தென் தமிழகம்: தனி மாநில கோரிக்கைமுன்னுரைசுதந்திரத்திற்குப் பின்பு காங்கிரஸ் கட்சியில் ஒருசாரார் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்றும் மறுசாரார் அப்படிப் பிரிக்கக் கூடாது என்றும் கூறினர். அம்பேத்கார் பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு இந்தியா சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப்படவேண்டும் என்றதோடு, 'ஒரே மொழி - பல மாநிலங்கள்' என்ற கோட்பாட்டை முன்வைத்தார். “மொழிவழி பிரிந்து நிற்பது தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது என்ற பாடத்தை வரலாறு நமக்குக் கற்றுத் தந்துள்ளது” -சர்தார் பட்டேல் ஆனால், இறுதியில் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிப்பது என்று முடிவானது. அம்பேத்கார் கோட்பாடு ஒருவேளை அன்று ஒப்புக்கொள்ளப்பட்ட