Jump to ratings and reviews
Rate this book

துறைமுகம்

Rate this book
ஒவ்வொரு வாழ்வும் அதற்கேற்ற விளைவுகள், அலைவுகளைக் கொண்டவை. கடலில் பேரலைகளெனில் குளத்தில் சிற்றலைகள். மகிழ்வோ அதற்கான எத்தனங்களோ அதனடியில் எப்போதும் கண்ணீர்ச் சுவடுகளுடன் பிணைந்துள்ளன. ஒளிரும் மகுடங்களின் மீதும் தூசு படிவதில்லையா? அவ்வாறு ஒளிர்ந்த காலத்தையும் அதன்மீது தூசுபடிந்த காலத்தையும் இதயத்தின் துடிப்போடு வடித்திருக்கிறார் தோப்பில். எவ்வளவோ பாதுகாப்பாய் நிறுவப்பட்ட துறைமுகத்தினுள்ளே அலைகள் புரள்வதை, அது ஒலிப்பதைப் படைப்பாக்கியதில் இந்நாவல் முன்னிற்கிறது.

A new novel by pioneer writer Thoppil Mohammed Meeran. Thuraimugam is the story around a harbour. It is told as if the waves are telling stories. Each of the lives that are built around the harbour are told in the language of a beating heart. A classic tale about tears behind joy and the dust below crowns.

367 pages, Kindle Edition

First published January 1, 1991

Loading...
Loading...

About the author

Thoppil Mohamed Meeran

15 books14 followers
Thoppil Mohamed Meeran was an Indian Nagercoil based author who wrote in Tamil.

Meeran was awarded the Highest Indian Government award for Literature, Sahitya Akademi Award in 1997 for his novel Saivu Narkali (The Reclining Chair). He also received the Tamil Nadu Kalai Ilakkiya Perumantam Award, the Ilakkiya Chintanai Award, and the T N Govt. Award. He published six novels and seven short story collection.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (47%)
4 stars
7 (41%)
3 stars
1 (5%)
2 stars
0 (0%)
1 star
1 (5%)
Displaying 1 - 3 of 3 reviews
58 reviews2 followers
August 4, 2018
துறைமுகம்

தோப்பில் முஹம்மது மீரான் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர். அவரின் ‘துறைமுகம்’ நாவலை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. முஹம்மது மீரானின் கடலோரத்து கிராமத்து வர்ணனைகள், நம்மை கடலை நோக்கி அழைத்துப் போகிறது. நாமும் கடலின் அருகே ஒரு குடிசையில் வாழ்வதைப் போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துவது, எழுத்தாளரின் வெற்றி. தோப்பில் முஹம்மது மீரான் குரானில் நன்கு தேர்ந்தவர் என்று அவரின் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர போராட்ட காலத்தில், இந்தியாவின் கடலோர கிராமத்தில் இஸ்லாமியர்களை எவ்வாறு வேண்டுமென்றே பின்தங்க வைத்துள்ளனர் என்பதை மிக அழகாக படமாக்கியுள்ளார். அதை எவ்வாறு கிராமத்தை சேர்ந்த காசிம் என்கிற இளைஞன் மேம்படுத்த எண்ணுகிறான் என்பதை விவரித்துள்ளார். வட்டார மொழி நடையை நாவல் முழுவதும் கையாண்டுள்ளதால், பல மலையாள, அராபிய வார்த்தைகளை பிரயோகம் செய்துள்ளதால், சில இடங்களில் படிப்பதற்கு கடினமாக உள்ளது. வட்டார வார்த்தைகளுக்கு அங்கங்கே அர்த்தம் வழங்கியபோதும், பின் இணைப்பாக, வார்த்தைகளின் அகராதியை சேர்த்திருந்தால், படிப்பதற்கு மிகவும் எளிதாக இருந்திருக்கும்.

தனது மதத்தை சேர்ந்தவன், தனது சாதியை சேர்ந்தவன் என்ற குருட்டு நம்பிக்கை எவ்வாறு ஒருவரை ஏமாற்றுகிறது. ஈனா பானா கூனா மாதிரி ஏமாற்றுக் கார முதலாளிகள் மதத்தின் பெயரால் எவ்வாறு ஒரு கிராமத்தையே தங்களின் கீழ் கொண்டுவருகின்றனர். ஐதுரோஸ் போன்ற நல்ல முஸ்லீம் முதலாளிகள் கூட, எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர்.

மீராசா, மீரான் பிள்ளை, காசீம் என பல்வேறு கதாபாத்திரங்களை உரையாடலில், மிக அழகாக கதையை நகர்த்துகிறார். படிப்பறிவு எவ்வளவு முக்கியம், கிராமத்து மக்கள் காந்தியை பற்றிக் கூட அறிமுகமில்லாமல் இருப்பதை, அவர்களின் அப்பாவித்தனத்தை மிக அருமையாக படம் பிடிக்கிறார்.

ஒரு இஸ்லாமியனாக இருந்துக் கொண்டு, அதன் முன்னோக்கு, பின்னோக்கு விஷயங்களை நேர்மையான முறையில் பதிவு செய்வதால், எழுத்தாளரின் மீது ஒரு மிகப் பெரிய மரியாதை நமக்கு ஏற்படுகிறது. எவ்வாறு ஆங்கிலம் படிப்பது, பள்ளிக் கூடத்திற்கு அனுப்பவது, தடுப்பூசி போட்டுக் கொள்வது கூட, மூட நம்பிக்கையால், ஒரு கிராமத்தில் விலக்கப் படுகிறது. இஸ்லாமிய அறிஞர்களின் மேல்நோக்கு சிந்தனையில் ஊறாமல், மதத்தை எவ்வாறு தவறாக ஊர்தலைவர் பயன்படுத்துகிறார் என்பதை விரிவாக விளக்குகிறார். இது இஸ்லாமிற்கு மட்டுமல்ல, மதமோ, சாதியோ வைத்து பிழைப்பு நடத்தும் ஒவ்வொரு அதிகார மையத்திற்கும் பொருந்தும். ஒவ்வொரு இஸ்லாமியரும், மேலும் ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய ஒரு நல்லதொரு புத்தகம்.

Profile Image for Yadhu Nandhan.
266 reviews
February 12, 2021
மீனவர் வாழ்வின் எதார்த்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இந்த படைப்பு. கல்வி இல்லாவிட்டால் இந்த சமூகம் எப்படியிருந்திருக்கும் என்பதை உணர்த்துகிறது, இதை உணரச் செய்ததையே இந்தப் புத்தகத்தின் வெற்றியெனக் கருதுகிறேன்.
Profile Image for TheRat.
1 review
July 9, 2026
A fragment from the epilogue:
மீரான்பிள்ளையின் கண்களிலிருந்து அவரை அறியாமலேயே குடுகடுவென விழிநீர் வழிந்தது. ஒரு நீண்ட வாழ்க்கையின் கடைசி அத்தியாயங்களை மனசில் புரட்டியபோது ஒழுகி இறங்கிய சுடு கண்ணீர். கதீஜாவை நிக்காஹ் செய்த வியாழன் அஸ்தமித்த வெள்ளி இரவு. அந்த மாதவ இரவில் கியாஸ் விளக்கின் ஸீ... ஸீ... என்ற இன்பமான தாள ஒலி. கழுத்தில் போட்டிருந்த பிச்சிப்பூ மாலையின் நேர்த்தியான வாசம். அந்த வாசனை லகரியில் கதீஜாவின் மாமிசத் துடிப்புள்ள கன்னத்தில் தடவியபோது நரம்புகளில் ஏற்பட்ட சிலிர்ப்பு. அவளுடைய சுருமா கண்களைக் கண்களால் துளைத்த போது அந்த உதடுகளில் வாசல் திறந்த சொர்க்கம். இதற்கெல்லாம் மௌன சாட்சிகளாக நின்றிருந்த இந்த வீடும் இதன் சுவர்களும் அன்றைய சிரிப்பொலிகளை எதிரொலிக்கச் செய்த சுவர்களும் தூண்களும் தட்டுப் பலகைகளும். காசீமைப் பிரசவித்த நாள். ராஹிலாவைப் பிரசவித்த நாள். அந்த நாட்களில் கதீஜாவின் இன்ப வேதனை நெளிச்சலுக்கு மறைவாக நின்ற அறைகள். குழந்தைகள் தவழ்ந்த நடுத்திண்ணை. மணித் தண்டை அணிவித்த குழந்தைக் கால்கள். தத்தித்தத்திக் கன்னி நடை பயின்ற நடுமுற்றம். காசீமையையும் ராஹிலாவையும் செல்லமாகத் தாலாலமாட்டி வளர்த்த நாட்கள். எத்தனை எத்தனை நினைவுகள். துக்கத்தின் இனிமையான நினைவுகள்.

Unsung heroes and their stories from the seashore. A heart wrenching must read.
Displaying 1 - 3 of 3 reviews