அன்று அக்டோபர் 2, 1962. தென் ஆப்பிரிக்காவின் புகழ்மிக்க பிரிட்டோரியா நீதிமன்றம் பரபரப்பாக இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் போலீஸாரால் அங்கு அழைத்து வரப்படவிருக்கும் தங்களது தன்னிகரற்ற தலைவனைக் காண, பெரும் ஆரவாரத்துடன் நீதிமன்றத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே தன் இரண்டு சிறு பெண் குழந்தைகளோடு, வின்னி மண்டேலா! சைரன் அலறலுடன் விரைந்து வந்த போலீஸ் வாகனத்தில் இருந்து, யாரும் எதிர்பாராத வகையில் உடலில் புலித்தோலைப் போர்த்தியபவெள்ளை நீதிபதிகளும் வக்கீல்களும் அவரது இந்தத் தோற்றத்தைக் கண்டு சற்று மிரளத்தான் செய்தனர். மண்டேலா தனது வலக் கையை உயர்த்தி, கூட்டத்தை நோக்கி ‘அமெண்டா’ என்று முழக்கமிட, பதிலுக்குக் கூட்டமும் உற்சாகத்துடன் ‘அமெண்ட&
Ajayan Bala is a writer, film director and screenplay writer from Thirukalukundram, Tamilnadu, India. His book Ulaka cin̲imā varalār̲u : maun̲ayukam 1894-1929 was awarded as best book in the fine arts section by Tamil Nadu Government in 2007. He has written several fiction and non-fiction works in Tamil. He has written a history serial in the popular Tamil magazine Ananda Vikatan.
உலகம் இரண்டாக இருக்கிறது. ஒன்று, கறுப்பு... மற்றொன்று வெள்ளை, கறுப்பு, தீமையின் நிறமாகவும் வெள்ளை, நன்மையின் நிறமாகவுமென, காலங்காலமாக ஒரு தவறான எண்ணம் உலகம் முழுக்க மனித மனங்களில் புரையோடிக்கிடக்கிறது. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்,நாடு பிடிக்கும் வெறியில், கப்பல்களில் புறப்பட்ட ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்களின் திட்டமிட்ட சதியினால் விதைக்கப்பட்ட நஞ்சு இது! மக்களை மனரீதியாகவும் அடிமைப்படுத்த அவர்கள் உருவாக்கிய தந்திரங்கள்தான் எத்தனையெத்தனை! அவர்கள், கதைகளை உருவாக்கினர். அந்தக் கதைகளின் தேவதைகளுக்கு வெள்ளை ஆடைகளும், சாத்தான்களுக்குக் கறுப்பு ஆடைகளும் அணிவிக்கப்பட்டன. அவர்கள் செஸ், கேரம் என விளையாட்டுக்களைக் கண்டுபிடித்தனர். அந்த விளையாட்டுகளிலும் கறுப்பு மதிப்புக் குறைவான நிறமாகவே தீர்மானிக்கப்பட்டு, நம் மனதினுள் இயல்பாக இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது. அவர்கள், இறப்பு வீடுகளின் துக்கத்தை வெளிப்படுத்தக் கறுப்பு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தனர். மண வீடுகளுக்கு வெள்ளை நிறத்தை அடையாளப்படுத்தினர். இவ்வாறாக, அவர்கள் உருவாக்கிய புரை இன்னும் நம்மைவிட்டு விலகவில்லை. ஆனால், அவர்கள் உருவாக்கிய விதிகளில் ஒன்றுமட்டும் இன்று நிறம் மாறிஇருக்கிறது. அது சமாதானத்தின் நிறம். அவர்கள் வெள்ளையாக அதன் நிறத்தை உருவாக்கியிருந்தனர். ஆனால், அதன் நிறம் இன்று கறுப்பு. அவர் பகைவருக்கும் அருளிய நன்நெஞ்சர்... ‘நெல்சன் மண்டேலா’!