இவர்கள் மது அருந்துவதை தடை செய்கிறார்கள். மது அருந்தியவனை எதற்கும் சாட்சியாகவோ அல்லது உத்திரவாதம் அளிக்கவோ அனுமதிப்பதில்லை. மது அருந்துபவர்கள், சுய சிந்தனையில் இருக்கமாட்டார்கள் என்பதால் அதற்குத் தகுதியற்றவராக கருதப்படுகிறார்கள். அதைப் போலவே கடலுக்குள் பயணிக்கும் மாலுமிகள் எதற்கும் துணிந்தவர்களாக கருதப்படுவதால் இவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் சாட்சியங்கள் கூட நீதி மன்றத்தில் ஏற்கப்படுவதில்லை. ஆனால் பாலியல் குற்றங் களை இவர்கள் பாவமாக நினைப்பதேயில்லை.
From 1271, Marco Polo of Venice explored Asia to 1295; the only available Travels of Marco Polo accounted China to Europeans until the 1500s.
Marco Polo spun a tale of how people gave a life of sensual pleasure and a potion to make young Assassins to yearn for paradise, their reward for dying in action, before their secret missions.
Stories and various documents also alternatively point to his ancestry, originating in Korčula, Croatia.
People well knew this trader. He recorded his adventures in a published book. People lost the original copies of his works.
வெனிசிலிருந்து பயணித்து 13ம் நூற்றாண்டில் இந்திய தீபகற்பத்தின் அரபிக்கடலை ஒட்டிய துறைமுக நகரங்களை வந்தடைந்து, அந்நகரில் உலவிய போது தான் கண்டும் கேட்டும் அறிந்ததை பதிவு செய்திருக்கிறார் மார்க்கோபோலோ. சில பகுதிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் தங்களை மிக உயர்த்தி சொல்லப்பட்ட கற்பனை கதைகளால் நிரம்பியிருக்கின்றன.
ஆனாலும் தமிழ் மன்னர்களின் எளிமை (தரையே ஆசனம்) மற்றும் அவர்களின் அறத்துடனான சிறப்பான ஆட்சியைப் பற்றிய குறிப்பும், குஜராத்தின் கொள்ளைக்காரர்களைப் பற்றிய குறிப்பும் அதே கால கட்டத்தில் தென்னிந்தியாவில் கள்வர் பயம் அற்று இருந்ததும், அப்படியே அரிதாக கொள்ளை நடந்தாலும் அரசே அதற்கு இழப்பீடு வழங்குவதும் என நாம் வரலாற்று ரீதியாகவே சிறப்பு பெற்றிருப்பதற்கான சான்றுகளும் பெருமிதம் கொள்ள வைக்கும்.
அக்காலத்தில் கருப்புத் தோல் நிறமே உயர்வாகக் கருதப்பட்டது போன்ற ஆச்சரியமான தகவல்களும் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன!
மார்க்கோபோலோ வந்த காலத்தில் தமிழ்நாடு எப்படி இருந்தது என்று ஒரு சின்ன அறிமுகம் தான் இந்த புத்தகம். புத்தகம் படிக்கும் போதே அவர் கேட்டதை அப்படியே எழுதி இருக்கிறார் என்று தெரியும். மொழிபெயர்ப்பு நன்றாக அமைந்துள்ளது.