எளிய சொற்களில் இதயத்தை ஈர்க்கும் கவிதைகளைத் தந்துவரும் யுகபாரதி, திரைப்பாடலாசிரியரும்கூட. ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள்மூலம் மக்களிடம் அறிமுகமும் பிரபலமுமான அவருடைய கட்டுரை நூல் இது. தனக்கு முன்னே இருந்த திரைப்பாடலாசிரியர்கள் பற்றிய விபரங்களையும் அவர்களுடைய சாதனைகளைப் பட்டியலிடும் இந்நூல், யுகபாரதியின் இருபதாண்டு கால உழைப்பு. பாடலைக் கேட்டுவிட்டு கடந்துசெல்லும் பலருக்கு அதை எழுதிய பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்தும் இந்நூல், பாடல்துறையில் ஆர்வமுள்ள அனைவரையும் கருதிற்கொண்டு எழுதப்பட்டுள்ளது. அச்சுப் பதிப்பில் பரவலான வரவேற்பைப் பெற்ற இந்நூல் மின்னூலாகவும் வருகிறது. யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
Nanri Yugabharathi! I've watched your speeches, interviews. As much as you're a creator, you're a great reader first of all. Inspires me to read more, thanks again!