கில்லை. ஒன்றைக் கண்டடைந்த மனமானது, அடுத்ததைத் தேடித் தவிக்கிறது. அது கிடைத்ததும் – மற்றொன்று. இந்த முடிவிலாத் தேடலே வாழ்வின் உயிர். அழகிய பெங்களூரு நகரப் பின்னணியில்-இலகுவான தருணங்களிலும் மன அழுத்தங்களிலும் ரசமான நிகழ்வுகளிலும் புகுந்து தேடிக்கொண்டே இருக்கிறார், கண்மணி.

Paperback

Published January 1, 2020

3 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
2 (28%)
3 stars
4 (57%)
2 stars
0 (0%)
1 star
1 (14%)
Displaying 1 of 1 review
Profile Image for Premanand Velu.
241 reviews40 followers
May 11, 2024
சிலவாரங்களுக்கு முன் ஒரு நெடிய பயணத்தில் வாசித்து முடித்த புத்தகம் இது.

இதை எழுதிய பா.கண்மணி, ஒரு அரசு வங்கியில் பலகாலம் பணிபுரிந்து வங்கி செயல்பாடு மற்றும் பங்கு வர்த்தக நடைமுறைகளை நன்கு அறிந்தவர் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. பெங்களூரில் வசிக்கும் அவர் பெங்களூரின் பின்னணியில், அதன் பாந்தமான மத்திய நகர்ப்புற இடங்களில் கதையை உலவ விட்டிருப்பதில் ஒரு நேர்த்தி தெரிகிறது. கான்கிரீட் கானகமாக வெகு வேகமாக உருமாறிக் கொண்டிருக்கும் நகரில், வீட்டு மாடியில் நின்று நிமிர்ந்து பார்த்தால் நமக்கென்ற நீல ஆகாயமும், வாசலில் மெல்லிய தென்றலோடு பசுமையை தெளிக்கும் மரங்களும் எங்கே போயிற்று என்று பெருமூச்சுடன் வியக்கும் என்னைப்போன்ற 90களின் மனிதர்களின் குரலை ஒலிக்க விட்டிருக்கிறார்.

இடபம் என்பதற்கு காளை என்று பொருள் வருகிறது. பங்கு வர்த்தகத்தைப் பொறுத்தவரை, சந்தையின் போக்கு மிகவும் நம்பிக்கை தரக்கூடிய வகையில், பங்குகளின் விலை ஏறுமுகமாக இருக்கும் நிலையை குறிப்பதாகும். தனிப்பட்ட பங்கு முதலீட்டாளரைப் பொறுத்தவரை இது ஆர்வத்துடன் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவரைக் குறிக்கும்.

அந்த வகையில் பங்குச் சந்தை என்பதுதான் இந்தக் கதையின் நிகழ்களம். பங்குச்சந்தையின் அரிச்சுவடி தெரியாத என்னைப் போன்ற பால்வாடி வாசகர்களுக்கும் சுவாரசியமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிகபட்சம் ஓரிரு முறை சில துறைசார்ந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ள கூகுள்ளாண்டவரைத் தாட்டிப்பார்க்க வேண்டியிருந்தது. அந்தவகையில், தமிழில் இதுவரை வந்திராத ஒரு கதைக்களம் இது. இதைத் துணிந்து, முயன்று பார்த்து, சுவாரசியமாகப் படைத்த கண்மணி அவர்களைப் பாராட்டவேண்டும்.

அதைத்தவிர கதையின் போக்கு என்பது ஒரு சுதந்திரமான, சுய தேர்வுகள் கொண்ட, தன் தனிப்பட்ட தேவைகளுக்கு (மட்டும்) முன்னுரிமை கொடுக்கும் ஒரு தற்காலப் பெண்ணை மையமாக வைத்து, அவள் குரலில் பேசுகிறது. அந்தப் பெண்ணை விட, சராசரி தமிழ் வாசகர்களுக்கு இது coming of the age novel என்றுதான் சொல்லவேண்டும். அதனால் வாசித்த பின் சிலருக்கு, சற்று நெஞ்செரிச்சல் ஏற்படக்கூடும். அப்படி ஏற்பட்டால், அவர்கள், கதையில் வரும் அந்த முக்கிய பெண் பாத்திரத்தை ஆணாக உருவகப்படுத்திப் பார்க்கலாம். அப்படி செய்த பிறகு அந்தக் கதாபாத்திரத்தின் செயல்பாடுகள் எந்த நிலையதிர்ச்சியும் தராது போய், அது சரியென்று தோன்றலாம்.

அப்படி ஏதும் செய்யாமலே அதை ஏற்றுக்கொள்ள முடிந்தால் நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள், அதன் தற்போதைய நிஜங்களை எதிர்கொண்டு இயல்பாக கடந்து போகப் பழகியிருக்கிறீர்கள் என அறியலாம்.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.