பிரமிள் (ஏப்ரல் 20, 1939 - ஜனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு தோன்றிய ஒரு இலக்கிய மேதை. தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர்.புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் படைப்புகள் கவிதைத் தொகுதிகள்
கண்ணாடியுள்ளிருந்து கைப்பிடியளவு கடல் மேல்நோக்கிய பயணம் பிரமிள் கவிதைகள் சிறுகதை தொகுப்பு லங்காபுரி ராஜா பிரமிள் படைப்புகள் சிறுகதைகள் சில