தமிழ் - ஜப்பானிய ஆராய்ச்சி 1979 இல் தொடங்கியது. இந்த ஆராய்ச்சி இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது. பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள்தான் இந்த ஆராய்ச்சியைத் தொடங்கியவர் . முழுமையாகத் தம்மை இந்த ஆய்வில் ஈடுபடுத்திக் கொண்டு மேலும் மேலும் ஆய்வை விரிவு செய்திருக்கிறார் . இந்த ஆய்வு தொடர்பான நிகழ்வுகளையும் வளர்ச்சி நிலைகளையும் குறித்துவைத்து அவ்வப்போது எழுதியிருக்கிறேன் , பேசியிருக்கிறேன் . இந்த ஆய்வு பற்றிய எழுத்துரைகள் பல்வேறு சூழல்களில் இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் வெளிவந்திருக்கின்றன. ஆய்வரங்குகளில் தமிழ் - ஜப்பானிய ஆய்வுப்பற்றிப் பல ஆய்வுரைகள் படிக்கப்பட்டிருக்கின்றன: அறக்கட்டளைச் சொற்பொழிவுகளாகவும் நூல்களாகவும் வெளிவந்திருக்கின்ற