Jump to ratings and reviews
Rate this book

பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்

Rate this book
பிறந்தது 1975ல், காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும், சென்னை பல்கலைக் கழகத்தில் திரைப்பாடல் ஆய்விற்காக முனைவர் பட்டமும் பெற்றவர். தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம், கிராமம் நகரம் மாநகரம், கண்பேசும்வார்த்தைகள், பாலகாண்டம், அ'னா ஆவன்னா, என்னைச் சந்திக்க கனவில் வராதே, அணிலாடும் முன்றில், வேடிக்கை பார்ப்பவன் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில்மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலயோலா கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், இந்திராகாந்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி விற்பவன் தொகுப்பிற்காக 1997ம் ஆண்டின் ஸ்டேட் பாங்க் விருது பெற்றுள்ளார் திரை இசை பாடல்களுக்காக இந்திய அரசின் தேசிய விருதினை இரண்டு முறை பெற்றிருக்கிறார், பிலிம் ஃபேர் விருதும், தமிழக அரசின் கலைமாமணி, சிறந்த பாடலாசிரியர் விருதுகளும் பெற்றுள்ளார்.

80 pages, Paperback

Published December 1, 2020

1 person is currently reading
66 people want to read

About the author

Na. Muthukumar

16 books324 followers
Nagarajan Muthukumar (12 July 1975 – 14 August 2016) was a Tamil poet, lyricist, and author. Best known for his Tamil language film songs, he received the most Filmfare Awards for Best Lyricist in Tamil and was a two-time recipient of the National Film Award for Best Lyrics for his works in Thanga Meenkal (2013) and Saivam (2014).

Muthukumar grew up in Kannikapuram village in Kancheepuram, India in a middle-class family. He has a brother Ramesh Kumar. At the age of six and a half, he lost his mother. At a young age, he acquired an interest in reading. He began his career working under Balu Mahendra for four years. He was later offered to write lyrics in the film Veera Nadai, directed by Seeman. He has been credited as a dialogue writer in a few films, including Kireedam (2007) and Vaaranam Aayiram (2008). His last movie as a lyricist is Sarvam Thaala Mayam with A.R. Rahman.

Na. Muthukumar was born at Kannikapuram, Kancheepuram on 12 July 1975. He did his graduation in Physics at Kancheepuram Pachaippa college. He pursued his master's degree in Tamil at Chennai Pachaippa college. With the aim of becoming a director, he joined as an assistant director to the legendary Balumahendra. His Poem 'Thoor' took him to great heights. On 14 June 2006, he married Jeevalakshmi in Vadapalani, Chennai.

Muthukumar, who had been suffering from jaundice for a long time, died on the morning of 14 August 2016, at his Chennai residence, of cardiac arrest. He is survived by his wife, son and daughter.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
14 (34%)
4 stars
13 (31%)
3 stars
12 (29%)
2 stars
2 (4%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Prasanna Kumar.
52 reviews8 followers
March 7, 2021
மேடை பேச்சுகளில் துவக்கத்தில் ஆன்றோர்கள், சான்றோர்கள் என பலர் பேசுகையில் "பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்" என்று ஒவ்வொரு மேடை பேச்சிலும் ஆரம்பித்தவர் தான் நா.முத்துக்குமார்.

பல பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்ற அவரது மேடை கவிதைகளின் தொகுப்பே இந்த புத்தகம்.

முதல் புத்தகத்தில் "பட்டாம்பூச்சியை விற்ற" இவர் இந்த புத்தகத்தில் தனது பேனாவை கூர்மை வாளாய் நினைத்து பலவற்றை கிழித்து எறிகிறார். இன்றைய இளைஞனின் கவிதையாய் பல சிக்கலான விஷயங்களின் வேர்களை பிடித்து கவிதையாய் வடித்திருக்கிறார்.

அரசியல், சினிமா, சமூகம் என பலவற்றை உண்மை கூசாமல் வெளிப்படுத்தும் இவர் கவிதைகள் அட இவர் இப்படியும் கூட கவிதை எழுதுவாரா என்று என்னை ஆச்சர்யப்படுத்தியது.

பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம் - நல்ல துவக்கம்
Profile Image for Anitha Ponraj.
275 reviews42 followers
January 3, 2024
'வானவில்
வானத்தில்
வில் '

போன்ற நா.மு வின் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த புத்தகம்.

அரசியல், சமூக அவலங்கள் , மரகதத் தீவில் நிகழும் அநீதிகள் என்று அனைத்தையும் தன் நடையில் நேர்மையாக கவிதையாக, தேவையான இடத்தில் கிண்டல் கலந்து எழுதியிருக்கிறார்.

கவிதைகளைக் காட்டிலும் தலைப்புகளும் ஒருவித தனிக்கவிதையாகத் தோன்றுகிறது.

ஆனால் ஏனோ இதற்கு முன் வாசித்த அவர் புத்தகங்கள் போல் இது மனதில் ஆழப் பதியவில்லை. அதன் காரணத்தையும் அவரே புத்தகத்தில் பின்னால் வரும் குறிப்பில் எழுதியுள்ளார்.

இருப்பினும் சில தடம் பதித்தச் செல்கின்றன.

'கிராமத்து விவசாயி நகரத்திற்கு வந்து
டிஷ் ஆண்ட்டெனாக்களைப் பார்த்ததும் இப்படிச் சொன்னான்;
"மாடி வீட்டு முட்டாள் மழை வரும்போது குடையை ஏன் திருப்பிப் போட்டிருக்கிறான்?':

என்ற வார்த்தைகள் கேபிள் டிவி ஆப்பரேட்டரின் மகளான நான் முதல் முதலாக அவற்றை பார்த்து வியந்த நாட்களை நினைவூட்டியது.

இந்தியா சிறுகுறிப்பு எதார்த்தம்.

'தமிழைத் தவிர மற்ற எல்லாமே வாழ்ந்து
கொண்டிருக்கும் தமிழ்நாடு!'

என்ற வரிகளில் உண்மை!

காக்கையையும் நிலாவையும் வர வேண்டாம் என்று சொல்லும் கவிதைகளில் ஏழ்மையின் வாசம்.

வழக்கமான அவரின் கிராமத்து வாசம் வீசும் சில கவிதைகளும், நான் ரசிக்கும் ஹைக்கூக்களும் அடங்கும்.

நல்ல புத்தகம் ஆனால் நா.மு வின் சிறந்த புத்தகம் இல்லை.
Profile Image for chakrapani .
6 reviews
April 13, 2024
என்னுடைய ஒன்று விட்ட மாமா திரு. குருநாதன் அவர்கள் பச்சையப்பன் தமிழ் துறையில் பேராசிரியராக பணியாற்ற போது நா . முத்துக்குமார் அவரிடம் படித்து உள்ளார்.

கவிஞர் வைரமுத்துவும் அவருடைய மாணவர் தான்.


நா . முத்துக்குமாரை செதுக்கியது பச்சையப்பன். அங்கே அவருடைய கேள்விகளுக்கு விடைகள் விடையங்களாக கிடைத்தன.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Sanjeev Duglas.
89 reviews3 followers
January 21, 2024
முத்துக்குமார் கல்லூரி காலங்களில் எழுதிய சிறு கவிதை தொகுப்பு.சில கவிதைகள் கவர்கின்றன.
Profile Image for Gayathri (books_and_lits).
105 reviews1 follower
January 25, 2025
பாடல்களை முக்கியமாக பாடல் வரிகளை ரசிக்க ஆரம்பித்தது முதல் சில பாடல்கள் கேட்ட மாத்திரத்தில் பிடித்து போகும்.நான் பதின்பருவங்களில் அது போல் கேட்டு,பிடித்து,ரசித்த முக்கால்வாசி பாடல்களை எழுதியது இந்த மனிதன் தான் என்று தெரிந்த மாத்திரத்தில் அதுவும் அவர் புத்தகங்கள் வேறு எழுதியுள்ளார் என அறிந்ததும் அவை அனைத்தையும் வாங்கி குவித்தாகி விட்டது.ஆனால்,வழக்கம் போல படிக்கவில்லை😅🙈(அணிலாடும் முன்றில் மட்டும் படித்தாகிவிட்டது)

Read more… https://www.instagram.com/p/DFQUWA7TS...

Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.