வணக்கம் நண்பர்களே, நான் ரியா மூர்த்தி. மாந்த்ரீகன் எனும் இந்நாவல் இதுவரை நீங்கள் படித்திருந்த புராணக் காலக் கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனழேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன். கைக்கெட்டும் தொலைவில் முடி இருந்தும், அரசாட்சியின் மீது ஆசையில்லா இளவரசனாய் அவன். விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி மாயவாள் மூலமாக இரண்டாயிரம் வருடம் முந்தைய காலத்திற்கு தூக்கி எறியப்படுகிறாள். அவள் எதிர்பாராதவிதமாய் நாயகனின் கை சேர்கிறாள். அவன் யாளிக்காக மாந்த்ரீகபுரியான தன் பூர்வீக நிலத்திற்கு போவதும், அங்கு வாழும் மாந்தை குல மக்களின் பழக்க வழக்கĨ
வித்தியாசமான முயற்சி வரவேற்கத்தக்கது... பென்டசி (fantasy), சஸ்பென்ஸ் , மேஜிக் கதை பிரியர்களுக்கு பொருத்தமானது .... கற்பனை உலகை கண்முன் விரிய வைப்பதான காட்சியமைப்பு கதையின் சிறப்பு ... வாழ்த்துக்கள் 💐💐💐
அருமையான கதைக் களம். எதிர்பாரா திருப்பங்கள். அழகான காதல். பதைபதைக்க வைக்கும் சம்பவங்கள். நேரில் சென்று பார்க்க ஆவலைத் தூண்டும் மாந்திரீகபுரியின் அழகு..அனைத்தும் அற்புதம். புதுமையான முயற்சி.