Jump to ratings and reviews
Rate this book

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்

Rate this book
இன்று கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் வீடு இருக்கும் தெருவரை நில வரைபடத்தில் வந்துவிட்டது. மின்சாரமோ, போக்குவரத்து வசதியோ இல்லாத 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் நிலவரைபடம் இருப்பதற்கான சாத்தியம் அறவே இல்லை. எனினும், அக்காலத்தில் வணிகம் நடைபெற்றிருக்கிறது. ரோமிலிருந்து முசிறி துறைமுகம் வரை வந்து வணிகம் செய்திருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் நில வரைபடத்தை பழந்தமிழ் இலக்கிய நூல்களில் காணப்படும் செய்திகளின் அடிப்படையில் இந்நூலாசிரியர் உருவாக்கியிருக்கிறார்.

'வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்தில்' உள்ள வேங்கடமலை, பழனிமலை, பறம்புமலை (பிரான்மலை), கொல்லி மலை, ஜவ்வாது மலை ஆகியவற்றைப் பற்றியும் அவற்றைச் சுற்றியுள்ள ஊர்கள் பற்றியும் சங்க இலக்கியத்தில் கிடைக்கும் செய்திகளின் அடிப்படையில் கண்டறிந்து, அவற்றுக்கான நில வரைபடங்களை உருவாக்கியுள்ளார். இவை தவிர, காவிரிப்பூம்பட்டினம், மருங்கூர் பட்டினம், உறையூர் கருவூர் (கரூர்), கொடுமணல், கூடல்நகர் (மதுரை), காஞ்சிபுரம் முதலிய ஊர்களையும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளின் நில வரைபடங்களையும் ஆசிரியர் உருவாக்கியுள்ளார்.


கொற்கை, தொண்டி, முசிறி போன்ற துறைமுகங்களின் நில வரைபடமும் உள்ளது. இலக்கியங்களில் இருந்து கிடைக்கும் செய்திகளின் அடிப்படையில் நில வரைபடங்களை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களையும் ஆராய்ந்துள்ளார். அரியலூர் மாவட்டம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்தது, பழனி மலை சங்ககாலத்தில் பொதினி மலை என்று குறிப்பிடப்பட்டது, வேளிர் நன்னனின் செங்கண்மா இன்று செங்கம் என்ற பெயரில் அழைக்கப்படுவது உள்ளிட்ட சுவையான வரலாற்றுத் தகவல்களும் இந்நூலில் நிரம்பியுள்ளன.


போற்றத் தக்க அரிய முயற்சி.

158 pages, Paperback

First published January 1, 2017

1 person is currently reading
3 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Balaji M.
220 reviews14 followers
September 20, 2020
2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நிலம்
******************************************

துல்லியமான கள மற்றும் பல்வேறு இலக்கியங்கள், பதிவுகளை ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல்.

உலக வரைபடங்கள் முதன்முதலில் எப்போது உருவானது(கிமு6) முதல் பல பெரு/சிறு நாடுகளை உள்ளடக்கிய தமிழ் நிலபரப்பு வரைபடங்கள் உருவானது வரை அனைத்து ஆய்வுத் தகவல்களையும் கொண்ட புத்தகம் இது. அதாவது கிரேக்க, உரோம வணிகர்கள் கடற்பரப்பை கடந்து தமிழ் நிலப்பரப்பிற்கு வந்து இறங்கிய துறைமுகங்களும், அதன் தடங்களையும் சேர்த்து தருவிக்கப்பட்ட புத்தகம்.

இலக்கிய பாடல்கள், அகழ்வராய்ச்சி முடிவுகளின் வழி தமிழரின் வரைபடத்தை நிறுவியிருக்கிறார், திரு சி.இளங்கோ.

இலக்கிய பாடல்களை பொறுத்தவரை தமிழரின் எல்லை, எப்போதும் வடக்கே வேங்கடம், அதற்கப்பால் வடுகர்கள் தேசம் என்றும்., அதுமுதல் தெற்கே குமரி வரை என்பதாகவே இருந்து வந்திருக்கிறது. அதில் சந்தேகம் ஏதுமில்லை. எப்படியென்றால்,
"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகம்"
என்பதை போன்று.

ஆனால், இடைப்பட்ட தீபகற்பத்தில் உள்ள பல்லவ/சேர/சோழ/பாண்டிய/மற்றும் சிறு/குறு தேசங்களின் ஊர்களை கண்டறிதலில்தான் ஆழ்ந்த ஆய்வு தேவைப்பட்டிருக்கிறது, நூலாசிரியருக்கு.

பின்வரும் இலக்கியங்களில் உள்ள பாடல்கள் அவரது ஆய்வுகளுக்கு உதவியிருக்கின்றன.
நற்றிணை, அகநானூறு, புறநானூறு, மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பதினென்கீழ்கணக்கு, பெரு/சிறு பாணாற்றுப்படை, சிலப்பதிகாரம் போன்றவை.

பாடல்களில் உள்ள பரிசல் பெறபோகும் புலவர்கள், வழிகேட்டல், வழியறிவித்தல் மற்றும் தலைவன்/தலைவி/மன்னன் கூற்று, இன்னபிற வர்ணனைகள் போன்றவற்றை கொண்டு, ஊகித்து வரைபடங்கள் இயற்றப்பட்டிருக்கிறது.

மனித நாகரிகம், குறிப்பாக தமிழரின் நாகரிகம், ஆற்றுப் படுகைகளை ஒட்டிதான் ஆரம்பத்திருக்கும் என்பதற்கு நமது இலக்கியங்களும், தொன்படிமங்களின் அகழ்வராய்ச்சி முடிவுகளுமே சாட்சி. இவைகளும் தமிழரின் நில வரைபடத்தை உருவாக்கியதில் உற்ற துணையாய் இருந்திருக்கின்றன.

மேலும் பல ஊர்களின்
சங்ககால பெயர்கள் இப்போதும் வழக்கத்தில் இருந்தாலும் புவியியல் மாற்றங்களால் அதாவது, மலைச்சரிவுகள், ஆற்று கழிமுகம் பகுதியில் மணல் மேடிட்டு புதிய நிலப்பரப்பு உருவாகுதல், அதன் மூலம் ஆற்றின் போக்கு மாறுபடுதல் என்கிற மாற்றங்களால், பாடல்களில் கூறப்பட்ட வர்ணணைகளை அவ்வூர்களுக்கு பொருத்தி பார்ப்பதில் சவால்கள் உள்ளதாகவே இருந்திருக்கிறது. உதாரணமாக, தொண்டி, முசிறி, போன்ற ஊர்கள் குட(அரபிக்)கடல் பகுதியில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வூர்களை நாம் தமிழகத்தின் உட்பகுதியிலும் கிழக்கு கடற்பகுதியிலும் காண்கிறோம்.

குண(வங்க)கடல் பகுதியில் கொற்கை, காவிரிபூம்பட்டினம் போன்ற துறைமுகங்கள், பாடல்களில் விவரித்த அளவிற்கு நிலப்பரப்பு இல்லாமல் இப்போது வெகுவாக சுருங்கிவிட்டதாகவே இருக்கிறது. காரணங்கள், கடல்சீற்றங்கள் மற்றும் கடல்கோள்கள்.

மேற்சொன்னபடி பர வரைபடங்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதனை கூர்ந்து கவனித்து,
அதுவரை படித்ததை படத்தடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது.

சங்ககால ஊர்/நகரங்களின் பெயர்கள் மருவுதல். ஒன்றுக்கும் மேற்பட்ட ஊர்களுக்கு ஒரே பெயர்கள். முன்னுக்கு பின் முரணான பாடற் தகவல்கள் அல்லது தவறாக விளக்கங்கொள்ளுதல் போன்ற சிக்கல்களை எதிர்கொண்ட இந்நூலாசரியருக்கு நமது வாழ்த்துகளும் நன்றிகளும். அற்புதமாக ஆய்வினை மேற்கொண்டு இத்தகவல்களை சேகரித்து தந்துள்ளார். மேலதிக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதையும் ஆங்காங்கே குறிப்பிடுகிறார்.

ஆய்வு நூல் என்பதால் சுவாரசியத்தை எதிர்பார்க்காமல், கற்றல் நோக்கில் வாசிக்க வேண்டிய நூல்.

Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.