பூரணி ஆத்திரம் அடைக்கஅடைக்கத் தேம்பலோடு ஓடிவந்து அவள் அப்பாவின் காலடியில் விழுந்து கதறினாள். “எப்பா... ஏஞ் சாமீ... கோர மொளச்சி கொல்ல வெளையிலன்னு அவன் என்னைக் கொத்திப் புடுங்கறான், கொறடாப் போட்டு இழுக்கறாஞ் சாமீ... என்னைப் போட்டுக் கொல்றாஞ் சாமி..." பூரணியின் அம்மாவுக்குக் கண்கள் கலங்கின. அப்பா, கொஞ்சநேரம் சிலைபோல் அப்படியே நின்றார். தூரத்து முந்திரி மறைவில் என்ன சொல்வார்களோ என்கிற அச்சத்தில் உத்தண்டி நின்றிருந்தான். 'என்ன சத்தம்' என்பதாய் ஒன்றிரண்டு சனங்களும் முந்திரித்தொங்கலை விட்டு வெளியேவந்து பார்த்தார்கள். வெகுநேரம் கழித்து பூரணியின் அப்பா வாயைத் திறந்தார். வார்த்தைகள் கடுமையாகவும் தீர்மானமாகவும் வெளியே வந்து விழுந்தன.
From Wiki: கண்மணி குணசேகரன் (பிறப்பு: 1971) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் குணசேகரன். விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “நடுநாட்டுச் சொல்லகராதி” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.