சகலவிதமான சந்தேகப் பார்வைகளுடன்தான் முதலில் நான் ஜோதிடத்தை அணுகினேன். அதில் உண்மை இல்லை என்று தெரிந்திருந்தால் அப்போதே ஜோதிடத்தை விட்டு விலகிச் சென்றிருப்பேன். ஆனால் அணுகிய என்னை அது தன்னுள் ஈர்த்துக் கொண்டது. காரணம் அதில் உண்மை இருந்ததும் அதுவே உண்மையாக இருந்ததும் தான்.
நான் அறிந்த உண்மைகளை என் அனுபவங்களை எனக்குப் பின் வருபவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று இந்த நூல் வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறேன். என்னுடைய அனுபவங்களைப் படிப்பவர்கள் ஜோதிடத்துறையில் நூறு ஆண்டுகள் செலவு செய்ததை போன்ற ஓர் உணர்வைப் பெறலாம். ஒவ்வோர் அனுபவமும் படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் என நம்புகிறேன்.