Jump to ratings and reviews
Rate this book

கு. அழகிரிசாமி கதைகள்

Rate this book
கு. அழகிரிசாமி (1923 - 1970) தம் குறுகிய வாழ்நாளில் தமிழ் இலக்கியவுலகில் அழியாத்தடம் பதித்தவர். உரைநடை கட்டுரை, சிறுகதை, கடிதம், மொழிபெயர்ப்பு, குழந்தை, இலக்கியம், நாடகம் போன்ற பல்வேறு துறைகளில் பயணித்திருந்தபோதும் சிறுகதைத் தளத்தில் அளப்பரிய பங்காற்றியவர். எளிய நடையில் புதிய களங்களைக் கொண்டு மனித உணர்வுகளை உள்ளபடியே படம்பிடித்துக் காட்டியவர்.

832 pages, Paperback

First published January 1, 2002

2 people are currently reading
30 people want to read

About the author

வாழ்க்கைச் சுருக்கம்

அழகிரிசாமி திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையில் இடைசெவல் என்னும் சிற்றூரில், குருசாமி-தாயம்மாள் ஆகியோருக்கு முதல் மகனாகப் பிறந்தார். பரம்பரையாக வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் அழகிரிசாமியின் குடும்பத்தார். ஆனால், வெளியே பேசும்போது தமிழில்தான் பேசுவார் அழகிரிசாமி.

வசதியின்மை காரணமாக அவரை நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடித்தார். அந்தச் சிற்றூரில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் என்ற "பெருமை' அவருக்கு உண்டு. பள்ளிப் படிப்பைவிட அவர் அனுபவத்தில் பெற்ற அறிவே அதிகம்.

’உறக்கம் கொள்ளுமா?’ என்ற இவரது முதல் சிறுகதை 1943-ஆம் ஆண்டு "ஆனந்த போதினி' மாத இதழில் பிரசுரமானது.

ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது. கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் இவர்தான். தமிழ் இலக்கியங்களுடன் மேல்நாட்டு இலக்கியங்களையும் படித்தார். பழைய பாடல்களுக்கு உரை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டார்.
இதழாசிரியராக

அரசுப் பணியில் சேரத் தேர்வு பெற்றதால், சார்பதிவாளர் அலுவலகத்தில் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்தில் எழுத்தர் உத்தியோகம் கிடைத்தது. ஆனால், நாள்தோறும் பத்திரங்களைப் பதிவது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்த எழுத்தர் உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படவில்லை. அதனால் சென்னைக்கு வந்து, முதல் கதையை வெளியிட்ட "ஆனந்த போதினி' பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.

"ஆனந்த போதினி', "பிரசண்ட விகடன்' ஆசிரியராக இருந்த மூத்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் அழகிரிசாமியின் எழுத்தாற்றலைப் புரிந்து கொண்டு, அவருக்கு உதவி ஆசிரியர் பணியைத் தந்தார்.

"பிரசண்ட விகடனி'ல் வெளிவந்த அவரது கதைகளை சமகால எழுத்தாளர்களான வல்லிக்கண்ணனும், புதுமைப்பித்தனும், தொ.மு.சி.ரகுநாதனும் பாராட்டினார்கள். பிரசண்ட விகடன் பத்திரிகை அலுவலகத்தை விட்டுவிட்டு "தமிழ்மணி' என்ற அரசியல் வார இதழில் சேர்ந்தார்.

"தமிழ்மணி' வார இதழில் அவர் சில காலம்தான் பணியாற்றினார். அதன் பிறகு வை.கோவிந்தன் வெளியிட்ட "சக்தி' மாத இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அதன் ஆசிரியராக இருந்தவர் தி. ஜ. ரங்கநாதன். கு.அழகிரிசாமியின் முற்போக்குச் சிந்தனையையும், ஆற்றலையும் கண்டுகொண்ட வை.கோவிந்தன், அழகிரிசாமிக்கு சக்தி இதழிலும் பதிப்பகத்திலும் இடமளித்து, எழுதுவதற்கு வாய்ப்பளித்தார்.

அழகிரிசாமியின் முயற்சியால் வெளியான கம்பராமாயணம், காவடிச் சிந்து ஆகிய பதிப்புகள் அவருடைய ஆராய்ச்சித் திறனையும் மொழியாக்க ஆற்றலையும் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தின.

"ராஜா வந்திருக்கிறார்' என்ற அவரது கதை இந்திய மொழிகளிலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதை.
மலேசியாவில் பணி

"சக்தி' இதழில் பணியாற்றிய பிறகு ஐந்தாண்டுகள் மலேசியா (1952-1957) சென்றார். அந்தக் காலம் அவர் வாழ்க்கையின் பெரும் திருப்புமுனை எனலாம். 1955-ஆம் ஆண்டு கு.அழகிரிசாமிக்கும், சீதாலட்சுமிக்கும் மலேசியாவில் திருமணம் நடைபெற்றது. மலேசிய வானொலியில் முக்கூடல் பள்ளு இசை நாடகத்துக்குப் பாடியவர்களில் ஒருவர் சீதாலட்சுமி.

மலேசியாவில் இருந்து மீண்டும் தமிழகம் வந்ததற்கு ”மலேசிய நாட்டில் தன்னுடைய இலக்கிய வாழ்க்கைக்கு உற்ற நண்பர்கள் இல்லை என்பதாலும், தமிழ் நாட்டு அன்பர்களை விட்டுப் பிரிந்திருக்க மனமில்லாததாலும் நான் மலேசியா நாட்டை விட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பினேன்” என்று அழகிரிசாமி காரணம் கூறினார். மேலும், "தமிழ்நேசன்' நாளிதழ் அலுவலகத்திலும் வெளியே அரசியல்வாதிகள் சிலரின் ஒத்துழையாமையும் அவருக்கு ஆசிரியர் பணியில் சோர்வை ஏற்படுத்தின[6].
மீண்டும் தமிழகத்தில்

1957-ஆம் ஆண்டு சென்னை திரும்பிய அவர், 1960-ஆம் ஆண்டு வரை காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பிறகு "நவசக்தி' நாளிதழில் 1965 வரை பணியில் இருந்தார். "நவசக்தி' இதழில் இருந்த காலத்தில்தான் அவர் "கவிச்சக்ரவர்த்தி' என்ற வரலாற்று நாடகத்தை எழுதினார். அந்த நாடகம் அவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

"நவசக்தி' நாளிதழ் பணியிலிருந்து விலகி, ஐந்தாண்டுகள் சுதந்திர எழுத்தாளராக இருந்தார். கடிதம் எழுதுவதை அவர் கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் எழுதிய கடிதங்களை கி.ராஜநாராயணன் தொகுத்து, "கு.அழகிரிசாமி கடிதங்கள்' என்ற நூல் வெளிவந்துள்ளது. கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

இறுதியாக "சோவியத் நாடு' ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். ஆனால், உடல்நிலை காரணமாக அவரால் முழுமையாக அந்தப் பணியில் தொடர முடியவில்லை.
படைப்புகள்
புதினங்கள்

டாக்டர் அனுராதா
தீராத விளையாட்டு
புது வீடு புது உலகம்

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (75%)
4 stars
1 (25%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Poyyamozhi.
15 reviews4 followers
November 7, 2022
Excellent Short stories collection of Ku.Alagirisami.

I strongly recommend this book for all those who are really interested in Ku.Alagirisami's literary works .
Profile Image for Anitha Ponraj.
277 reviews44 followers
September 27, 2023


புத்தகம் : அழகிரிசாமி கதைகள்
ஆசிரியர் : கு. அழகிரிசாமி
பக்கங்கள் : 148
பதிப்பகம் : சக்தி காரியாலயம் tamildigitallibrary.in

புத்தகம் தொடங்கும் முன்னரே கல்கி அவர்களின் முன்னுரையில் கதை எழுதுவதன் இலக்கணத்தை அவரின் வழக்கமான எதார்த்தமான நகைச்சுவை நடையில் விவரித்திருக்கிறார்.

" கதையில் கதையும் இருக்க வேண்டும். அதே சமயத்தில் அது கதையாகவும் தோன்றக் கூடாது"

என்ற கருத்தின் உண்மை சமீபத்தில் கதை எழுதத் தொடங்கியிருக்கும் எனக்கு நன்றாகவே புரிகிறது.

குழந்தைகளின் உள்ளன்பின் ஆழத்தைக் காட்டும் 'அன்பளிப்பு' .

திருமண உறவுக்குள் ஏற்படும் மனப்போராட்டைத்தை அழகாக விவரிக்கும் 'ஏமாற்றம்' .

குழந்தைகளுக்கிடையேயான போட்டிகளுக்குள்ளும் இருக்கும் வெள்ளந்தித்தனத்தை கூறும், என் கதையின் முதல் அத்தியாயத்தின் பெயராக மாறிய 'ராஜா வந்திருக்கிறார்'

அழகு என்ற சமூகத்தின் வரையரையால் வீட்டை விட்டு விரட்டப்படும் வாலிபனின் கதையான 'இரண்டு பெண்கள்'.

குணத்தை மறந்து ஒருவரின் வேலையால் மனிதரை எடைபோடும் 'இரண்டு ஆண்கள்'.

புத்திசாலித்தனமாக
'சாப்பிட்ட கடனை' வசூலிக்கும் காளியப்பன்.

பணத்தை கடன் வாங்கி நாமம் போடும் ' கல்யாணகிருஷ்ணன்'.

கூச்சங்கள் தாண்டி காதல் வெளிவரும் ' ஞாபகார்த்தம்'

இரக்ககுணத்தால் வாழ்க்கை தலைகீழாகிப்போன 'அழகம்மாள்'.

ராமனும் சீதையும் அயோத்தியிலிருந்து திருவையாற்றுக்கு பிரவேசிக்கும் 'திரிவேணி'.

பத்து கதைகளும் பத்து விதம், ஆனால் அனைத்திலும் யதார்த்தத்தின் நிழல்.

புத்தகத்தை வாசிக்கும் எண்ணமே இல்லாமல் ஏதோ நம் அருகில் நிகழும் நிகழ்ச்சிகளை கேட்கும் ஒரு உணர்வே வருகிறது. அத்தனை எதார்த்தம், அதே நேரத்தில் ஒவ்வொரு நிகழ்வினையும் வித்தியாசமான கண்ணோட்டதுடன் எழுதியிருக்கிறார் ஆசிரியர் அழகிரிசாமி அவர்கள்.
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.